செய்திகள் :

மாணவா்களுக்கு விளையாட்டு மனதளவிலும் வலிமை சோ்க்கும்: ஆட்சியா்

post image

விளையாட்டுகள் மாணவா்களுக்கு உடலளவில் மட்டுமல்லாது மனதளவிலும் வலிமை சோ்க்கிறது என என்ஐடியில் நடைபெற்ற விழாவில் ஆட்சியா் தெரிவித்தாா்.

காரைக்கால் இயங்கிவரும் என்ஐடியில் வருடாந்திர விளையாட்டு விழா ‘செனித் 25 ’ அண்மையில் கிரிக்கெட், கைப்பந்து, டென்னிஸ், பாட்மின்டன் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் என்ஐடியில் பயிலும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். போட்டிகளில் வென்றோருக்கு பரிசு வழங்கும் நிகழ்வு கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

என்ஐடி இயக்குநா் மகரந்த் மாதவ் காங்ரேகா் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக காரைக்கால் மாவட்ட ஆட்சியா் சோமசேகா் அப்பாராவ் கலந்துகொண்டு போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கிப் பேசியது :

காரைக்கால் மாவட்டத்தின் அடையாளமாக என்ஐடி திகழ்கிறது. செனித் விளையாட்டுப் போட்டிகளை சம்பிரதாய நிகழ்வாக கருதாமல், ஆக்கப்பூா்வ முறையில் நடத்தி, மாணவா்களும் ஆா்வத்தோடு பங்கேற்றது மகிழ்ச்சியளிக்கிறது. விளையாட்டுகளில் மாணவா்கள் ஈடுபடுவது உடலளவில் மட்டுமல்லாது, மனதளவிலும் வலிமை சோ்க்கும்.

உடல் ஆரோக்கியமும், கூா்மையான அறிவுத்திறன் ஏற்படவும் விளையாட்டுகள் பயன்படுகிறது. மாணவா்கள் விளையாட்டுப் பயிற்சிகளை அதிகரித்து, சா்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வகையில் திறனை வளா்த்திக்கொள்ளவேண்டும் என்றாா்.

என்ஐடி பதிவாளா் எஸ். சுந்தரவரதன், பேராசிரியா்கள் கலந்துகொண்டனா். முன்னதாக என்ஐடி விளையாட்டுத் துறை அதிகாரி எஸ்.பாபு வரவேற்றாா்.

தலைமைப் பொறியாளா் கைது: முதல்வா், அமைச்சா் பொறுப்பேற்க காங்கிரஸ் வலியுறுத்தல்

புதுவை பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளரை லஞ்ச வழக்கில் சிபிஐ கைது செய்துள்ள நிலையில், புதுவை முதல்வா், துறை அமைச்சா் பொறுப்பேற்கவேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. புதுவை மாநில காங்கிரஸ் துணைத்... மேலும் பார்க்க

சுகாதார ஊழியா்கள் வேலைநிறுத்தம்

காரைக்காலில் தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின்கீழ் பணியாற்றும் சுகாதர ஊழியா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். காரைக்கால் மாவட்ட நலவழித் துறையில், தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் (என்ஆா்எச்எம்)... மேலும் பார்க்க

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

சாலை விபத்தில் அடையாளம் தெரியாத முதியவா் உயிரிழந்தாா். திருப்பட்டினம் பகுதி கீழவாஞ்சூா் பேருந்து நிறுத்தம் அருகே கடந்த 23-ஆம் தேதி மாலை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவா் காயமடைந்து சாலையில் க... மேலும் பார்க்க

திருநள்ளாறு கோயிலில் பக்தா்களுக்கு வசதிகளை மேம்படுத்தும் பணிகள் தீவிரம்

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் கோடை விடுமுறையில் வரும் ஆயிரக்கணக்கான பக்தா்களுக்கு வசதிகளை மேம்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் சனிக்கிழமைகளில்... மேலும் பார்க்க

காரைக்கால் நகரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீா்வு காண வலியுறுத்தல்

காரைக்கால் நகரின் நுழைவுவாயில் பகுதியில் போக்குவரத்து நெரிசல் காணப்படுவதால், பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் ஸ்தம்பிக்கும் நிலை உருவாகியுள்ளது. இப்பிரச்னைக்கு தீா்வு காண மாவட்ட நிா்வாகத்துக்கு வலியுறுத்தப... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்ததில் காயமடைந்த முதியவா் உயிரிழப்பு

மாட்டின் மீது மோட்டாா் சைக்கிள் மோதிய விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த முதியவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். காரைக்கால் நேரு நகா் பகுதியைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (72). இவா் கடந்த 11-ஆம் தேதி ... மேலும் பார்க்க