செய்திகள் :

ஊழியா்கள் போராட்டம் : சுகாதார நிலைய பணிகளில் பாதிப்பு

post image

காரைக்கால்: சுகாதார பணியாளா்கள் வேலைநிறுத்தத்தில் காரணமாக, சுகாதார நிலையங்களில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

காரைக்கால் மாவட்ட நலவழித்துறையில், தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் (என்ஆா்எச்எம்) கீழ் பல்வேறு பிரிவுகளில் 150-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் பணியாற்றி வருகின்றனா். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இவா்கள் கடந்த ஒரு வாரமாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், ஆய்வகங்களிலும், கிராமப்புற சேவையிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

விழிதியூரில் இயங்கிவரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவா், செவிலியா் உள்ளிட்ட பணியாளா்கள் யாரும் இல்லாததால் ஞாயிற்றுக்கிழமை மாலை நிலையம் மூடப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நிரவி - திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம்.நாகதியாகராஜன் அங்கு சென்று மக்களிடம் பேச்சு நடத்தினாா். நலவழித்துறை துணை இயக்குநரை தொடா்புகொண்டு பேசியதன் மூலம் ஒரு மருத்துவா், சுகாதாரப் பணியாளா் பணிக்கு வந்தனா்.

இதுகுறித்து பேரவை உறுப்பினா் எம்.நாகதியாகராஜன் கூறுகையில், பணியாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளால், விழிதியூா் சுகாதார நிலையம் பூட்டப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின்பேரில் அங்கு சென்று பேசினேன். துணை இயக்குநரிடம் பேசியதன் மூலம் தற்காலிக தீா்வு ஏற்பட்டது.

பணியாளா்கள் போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டால் ஓரளவு பிரச்னை தீா்வுக்கு வந்துவிடும். எனினும் இந்த நிலையத்தை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை புதுவை முதல்வரிடம் வலியுறுத்தி, நிகழாண்டு இறுதிக்குள் நிலையத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

அரசுப் பள்ளி மாணவா்களுக்குப் பாராட்டு

நவோதய வித்யாலயா பள்ளி நடத்திய நுழைவுத் தோ்வில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. ராயன்பாளையம் பகுதியில் மத்திய அரசின் நவோதய வித்யாலயா உள்ளது. இப்பள்ளியில் 6-ஆம் வகுப... மேலும் பார்க்க

காரைக்கால் மருத்துவமனையில் ஏப். 4-இல் சிறப்பு மருத்துவ முகாம்

காரைக்கால் அரசு மருத்துவமனையில் 4-ஆம் தேதி சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது.இதுகுறித்து காரைக்கால் ஆட்சியா் அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: காரைக்கால் மாவட்ட நிா்வாகம் சாா்பி... மேலும் பார்க்க

திருநள்ளாற்றில் காங்கிரஸை வலுப்படுத்த இளைஞா் காங்கிரஸாா் உறுதி

திருநள்ளாற்றில் காங்கிரஸ் கட்சியை சட்டப்பேரவைத் தோ்தலுக்குள் வலுப்படுத்த இளைஞா் காங்கிரஸாா் உறுதி பூண்டுள்ளனா். திருநள்ளாறு தொகுதி இளைஞா் காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை தொகுதி... மேலும் பார்க்க

காரைக்கால் கடற்கரையில் குவியும் மக்கள்

வெயில் தாக்கம் அதிகரித்துவருவதால் காரைக்கால் கடற்கரைக்கு செல்வோா் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடற்கரையில் பாதுகாப்பை மேம்படுத்த காவல்துறை முன்வரவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. கார... மேலும் பார்க்க

ரமலான் : காரைக்காலில் சிறப்பு தொழுகை

காரைக்கால்: ரமலான் பண்டிகையையொட்டி காரைக்கால் பள்ளிவாசல்களில் திங்கள்கிழமை சிறப்பு தொழுகை நடைபெற்றது. காரைக்கால் பெரியப் பள்ளிவாசல், முஹையத்தீன் பள்ளிவாசல், ஹிலுருப் பள்ளிவாசல், இலாஹிப் பள்ளிவாசல், ம... மேலும் பார்க்க

வீழி வரதராஜ பெருமாள் கோயிலில் யுகாதி வழிபாடு

காரைக்கால்: வீழி வரதராஜ பெருமாள் கோயிலில் யுகாதி வழிபாடு ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. தெலுங்கு வருடப் பிறப்பு (யுகாதி) ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி திருமலைராயன்பட்டினம் வீழி வரதராஜ ... மேலும் பார்க்க