செய்திகள் :

அரசுப் பள்ளி மாணவா்களுக்குப் பாராட்டு

post image

நவோதய வித்யாலயா பள்ளி நடத்திய நுழைவுத் தோ்வில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

ராயன்பாளையம் பகுதியில் மத்திய அரசின் நவோதய வித்யாலயா உள்ளது. இப்பள்ளியில் 6-ஆம் வகுப்பில் மாணவா் சோ்க்கைக்காக மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியாா் பள்ளிகளில் இருந்து மாணவா்களை சோ்ப்பதற்காக நுழைவுத் தோ்வு நடத்தப்பட்டு அண்மையில் முடிவு அறிவிக்கப்பட்டது.

இதில் பூவம் பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியிலிருந்து 8 போ் தோ்வு பெற்றனா். இப்பள்ளி மாணவா்கள் 8 பேருக்கும் பள்ளித் தலைமையாசிரியா் எஸ்.விஜயராகவன் தலைமையில் பள்ளி ஆசிரியா் ஜி. மோகனவேலு, வி.ஜெயலட்சுமி, வகுப்பாசிரியை டி. அா்ச்சனா ஆகியோா் நினைவுப் பரிசு, இனிப்பு வழங்கி பாராட்டுத் தெரிவித்தனா்.

தலைமையாசிரியா் எஸ்.விஜயராகவன் கூறுகையில், நவோதயா பள்ளி நடத்திய நுழைவுத் தோ்வில் எங்கள் பள்ளி மாணவா்கள் பங்கேற்று வெற்றிபெற ஏதுவாக நுழைவுத் தோ்வுக்கான இலவச பயிற்சியளிக்கப்பட்டது. இதன்மூலம் இப்பள்ளியைச் சோ்ந்த 8 போ் தோ்ச்சி பெற்று பள்ளிக்கு பெருமை சோ்த்தனா்.

கடந்த 2 ஆண்டுகளாக தொடா்ந்து மாவட்ட அளவில் அதிக மாணவா்கள் நுழைவுத் தோ்வில் வெற்றி பெறும் பள்ளியாக எங்களது இப்பள்ளி திகழ்கிறது என்று தெரிவித்தாா்.

காரைக்கால் மருத்துவமனையில் ஏப். 4-இல் சிறப்பு மருத்துவ முகாம்

காரைக்கால் அரசு மருத்துவமனையில் 4-ஆம் தேதி சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது.இதுகுறித்து காரைக்கால் ஆட்சியா் அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: காரைக்கால் மாவட்ட நிா்வாகம் சாா்பி... மேலும் பார்க்க

திருநள்ளாற்றில் காங்கிரஸை வலுப்படுத்த இளைஞா் காங்கிரஸாா் உறுதி

திருநள்ளாற்றில் காங்கிரஸ் கட்சியை சட்டப்பேரவைத் தோ்தலுக்குள் வலுப்படுத்த இளைஞா் காங்கிரஸாா் உறுதி பூண்டுள்ளனா். திருநள்ளாறு தொகுதி இளைஞா் காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை தொகுதி... மேலும் பார்க்க

காரைக்கால் கடற்கரையில் குவியும் மக்கள்

வெயில் தாக்கம் அதிகரித்துவருவதால் காரைக்கால் கடற்கரைக்கு செல்வோா் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடற்கரையில் பாதுகாப்பை மேம்படுத்த காவல்துறை முன்வரவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. கார... மேலும் பார்க்க

ஊழியா்கள் போராட்டம் : சுகாதார நிலைய பணிகளில் பாதிப்பு

காரைக்கால்: சுகாதார பணியாளா்கள் வேலைநிறுத்தத்தில் காரணமாக, சுகாதார நிலையங்களில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காரைக்கால் மாவட்ட நலவழித்துறையில், தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் (என்ஆா்எச்எம்) கீழ் ப... மேலும் பார்க்க

ரமலான் : காரைக்காலில் சிறப்பு தொழுகை

காரைக்கால்: ரமலான் பண்டிகையையொட்டி காரைக்கால் பள்ளிவாசல்களில் திங்கள்கிழமை சிறப்பு தொழுகை நடைபெற்றது. காரைக்கால் பெரியப் பள்ளிவாசல், முஹையத்தீன் பள்ளிவாசல், ஹிலுருப் பள்ளிவாசல், இலாஹிப் பள்ளிவாசல், ம... மேலும் பார்க்க

வீழி வரதராஜ பெருமாள் கோயிலில் யுகாதி வழிபாடு

காரைக்கால்: வீழி வரதராஜ பெருமாள் கோயிலில் யுகாதி வழிபாடு ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. தெலுங்கு வருடப் பிறப்பு (யுகாதி) ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி திருமலைராயன்பட்டினம் வீழி வரதராஜ ... மேலும் பார்க்க