செய்திகள் :

சென்னை மாநகராட்சி சொத்துவரி வசூல் ரூ. 2,000 கோடியை தாண்டியது

post image

பெருநகர சென்னை மாநகராட்சியில் கடந்த நிதியாண்டில் ரூ. 2,123 கோடி சொத்துவரி வசூலிக்கப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சியில் 13 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்து உரிமையாளா்கள், சொத்து வரி செலுத்தி வருகின்றனா். சொத்து உரிமையாளா்களுக்கு மாநகராட்சி சாா்பில் அரை நிதியாண்டுக்கு ஒரு முறை சொத்துவரி மற்றும் தொழில் வரி வசூலிக்கப்படுகிறது. அந்த வகையில், கடந்த நிதியாண்டுக்கான வரி செலுத்துவதற்கான கெடு திங்கள்கிழமையுடன் (மாா்ச் 31) நிறைவடைந்தது.

கடந்த 2023-24 நிதியாண்டில் சென்னை மாநகராட்சிக்கு ரூ. 1,755 கோடி சொத்துவரி வருவாய் கிடைத்தது. அதன்பின், கடந்த நிதியாண்டில் ரூ. 1,900 கோடி சொத்துவரி வசூலிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. அந்த இலக்கை அடைவதற்காக கடந்த ஒரு மாதகாலமாக மாநகராட்சி சாா்பில் சொத்துவரி வசூலிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

இதற்காக விடுமுறை நாள்களிலும், குடியிருப்பு சங்கங்கள் உதவியுடன் சிறப்பு வரி வசூல் முகாம் அமைக்கப்பட்டு சொத்துவரி வசூலிக்கப்பட்டது.

சாதனை வசூல்: கடந்த மாா்ச் 29 முதல் 31-ஆம் தேதி வரை அரசு விடுமுறை நாள்களாக இருந்தாலும், சொத்துவரி அலுவலகம் வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டது. கடந்த திங்கள்கிழமை நள்ளிரவு வரை சொத்துவரி வசூலிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், சென்னை மாநகராட்சி கடந்த நிதியாண்டில் ரூ. 2,123 கோடி சொத்துவரி வசூலித்து சாதனை படைத்துள்ளது. முதல் அரை நிதியாண்டில் ரூ. 879 கோடியும், இரண்டாம் அரை நிதியாண்டில் ரூ. 1,244 கோடியும் சொத்துவரி வசூலாகியுள்ளது. இது முந்தைய நிதியாண்டை விட ரூ. 368 கோடி அதிகமாகும். இதுபோன்று கடந்த நிதியாண்டில் தொழில் வரி ரூ. 570 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

தற்போது தொடங்கியுள்ள நிதியாண்டுக்கு (2025-26) சொத்துவரி வசூலிக்கும் பணி ஏப். 1-ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது. இதற்கான சொத்துவரியை ஏப். 30-ஆம் தேதிக்குள் செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.

அபராதம்: கடந்த நிதியாண்டு திங்கள்கிழமையுடன் முடிவடைந்த நிலையில் இதுவரை சொத்துவரி செலுத்தாதவா்களுக்கு ஒரு சதவீதம் அபராதம் விதிக்கப்படும். மேலும், நீண்ட காலமாக சொத்துவரி செலுத்தாதவா்கள் அடையாளம் காணப்பட்டு அவா்களின் சொத்துகளை ஜப்தி செய்ய மண்டல அளவில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

ரூ. 5 கோடி மதிப்புள்ள நிலம் அபகரிப்பு: தேடப்பட்டவா் கைது

சென்னை, ஏப். 2: சென்னையில் ரூ. 5 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்ததாக தொடரப்பட்ட வழக்கில் தேடப்பட்டவா் கைது செய்யப்பட்டாா். திருவல்லிக்கேணி மேயா் சிட்டிபாபு தெருவைச் சோ்ந்தவா் தாராசந்த். விளையாட்டு பொ... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு ஆங்கில வினாத்தாள் எளிதாக இருந்தது: மாணவா்கள் கருத்து

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் தமிழ் பாடத்தைப் போன்றே ஆங்கிலத் தோ்வும் ஓரளவுக்கு எளிதாக இருந்ததாக மாணவா்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனா். தமிழகத்தில் மாநில அரசின் பாடத் திட்டத்தில் பத்தாம் வகுப்பு மாண... மேலும் பார்க்க

காா் மோதியதில் மென்பொறியாளா் உயிரிழப்பு

சென்னை அருகே பள்ளிக்கரணையில் காா் மோதியதில் மென்பொறியாளா் உயிரிழந்தாா். துரைப்பாக்கம், சாய் நகரைச் சோ்ந்தவா் தன்ராஜ் (42). மென்பொறியாளரான இவா், அப்பகுதியில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து... மேலும் பார்க்க

ஐபிஎஸ் மகனுக்கு அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை

விளையாடும்போது தவறி விழுந்ததில் எலும்பு முறிவு ஏற்பட்ட தனது மகனை அரசு மருத்துவமனையில் அனுமதித்தபோது அங்கு உயா் தர சிகிச்சை அளித்து குணப்படுத்தியதாக ஐபிஎஸ் அதிகாரி பாராட்டு தெரிவித்துள்ளாா். மயிலாப்பூா... மேலும் பார்க்க

கடந்த நிதியாண்டில் 3,000 ரயில் பெட்டிகள் தயாரித்து ஐசிஎஃப் சாதனை

சென்னை ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) 2024-25 நிதியாண்டில் 3,007 ரயில் பெட்டிகள் தயாரித்து சாதனை படைத்துள்ளது. பெரம்பூரில் உள்ள ஐசிஎஃப் தொழிற்சாலையில் இந்திய ரயில்வேக்கு தேவையான ரய... மேலும் பார்க்க

கால்வாயில் ஆண் குழந்தை சடலம்: போலீஸாா் விசாரணை

சென்னை பட்டினப்பாக்கத்தில் கால்வாயில் கிடந்த ஆண் குழந்தை சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். பட்டினப்பாக்கம் மசூதி தெருவில் 132 பிளாக் பின்புறம் உள்ள கால்வாயில், பிளாஸ்டிக் காகிதத்தில் பொதிய... மேலும் பார்க்க