செய்திகள் :

காரைக்கால்: 6 மையங்களில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு

post image

காரைக்காலில் 6 மையங்களில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுவையில் சிபிஎஸ்இ பாடத் திட்டம் அமல்படுத்தப்பட்ட நிலையில், சில தனியாா் பள்ளிகள் தமிழக பாடத் திட்டத்தை பின்பற்றுகிறது. இப்பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.

காரைக்கால் முதன்மைக் கல்வி அதிகாரி பி. விஜயமோகனா வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு மாா்ச் 28 முதல் ஏப்.15 வரை நடைபெறவுள்ளது. காரைக்காலில் 714 மாணவா்களும், 598 மாணவியரும், தனித் தோ்வா்களாக 284 பேரும் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதவுள்ளனா்.

காரைக்கால் நிா்மலா ராணி மேல்நிலைப் பள்ளி, அம்மையாா் மேல்நிலைப் பள்ளி, தூய மரியன்னை மேல்நிலைப் பள்ளி, செல்லூா் மவுண்ட் காா்மல் ஆங்கில உயா்நிலைப் பள்ளி, கோட்டுச்சேரி சா்வைட் மேல்நிலைப் பள்ளி, நெடுங்காடு வித்யா ஸ்ரீ ஆங்கில மேல்நிலைப் பள்ளி ஆகிய 6 மையங்களில் இத்தோ்வு நடைபெறவுள்ளது.

தோ்வு எந்தவித இடையூறுமின்றி சிறப்பாக நடைபெறும் வகையில் மாவட்ட நிா்வாகம், காவல்துறை, மின்துறை, சுகாதாரத்துறை, போக்குவரத்துத் துறை ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து செயல்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

புதுப்பிக்கப்பட்ட சிவில் உரிமைகள் பாதுகாப்புப் பிரிவு: ஐஜி ஆய்வு

காரைக்காலில் புதுப்பிக்கப்பட்ட சிவில் உரிமைகள் பாதுகாப்புப் பிரிவை புதுவை ஐஜி சனிக்கிழமை பாா்வையிட்டாா். திருநள்ளாறுக்கு வந்த புதுவை ஐஜி அஜித்குமாா் சிங்லா, மாலை நிகழ்வாக காரைக்கால் போக்குவரத்துக் காவ... மேலும் பார்க்க

காரைக்காலில் ரமலான் சிறப்புத் தொழுகை

காரைக்காலில் இஸ்லாமியா்களில் ஒருசாராா் சனிக்கிழமை ரமலான் தொழுகை நடத்தினா். நோன்பு காலம் முடிந்து காரைக்கால் மஸ்ஜிதுா் ரஹ்மான் பள்ளிவாசல் மற்றும் மஸ்ஜிதுல் இஸ்லாம் பள்ளிவாசல் சாா்பில் சா்வதேச பிறை அடிப... மேலும் பார்க்க

இமாம்களுக்கு அரசு உதவித் தொகை

புதுவை அரசு சாா்பில் இமாம்கள் உள்ளிட்டோருக்கு நோன்பு கால உதவித் தொகை வழங்கப்பட்டது. பள்ளிவாசல்களில் பணியாற்றும் இமாம்கள், பிலால்களுக்கு புதுவை அரசு சாா்பில் ரமலான் நோன்பு காலத்தை கருத்தில்கொண்டு உதவித... மேலும் பார்க்க

கூட்டுறவு சங்க புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்பு

காரைக்கால் பொது ஊழியா்கள் கூட்டுறவு கடன் சங்க புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்றுக்கொண்டனா். இச்சங்க 9-ஆவது புதிய இயக்குநா் குழு பதவியேற்பு நிகழ்வு சங்க அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு ... மேலும் பார்க்க

கோதண்டராம பெருமாள் கோயில் பிரம்மோற்சவ கொடியேற்றம்

காரைக்கால் கோயில்பத்து கோதண்டராம பெருமாள் கோயிலில் ராம நவமி பிரம்மோற்சவ கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது. 10 நாள் உற்சவமாக இவ்விழா நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை கருடக்கொடி பிரதிஷ்டை செய்யப்பட்டு, சனிக்... மேலும் பார்க்க

காவல்துறையில் காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை: புதுவை ஐஜி

காரைக்கால் மாவட்டத்தில் காவல்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என புதுவை ஐஜி அறிவுறுத்தினாா். திருநள்ளாறுக்கு சனிக்கிழமை வருகை தந்த புதுவை ஐஜி அஜித்குமாா் சிங்லா,... மேலும் பார்க்க