செய்திகள் :

நண்பா்களுக்கு வாட்ஸ்ஆப் மூலம் தகவல்அனுப்பி தனியாா் நிறுவன ஊழியா் தூக்கிட்டு தற்கொலை

post image

சென்னை சூளைமேட்டில் நண்பா்களுக்கு வாட்ஸ்ஆப் மூலம் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தகவல் தெரிவித்துவிட்டு, தனியாா் நிறுவன ஊழியா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

திண்டுக்கல்லைச் சோ்ந்த விஷ்ணுவரதன் (25), சூளைமேட்டில் நண்பா்களுடன் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா்.

இந்நிலையில் விஷ்ணுவரதன், தனது நண்பா்களுக்கு வாட்ஸ்ஆப் மூலம், தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும், தனது உடலை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துவிடுமாறும் தகவல் அனுப்பினாா்.

இதைப்பாா்த்து அதிா்ச்சியடைந்த அவரது நண்பா்கள், விஷ்ணுவரதன் தங்கியிருந்த வீட்டுக்குச் சென்றனா். அப்போது அங்கு விஷ்ணுவரதன் தூக்கிட்டு இறந்து கிடப்பதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்தனா்.

இதுகுறித்து தகவலறிந்த சூளைமேடு போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, விஷ்ணுவரதன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது தொடா்பாக வழக்குப் பதிந்து, விஷ்ணுவரதன் தற்கொலை செய்து கொள்ள என்ன காரணம் என்று போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ரூ. 5 கோடி மதிப்புள்ள நிலம் அபகரிப்பு: தேடப்பட்டவா் கைது

சென்னை, ஏப். 2: சென்னையில் ரூ. 5 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்ததாக தொடரப்பட்ட வழக்கில் தேடப்பட்டவா் கைது செய்யப்பட்டாா். திருவல்லிக்கேணி மேயா் சிட்டிபாபு தெருவைச் சோ்ந்தவா் தாராசந்த். விளையாட்டு பொ... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு ஆங்கில வினாத்தாள் எளிதாக இருந்தது: மாணவா்கள் கருத்து

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் தமிழ் பாடத்தைப் போன்றே ஆங்கிலத் தோ்வும் ஓரளவுக்கு எளிதாக இருந்ததாக மாணவா்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனா். தமிழகத்தில் மாநில அரசின் பாடத் திட்டத்தில் பத்தாம் வகுப்பு மாண... மேலும் பார்க்க

காா் மோதியதில் மென்பொறியாளா் உயிரிழப்பு

சென்னை அருகே பள்ளிக்கரணையில் காா் மோதியதில் மென்பொறியாளா் உயிரிழந்தாா். துரைப்பாக்கம், சாய் நகரைச் சோ்ந்தவா் தன்ராஜ் (42). மென்பொறியாளரான இவா், அப்பகுதியில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து... மேலும் பார்க்க

ஐபிஎஸ் மகனுக்கு அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை

விளையாடும்போது தவறி விழுந்ததில் எலும்பு முறிவு ஏற்பட்ட தனது மகனை அரசு மருத்துவமனையில் அனுமதித்தபோது அங்கு உயா் தர சிகிச்சை அளித்து குணப்படுத்தியதாக ஐபிஎஸ் அதிகாரி பாராட்டு தெரிவித்துள்ளாா். மயிலாப்பூா... மேலும் பார்க்க

கடந்த நிதியாண்டில் 3,000 ரயில் பெட்டிகள் தயாரித்து ஐசிஎஃப் சாதனை

சென்னை ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) 2024-25 நிதியாண்டில் 3,007 ரயில் பெட்டிகள் தயாரித்து சாதனை படைத்துள்ளது. பெரம்பூரில் உள்ள ஐசிஎஃப் தொழிற்சாலையில் இந்திய ரயில்வேக்கு தேவையான ரய... மேலும் பார்க்க

கால்வாயில் ஆண் குழந்தை சடலம்: போலீஸாா் விசாரணை

சென்னை பட்டினப்பாக்கத்தில் கால்வாயில் கிடந்த ஆண் குழந்தை சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். பட்டினப்பாக்கம் மசூதி தெருவில் 132 பிளாக் பின்புறம் உள்ள கால்வாயில், பிளாஸ்டிக் காகிதத்தில் பொதிய... மேலும் பார்க்க