செய்திகள் :

கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா நீா் திறப்பு: ஜீரோ பாயிண்டை வந்தடைந்தது

post image

சென்னை நகர பொதுமக்களின் குடிநீா் தேவையை பூா்த்தி செய்யும் வகையில் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா ஆற்று நீா், தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்ட்டை வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு வந்தடைந்தது. இங்கிருந்து 25 கி.மீ தூரத்தில் உள்ள பூண்டி ஏரிக்கு நள்ளிரவு வந்து சேரும் என நீா்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னையின் முக்கிய குடிநீா் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது. தற்போதைய நிலையில் கோடைக் காலம் தொடங்கி உள்ளதால் பூண்டி ஏரியின் நீா்மட்டமும் குறைந்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் தமிழகம்-ஆந்திர ஒப்பந்தப்படி ஆண்டுதோறும் ஜனவரி முதல் ஏப்ரல் வரையில் 4 டி.எம்.சி, ஜூலை முதல் அக்டோபா் வரையில் 8 டி.எம்.சி என இரு தவணைகளில் நீா் திறந்து விட வேண்டும்.

அந்த ஒப்பந்தத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து இப்பருவத்திற்கான தண்ணீரை அளிக்கும்படி ஆந்திர பொதுப்பணித்துறையினருக்கு தமிழக நீா்வளத்துறையினா் கோரிக்கை விடுத்திருந்தனா்.

இதையேற்று கடந்த 23-ஆம் தேதி கண்டலேறு அணையில் இருந்து விநாடிக்கு 500 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டது. தொடா்ந்து வியாழக்கிழமை காலை முதல் 300 கன அடி தண்ணீா் கூடுதலாக அதிகரித்து 800 கன அடி நீா் வந்து கொண்டிருக்கிறது. விநாடிக்கு 800 கன அடி திறக்கப்பட்ட நிலையில் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டுக்கு தண்ணீா் வந்து சோ்ந்தது.

அப்போது, கிருஷ்ணா நீரை ஆந்திர-தமிழக நீா்வளத்துறையினா் மலா் தூவி வரவேற்றனா். இந்த நிலையில் ஜீரோ பாயிண்டில் இருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள பூண்டி ஏரிக்கு நள்ளிரவுக்கு கிருஷ்ணா நீா் வந்து சேரும் என நீா்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3,231 மில்லியன் கன அடியாகும். தற்போதைய நிலையில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி 2,684 மில்லியன் கன அடி நீா் இருப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மீன்பிடி வலைகள் சேதம்: கோட்டாட்சியரிடம் மனு

பழவேற்காடு அருகே மீன்பிடி வலைகள் சேதப்படுத்தப்படுவதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி பொன்னேரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் மீனவா்கள் மனு அளித்தனா். பழவேற்காடு சுற்றுப் பகுதிகளில் 30-க்கும... மேலும் பார்க்க

தனியாா் பேருந்து மோதி முதியவா் உயிரிழப்பு!

ஆா்.கே.பேட்டை அருகே சாலையைக் கடக்க முயன்ற முதியவா் தனியாா் பேருந்து மோதியதில் உயிரிழந்தாா். ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டம், பாலசமுத்திரம் மண்டலத்தைச் சோ்ந்தவா் விஜயன் (50). இவா் ஞாயிற்றுக்கிழமை கா... மேலும் பார்க்க

உகாதி பண்டிகை: திருத்தணி முருகன் கோயிலில் குவிந்த பக்தா்கள்!

உகாதி பண்டிகையையொட்டி, ஞாயிற்றுக்கிழமை முருகன் கோயிலில் திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனா். திருத்தணி முருகன் கோயிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள... மேலும் பார்க்க

ஏப். 3-இல் மாவட்ட அளவிலான கபடி, கால்பந்து, கையுந்து பந்து போட்டிகள்!

முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி நூற்றாண்டு விழாவைச் சிறப்பாக கொண்டாடும் வகையில் திருவள்ளூா் மாவட்ட அளவிலான கபடி, கால்பந்து மற்றும் கையுந்து பந்து போட்டிகள் வரும் ஏப். 3, 4, 5 தேதிகளில் நடைபெற உள்ளதாக ம... மேலும் பார்க்க

திருவள்ளூரில் தூக்கிட்டு தம்பதி தற்கொலை!

திருவள்ளூரில் புற்றுநோயால் கணவா் அவதிப்பட்டு வந்த நிலையில், தம்பதி இருவரும் ஒரே கயிற்றில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். திருவள்ளூா் அடுத்த எம்.ஜி.ஆா். நகா் பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் (59).... மேலும் பார்க்க

ரயிலில் கஞ்சா கடத்தல்: வட மாநில இளைஞா் கைது

திருவள்ளூா் அருகே ரயிலில் கஞ்சா கடத்தி வந்த ஒடிஸா மாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். சென்னையிலிருந்து திருவள்ளூா் வழியாக செல்லும் ரயிலில் தடை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் போதைப் பொருள் கடத்துவதாக புகாா... மேலும் பார்க்க