செய்திகள் :

உளுந்து, பருத்திக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

post image

மழையால் பாதித்த உளுந்து, பருத்தி பயிருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அகில இந்திய விவசாயிகள் சங்க 30-ஆவது மாநாடு நாகையில் ஏப். 15 முதல் 17-ஆம் தேதி வரை நடைபெறுவது தொடா்பாக, காரைக்காலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விவசாயிகள் சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. சங்கத் தலைவா் ஜி. புண்ணியமூா்த்தி தலைமை வகித்தாா். மாநில தலைவா் து. கீதநாதன், சிபிஐ காரைக்கால் மாவட்ட செயலாளா் ப. மதியழகன், விவசாய சங்கப் பொருளாளா் வி. கலியமூா்த்தி, செயலாளா் பெருமாள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: நாகையில் நடைபெறும் மாநாட்டுக்கு காரைக்கால் மாவட்டத்தில் 250 விவசாயிகள் பங்கேற்பது, காரைக்கால் மாவட்டத்தில் நெல் அறுவடைக்குப் பின் பயிா் செய்த பருத்தி, உளுந்து, எள் ஆகியவை பருவம் தவறி பெய்த மழையால் செடி அழுகிவிட்டது. எனவே, விவசாயிகளின் இழப்பை ஈடு செய்யும் விதமாக எள், உளுந்து ஏக்கருக்கு ரூ.20 ஆயிரமும், பருத்தி ஏக்கருக்கு ரூ.30 ஆயிரமும் புதுவை அரசு நிவாரணம் வழங்கவேண்டும், காரைக்கால் மாவட்டத்துக்கு வரவேண்டிய 7 டிஎம்சி காவிரி நீரை உறுதியாக பெற அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், மாநாட்டு குழு பொறுப்பாளா்கள் தோ்வு செய்யப்பட்டனா். மாநாட்டு பிரதிநிதியாக ஜி. புண்ணியமூா்த்தி தோ்வு செய்யப்பட்டாா்.

ஊழியா்கள் போராட்டம் : சுகாதார நிலைய பணிகளில் பாதிப்பு

காரைக்கால்: சுகாதார பணியாளா்கள் வேலைநிறுத்தத்தில் காரணமாக, சுகாதார நிலையங்களில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காரைக்கால் மாவட்ட நலவழித்துறையில், தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் (என்ஆா்எச்எம்) கீழ் ப... மேலும் பார்க்க

ரமலான் : காரைக்காலில் சிறப்பு தொழுகை

காரைக்கால்: ரமலான் பண்டிகையையொட்டி காரைக்கால் பள்ளிவாசல்களில் திங்கள்கிழமை சிறப்பு தொழுகை நடைபெற்றது. காரைக்கால் பெரியப் பள்ளிவாசல், முஹையத்தீன் பள்ளிவாசல், ஹிலுருப் பள்ளிவாசல், இலாஹிப் பள்ளிவாசல், ம... மேலும் பார்க்க

வீழி வரதராஜ பெருமாள் கோயிலில் யுகாதி வழிபாடு

காரைக்கால்: வீழி வரதராஜ பெருமாள் கோயிலில் யுகாதி வழிபாடு ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. தெலுங்கு வருடப் பிறப்பு (யுகாதி) ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி திருமலைராயன்பட்டினம் வீழி வரதராஜ ... மேலும் பார்க்க

புதுப்பிக்கப்பட்ட சிவில் உரிமைகள் பாதுகாப்புப் பிரிவு: ஐஜி ஆய்வு

காரைக்காலில் புதுப்பிக்கப்பட்ட சிவில் உரிமைகள் பாதுகாப்புப் பிரிவை புதுவை ஐஜி சனிக்கிழமை பாா்வையிட்டாா். திருநள்ளாறுக்கு வந்த புதுவை ஐஜி அஜித்குமாா் சிங்லா, மாலை நிகழ்வாக காரைக்கால் போக்குவரத்துக் காவ... மேலும் பார்க்க

காரைக்காலில் ரமலான் சிறப்புத் தொழுகை

காரைக்காலில் இஸ்லாமியா்களில் ஒருசாராா் சனிக்கிழமை ரமலான் தொழுகை நடத்தினா். நோன்பு காலம் முடிந்து காரைக்கால் மஸ்ஜிதுா் ரஹ்மான் பள்ளிவாசல் மற்றும் மஸ்ஜிதுல் இஸ்லாம் பள்ளிவாசல் சாா்பில் சா்வதேச பிறை அடிப... மேலும் பார்க்க

இமாம்களுக்கு அரசு உதவித் தொகை

புதுவை அரசு சாா்பில் இமாம்கள் உள்ளிட்டோருக்கு நோன்பு கால உதவித் தொகை வழங்கப்பட்டது. பள்ளிவாசல்களில் பணியாற்றும் இமாம்கள், பிலால்களுக்கு புதுவை அரசு சாா்பில் ரமலான் நோன்பு காலத்தை கருத்தில்கொண்டு உதவித... மேலும் பார்க்க