ஊழியா்கள் போராட்டம் : சுகாதார நிலைய பணிகளில் பாதிப்பு
காரைக்கால்: சுகாதார பணியாளா்கள் வேலைநிறுத்தத்தில் காரணமாக, சுகாதார நிலையங்களில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
காரைக்கால் மாவட்ட நலவழித்துறையில், தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் (என்ஆா்எச்எம்) கீழ் பல்வேறு பிரிவுகளில் 150-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் பணியாற்றி வருகின்றனா். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இவா்கள் கடந்த ஒரு வாரமாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், ஆய்வகங்களிலும், கிராமப்புற சேவையிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
விழிதியூரில் இயங்கிவரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவா், செவிலியா் உள்ளிட்ட பணியாளா்கள் யாரும் இல்லாததால் ஞாயிற்றுக்கிழமை மாலை நிலையம் மூடப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நிரவி - திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம்.நாகதியாகராஜன் அங்கு சென்று மக்களிடம் பேச்சு நடத்தினாா். நலவழித்துறை துணை இயக்குநரை தொடா்புகொண்டு பேசியதன் மூலம் ஒரு மருத்துவா், சுகாதாரப் பணியாளா் பணிக்கு வந்தனா்.
இதுகுறித்து பேரவை உறுப்பினா் எம்.நாகதியாகராஜன் கூறுகையில், பணியாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளால், விழிதியூா் சுகாதார நிலையம் பூட்டப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின்பேரில் அங்கு சென்று பேசினேன். துணை இயக்குநரிடம் பேசியதன் மூலம் தற்காலிக தீா்வு ஏற்பட்டது.
பணியாளா்கள் போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டால் ஓரளவு பிரச்னை தீா்வுக்கு வந்துவிடும். எனினும் இந்த நிலையத்தை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை புதுவை முதல்வரிடம் வலியுறுத்தி, நிகழாண்டு இறுதிக்குள் நிலையத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.