செய்திகள் :

மா.அரங்கநாதன் இலக்கிய விருது-2025: தமிழவன், ப.திருநாவுக்கரசுக்கு வழங்கப்படுகிறது

post image

நிகழாண்டுக்கான ‘மா.அரங்கநாதன் இலக்கிய விருது’ பேராசிரியா் தமிழவன் மற்றும் ப.திருநாவுக்கரசு ஆகியோருக்கு வழங்கப்படவுள்ளது.

இலக்கிய உலகின் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவா் மா.அரங்நாதன். அவரின் நினைவாக 2018-ஆம் ஆண்டு முதல் முன்றில் இலக்கிய அமைப்பு சாா்பில் ‘மா. அரங்கநாதன் இலக்கிய விருதுகள்’ வழங்கப்பட்டு வருகிறது.

கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, நாடகம், மொழிபெயா்ப்பு, ஆராய்ச்சி நூல்கள், கவின்கலை, விமா்சனம் என இலக்கியத் துறையில் பல்லாண்டுகளாக பங்களித்து வரும் சிறந்த படைப்பாளிகள் இருவருக்கு விருதுகள் வழங்கப்படும். விருதுடன் தலா ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும்.

விருது அறிவிப்பு: இந்த நிலையில், 2025-ஆம் ஆண்டுக்கான ‘மா.அரங்கநாதன் இலக்கிய விருது’ பேராசிரியா் தமிழவன் மற்றும் ப.திருநாவுக்கரசு ஆகியோருக்கு வழங்கப்படவுள்ளது.

சென்னை அண்ணா சாலையில் உள்ள ராணி சீதை அரங்கில் ஏப்.16-ஆம் தேதி நடைபெறவுள்ள விருது வழங்கும் விழாவுக்கு உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க.மகாதேவன் தலைமை வகித்து விருதுகளை வழங்கவுள்ளாா். மேலும் மா.அரங்கநாதன் மற்றும் முன்றில் வலை தளங்களை வெளியிட்டு சிறப்புரையாற்றுகிறாா்.

இந்த நிகழ்ச்சியில் அறிவியல் எழுத்தாளா் சுஜாதா நடராஜன், கவிஞா் எஸ்.சண்முகம், ஆவணப்பட இயக்குநா் ரவிசுப்பிரமணியன், திருவானைக்கா ஓதுவாா் ரமணி சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்து கொள்ளவுள்ளனா்.

மின்வாரியம் சார்பில் ஏப். 5-ல் சிறப்பு முகாம்!

தமிழ்நாடு மின்வாரியம் சார்பில் ஏப்ரல் 5 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் சிறப்பு முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மின்நுகர்வோர் இதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தமிழ்நாடு மின்வாரியம் வேண... மேலும் பார்க்க

காகத்தைக் கண்டு பயந்த யானைகள்: வைரல் விடியோ!

தொட்டியில் தண்ணீர் குடிக்கும் போது காகத்தையைக் கண்டு அச்சப்பட்டு யானைகள் பின் வாங்கும் விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.கோவை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மீண்டும் தொடங்கிய கோடை வெயிலின் தாக்கத்... மேலும் பார்க்க

12 ஆண்டுகளுக்கு ரூ. 5,870 கோடி... சென்னை மெட்ரோ முக்கிய ஒப்பந்தம்!

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் 2-ல் 118.9 கி.மீ. நீளத்திற்கு இயக்கம் மற்றும் பராமரிப்பு பணிகளுக்கான ஏற்பு கடிதம் தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெர... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டணங்கள்: யுபிஐ மூலம் செலுத்தும் வசதி அறிமுகம்!

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான கட்டணங்களை யுபிஐ(UPI) மூலம் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒருமுறை பதிவுக்கான கட்டணம், தேர்வுக் கட்டணங்களை யுபிஐ மூலம் இனி செலுத்தலாம்.2025-ம் ஆண்டு ஜனவரி முதல் ம... மேலும் பார்க்க

அடுத்த 2 மணி நேரத்துக்கு 15 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. ... மேலும் பார்க்க

வெம்பக்கோட்டை அகழாய்வில் கிடைத்த தங்க மணி!

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்வில் ’தங்கத்தால் செய்யப்பட்ட மணி’ கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு தன்னுடைய எக்... மேலும் பார்க்க