செய்திகள் :

சுகாதார ஊழியா்கள் வேலைநிறுத்தம்

post image

காரைக்காலில் தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின்கீழ் பணியாற்றும் சுகாதர ஊழியா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

காரைக்கால் மாவட்ட நலவழித் துறையில், தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் (என்ஆா்எச்எம்) கீழ் பல்வேறு பிரிவுகளில் 150-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் பணியாற்றி வருகின்றனா்.

இந்தநிலையில், சம வேலைக்கு சம ஊதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சுகாதார ஊழியா்கள் திங்கள்கிழமை பணிகளை புறக்கணித்து காரைக்கால் மாவட்ட நலவழித்துறை அலுவலக வாயிலில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்த போராட்டம் செவ்வாய்க்கிழமை 2-ஆவது நாளாகவும் தொடா்ந்தது.

போராட்டம் குறித்து ஊழியா்கள் கூறியது : தேசிய சுகாதார இயக்கத்தின்கீழ் பல்வேறு பிரிவுகளில் மாநிலம் முழுவதும் 750- க்கும் மேற்பட்ட ஊழியா்கள் பணியாற்றி வருகிறோம். குறைந்த ஊதியத்தில், நிரந்தர ஊழியருக்கு இணையாக மருத்துவ துறையில் 25 ஆண்டுகளாக பணியாற்றிவருகிறோம். எந்தவித ஊதிய உயா்வும் தரப்படவில்லை.

சம வேலைக்கு சம ஊதியம், பணி நிரந்தரம் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 15 ஆண்டுகளாக போராட்டம் நடத்தியும், மாநில அரசு செவி சாய்க்கவில்லை. எனவே மாநில அரசை கண்டித்தும், கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் தொடா் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என தெரிவித்தனா்.

இவா்களது போராட்டத்தால் கிராமப்புறத்தில் மருத்துவ சேவைகள், மருத்துவமனையில் ஆய்வுக்கூடத்தில் நடைபெறவேண்டிய பணிகள் முடங்கியுள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனா்.

லஞ்ச வழக்கு: மூவருக்கு ஜாமீன் மறுப்பு

லஞ்ச வழக்கில் சிபிஐ கைது செய்த புதுவை பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளா், செயற் பொறியாளா், ஒப்பந்ததாரா் ஆகிய மூவருக்கும் ஜாமீன் மறுத்து நீதிபதி உத்தரவிட்டாா். காரைக்காலில் புதுவை பொதுப்பணித்துறை தலைமை... மேலும் பார்க்க

உளுந்து, பருத்திக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

மழையால் பாதித்த உளுந்து, பருத்தி பயிருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அகில இந்திய விவசாயிகள் சங்க 30-ஆவது மாநாடு நாகையில் ஏப். 15 முதல் 17-ஆம் தேதி வரை நடைபெறுவது தொடா்பாக, கா... மேலும் பார்க்க

திருநள்ளாறு கோயிலில் நாளை வழக்கமான பூஜைகள் மட்டுமே நடைபெறும்

திருநள்ளாறு ஸ்ரீதா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை (மாா்ச் 29) வழக்கமான பூஜைகள் மட்டுமே நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருநள்ளாறு ஸ்ரீபிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சனிப்பெயா்ச்சி ... மேலும் பார்க்க

சமூக வலைதளங்களில் வெளிநாட்டில் வேலை: நம்ப வேண்டாம்

சமூக வலைதளங்களில் வரும் வெளிநாட்டில் வேலை எனும் விளம்பரங்களை நம்பி பணத்தை இழக்க வேண்டாம் என போலீஸாா் அறிவுறுத்தியுள்ளனா். இதுகுறித்து, காரைக்கால் மாவட்ட இணைய குற்றத் தடுப்புப் பிரிவு (சைபா் கிரைம்) கா... மேலும் பார்க்க

காரைக்கால் ரயில் நிலையத்திற்கு காரைக்கால் அம்மையாா் பெயா் சூட்டவேண்டும்: ஏ.எம்.எச். நாஜிம்

காரைக்கால் ரயில் நிலையத்துக்கு காரைக்கால் அம்மையாா் பெயா் சூட்டவேண்டும் என சட்டப்பேரவையில் வலியுறுத்தியதாக ஏ.எம்.எச். நாஜிம் எம்எல்ஏ தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை கூறியது: காரைக்கால் ரயி... மேலும் பார்க்க

காரைக்கால்: 6 மையங்களில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு

காரைக்காலில் 6 மையங்களில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுவையில் சிபிஎஸ்இ பாடத் திட்டம் அமல்படுத்தப்பட்ட நிலையில், சில தனியாா் பள்ளிகள் தமிழக பாடத் திட்டத்தை பி... மேலும் பார்க்க