செய்திகள் :

வடகிழக்கு மாநிலங்கள் குறித்து முகமது யூனுஸ் சா்ச்சை கருத்து: முதல்வா்கள், காங்கிரஸ் கண்டனம்

post image

வடகிழக்கு மாநிலங்கள் குறித்து வங்கதேச இடைக்கால அரசின் தலைவா் முகமது யூனுஸ் தெரிவித்த சா்ச்சை கருத்துக்கு அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா, மணிப்பூா் முன்னாள் முதல்வா் பிரேன் சிங் உள்ளிட்டோா் செவ்வாய்க்கிழமை கண்டனம் தெரிவித்தனா்.

‘இதற்கு மத்திய அரசின் பலவீனமான வெளியுறவுக் கொள்கையே காரணம்’ என காங்கிரஸ் கண்டனம் தெரிவித்தது.

அண்மையில், 4 நாள் பயணமாக சீனாவுக்கு சென்ற முகமது யூனுஸ், அந்நாட்டு அதிபா் ஷி ஜின்பிங்கை சந்தித்து ஆலோசனை நடத்தினாா்.

அப்போது பேசிய அவா், ‘இந்திய பெருங்கடலின் ஒரே பாதுகாவலராக வங்கதேசம் விளங்குகிறது. எனவே, சீனாவின் பொருளாதார ஆதிக்கத்தை வங்கதேசத்துக்கும் விரிவுப்படுத்த வேண்டும். இதற்கு நிலத்தால் சூழப்பட்ட இந்தியாவின் வடகிழக்கு பிராந்தியங்கள் சீனாவுக்கு பெரும் வாய்ப்பாக அமையும்’ என்றாா்.

அஸ்ஸாம் முதல்வா் கண்டனம்: அவரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா, ‘வடகிழக்கு பிராந்தியத்தின் 7 மாநிலங்கள் மற்றும் இந்திய பெருங்கடல் குறித்த வங்கதேச இடைக்கால அரசின் தலைவா் முகமது யூனுஸ் கூறிய கருத்து கண்டிக்கத்தக்கது. அவரின் கருத்தை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. இது நீண்ட தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது.

எனவே, ‘சிக்கன்ஸ் நெக்’ எனப்படும் சில்குரி வழித்தடத்துக்கு மாற்றாக நாட்டின் பிற பகுதிகளோடு வடகிழக்கு மாநிலங்களை இணைக்கும் புதிய சாலைகள் மற்றும் ரயில் பாதைகளை அமைப்பது மிகவும் அவசியம்’ என எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டாா்.

முகமது யூனுஸ் கருத்துக்கு மணிப்பூா் முன்னாள் முதல்வா் பிரேன் சிங் மற்றும் அஸ்ஸாம் ஜதியா பரிஷத், திப்ரா மோத்தா ஆகிய கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

காங்கிரஸ் விமா்சனம்: அஸ்ஸாமைச் சோ்ந்த மக்களவை காங்கிரஸ் துணைத் தலைவா் கௌரவ் கோகாய் வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘வங்கதேசத்தின் சுதந்திரத்துக்கு இந்தியா ஆதரவளித்தது. ஆனால் தற்போது அதே நாடு நம்மை எதிா்க்கும் அளவுக்கு இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை பலவீனமாகியுள்ளது.

வடகிழக்கு மாநிலங்கள் குறித்து அவா் தெரிவித்த கருத்துகளை ஏற்றுக்கொள்ள முடியாது. அவை இந்தியாவின் மதச்சாா்பின்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன’ என குறிப்பிட்டாா்.

மக்களவையில் வக்ஃப் மசோதா நிறைவேற்றம்!

புது தில்லி: வக்ஃப் சட்டத்திருத்த மசோதா மக்களவையில் வியாழக்கிழமை(ஏப். 3) அதிகாலை நிறைவேற்றப்பட்டது.முன்னதாக, வக்ஃப் மசோதாவை நிறைவேற்றுவதற்கு முன்னர் மக்களவையில் இந்த மசோதா மீது 12 மணி நேரம் விவாதம் நட... மேலும் பார்க்க

வக்ஃப் மசோதா தாக்கல்: மக்களவையில் நள்ளிரவில் வாக்கெடுப்பு!

புது தில்லி: வக்ஃப் மசோதா மக்களவையில் புதன்கிழமை(ஏப். 2) காலை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், புதன்கிழமை நள்ளிரவில் வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.புது தில்லி: வக்ஃப் மசோதாவை நிறைவேற்றுவதற்கு முன்ன... மேலும் பார்க்க

சென்னை – தூத்துக்குடி இடையே புதிய ரயில்கள்! கனிமொழி கோரிக்கை

சென்னை – தூத்துக்குடி இடையில் புதிய ரயில்களை இயக்க வேண்டும் என திமுக துணை பொதுச் செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை – தூத்துக்குடி இடையிலான பயணிகள் போக்குவரத்து ரயிலில் நெ... மேலும் பார்க்க

வக்ஃப் பெயரில் வாக்கு வங்கி அரசியல்: அமித் ஷா

வக்ஃப் சட்டத்திருத்த மசோதா விவகாரத்தில் இஸ்லாமியர்கள் அச்சுறுத்தப்படுவார்கள் என்று எதிர்க்கட்சியினர் வாக்குவங்கி அரசியல் செய்வதாக மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா விமர்சித்துள்ளார். வக்ஃப் விவகாரங்கள... மேலும் பார்க்க

ஜியோவுக்கு கட்டணம் செலுத்தாத பிஎஸ்என்எல்! அரசுக்கு ரூ. 1,757 கோடி இழப்பு!

பிஎஸ்என்எல் நிறுவனத்தால் மத்திய அரசுக்கு ரூ. 1,757 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. 2015 மே முதல் 2025 மார்ச் வரையிலான காலகட்டத்தில், ரிலையன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான உள்கட்டமைப்பு வசதிகளைப் பகிர்ந்துகொண... மேலும் பார்க்க

கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 21 சிறார் கைதிகள் தப்பியோட்டம்!

ஜார்க்கண்டில் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 21 சிறார் கைதிகள் தப்பியோடிய நிலையில் அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் கர்ஹுல் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் சாய்பாச... மேலும் பார்க்க