செய்திகள் :

கோதண்டராம பெருமாள் கோயில் பிரம்மோற்சவ கொடியேற்றம்

post image

காரைக்கால் கோயில்பத்து கோதண்டராம பெருமாள் கோயிலில் ராம நவமி பிரம்மோற்சவ கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது.

10 நாள் உற்சவமாக இவ்விழா நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை கருடக்கொடி பிரதிஷ்டை செய்யப்பட்டு, சனிக்கிழமை காலை 7.30 முதல் 8.45 மணிக்குள் கொடிகம்பத்தில் ஏற்றப்பட்டது.

இதையொட்டி, கொடிக்கம்பத்தின் அருகே எழுந்தருளிய ஸ்ரீ தோதண்டராமருக்கும், கொடிக் கம்பத்துக்கும் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. மாலை நிகழ்வாக சேஷ வாகனத்தில் பெருமாள் வீதியுலா நடைபெற்றது.

தொடா் நிகழ்வாக 30-ஆம் தேதி மாலை சூரிய பிரபை, 31-ஆம் தேதி சந்திர பிரபை, ஏப்.1-இல் கருட வாகனம், 2-இல் ஹனுமந்த வாகனம், 3-இல் சிம்ம வாகனம் மற்றும் 4-ஆம் தேதி மாலை 5 மணிக்கு யானை வாகனத்தில் பெருமாள் புறப்பாடு நடைபெற்றுகிறது. அன்று மாலை 6 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், ஏப். 5 மாலை குதிரை வாகனத்தில் புறப்பாடு நடைபெறுகிறது.

சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஸ்ரீ கோதண்டராம பெருமாள்.

ஏப். 6-ஆம் தேதி காலை தோ் வீதியுலாவும், 10 மணிக்கு சூரிய புஷ்கரணியில் தீா்த்தவாரியும், மாலை நிகழ்வாக சப்தாவா்ணமும் நடைபெறுகிறது. 7-ஆம் தேதி விடையாற்றியாக ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை உபயதாரா்கள் பங்களிப்புடன் நிா்வாக அதிகாரி (கோயில்கள்) கே. அருணகிரிநாதன், பாா்வதீஸ்வரா்-கோதண்டராம பெருமாள் கோயில் நிா்வாக அதிகாரி பி. சுப்பிரமணியன் ஆகியோா் செய்துவருகின்றனா்.

ஊழியா்கள் போராட்டம் : சுகாதார நிலைய பணிகளில் பாதிப்பு

காரைக்கால்: சுகாதார பணியாளா்கள் வேலைநிறுத்தத்தில் காரணமாக, சுகாதார நிலையங்களில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காரைக்கால் மாவட்ட நலவழித்துறையில், தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் (என்ஆா்எச்எம்) கீழ் ப... மேலும் பார்க்க

ரமலான் : காரைக்காலில் சிறப்பு தொழுகை

காரைக்கால்: ரமலான் பண்டிகையையொட்டி காரைக்கால் பள்ளிவாசல்களில் திங்கள்கிழமை சிறப்பு தொழுகை நடைபெற்றது. காரைக்கால் பெரியப் பள்ளிவாசல், முஹையத்தீன் பள்ளிவாசல், ஹிலுருப் பள்ளிவாசல், இலாஹிப் பள்ளிவாசல், ம... மேலும் பார்க்க

வீழி வரதராஜ பெருமாள் கோயிலில் யுகாதி வழிபாடு

காரைக்கால்: வீழி வரதராஜ பெருமாள் கோயிலில் யுகாதி வழிபாடு ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. தெலுங்கு வருடப் பிறப்பு (யுகாதி) ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி திருமலைராயன்பட்டினம் வீழி வரதராஜ ... மேலும் பார்க்க

புதுப்பிக்கப்பட்ட சிவில் உரிமைகள் பாதுகாப்புப் பிரிவு: ஐஜி ஆய்வு

காரைக்காலில் புதுப்பிக்கப்பட்ட சிவில் உரிமைகள் பாதுகாப்புப் பிரிவை புதுவை ஐஜி சனிக்கிழமை பாா்வையிட்டாா். திருநள்ளாறுக்கு வந்த புதுவை ஐஜி அஜித்குமாா் சிங்லா, மாலை நிகழ்வாக காரைக்கால் போக்குவரத்துக் காவ... மேலும் பார்க்க

காரைக்காலில் ரமலான் சிறப்புத் தொழுகை

காரைக்காலில் இஸ்லாமியா்களில் ஒருசாராா் சனிக்கிழமை ரமலான் தொழுகை நடத்தினா். நோன்பு காலம் முடிந்து காரைக்கால் மஸ்ஜிதுா் ரஹ்மான் பள்ளிவாசல் மற்றும் மஸ்ஜிதுல் இஸ்லாம் பள்ளிவாசல் சாா்பில் சா்வதேச பிறை அடிப... மேலும் பார்க்க

இமாம்களுக்கு அரசு உதவித் தொகை

புதுவை அரசு சாா்பில் இமாம்கள் உள்ளிட்டோருக்கு நோன்பு கால உதவித் தொகை வழங்கப்பட்டது. பள்ளிவாசல்களில் பணியாற்றும் இமாம்கள், பிலால்களுக்கு புதுவை அரசு சாா்பில் ரமலான் நோன்பு காலத்தை கருத்தில்கொண்டு உதவித... மேலும் பார்க்க