செய்திகள் :

அமெரிக்க துணை அதிபரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கிரீன்லாந்து!

post image

அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் அவரது மனைவியுடன் கிரீன்லாந்து செல்வதாக முடிவெடுத்திருந்த நிலையில் அங்கு அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கபட்டு வருகின்றது.

அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ், அவரது மனைவி உஷா வான்ஸ் ஆகியோர் இன்று கிரீன்லாந்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தைப் பார்வையிடச் செல்கின்றனர்.

கிரீன்லாந்தில் நடக்கும் நாய் பந்தயத்தைக் காண சுற்றுப்பயணம் செல்வதற்கு உஷா வான்ஸ் முன்பு திட்டமிட்டிருந்தார். பின்னர் ஜேடி வான்ஸ் கிரீன்லாந்து பயணத்தில் இணைவதாகத் தகவல்கள் வெளியாகின. 3 நாள்களுக்கு திட்டமிடப்பட்ட இந்தப் பயணம் பற்றி கிரீன்லாந்து அரசிடம் முன்னறிவிப்பு செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி, கிரீன்லாந்து மீது அமெரிக்கா கட்டுப்பாடு செலுத்தவேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பலமுறை கூறிய நிலையில் தான் பதவிக்கு வந்தவுடன் கிரீன்லாந்தை அமெரிக்கா வசம் கொண்டுவருவேன் என முன்பு தெரிவித்திருந்தார்.

கிரீன்லாந்து டென்மார்க் நாட்டைச் சேர்ந்த தன்னாட்சி அதிகாரம் உள்ள பிரதேசமாகும். ஐரோப்பிய யூனியனின் கீழ் வரும் இந்தப் பிரதேசத்தை கைப்பற்ற அமெரிக்கா முயற்சி செய்வது அங்குள்ள மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

இதனால், வான்ஸ் வருகைக்கு டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து மக்கள் பலத்த எதிர்ப்பினைத் தெரிவித்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, வான்ஸ் அவரது மனைவியுடன் செல்வதாக இருந்த சுற்றுப்பயணம் ஒரு நாளாகக் குறைக்கப்பட்டது. இதில், அமெரிக்க ராணுவ தளத்தை மட்டும் அவர்கள் பார்வையிடச் செல்வதாகவும், அங்குள்ள அதிகாரிகளுடன் சந்திப்பு எதுவும் நடைபெறாது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், அமெரிக்காவுடன் கிரீன்லாந்தை இணைப்பதற்கு அங்குள்ள மக்களை சம்மதிக்க வைப்பேன் என டொனால்ட் டிரம்ப் கூறியது இந்தப் பிரச்னையை மேலும் பெரிதாக்கியுள்ளது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக டென்மார்க் தலைநகரான கோபன்ஹேகனில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் முன்பு அந்நாட்டைச் சேர்ந்த மக்கள் போராட்டம் நடத்தவுள்ளனர்.

அமெரிக்க - டென்மார்க் இடையேயான இத்தகைய அரசியல் அழுத்தங்களுக்கு நடுவே வான்ஸ் தனது மனைவியுடன் பயணம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | மியான்மர் நிலநடுக்கம்: இதுவரை 144 பேர் பலி, 730 பேர் காயம்

மியான்மர் நிலநடுக்கம்: தொழுகையில் இருந்த 700 முஸ்லீம்கள் பலி!

மியான்மரில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின்போது மசூதிகளில் தொழுகையில் ஈடுபட்டிருந்த 700 முஸ்லீம்கள் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மியான்மரின் இரண்டாவது பெரிய நகரமா... மேலும் பார்க்க

வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும்: ஈரானை எச்சரிக்கும் டிரம்ப்!

அணு ஆயுதத் திட்டம் தொடர்பான அமெரிக்காவின் ஒப்பந்தத்திற்கு ஈரான் ஒப்புக்கொள்ளாவிட்டால் அவர்கள்மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும் என டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். ஈரானின் அணு ஆயுதத் திட்டங்களைக... மேலும் பார்க்க

ரஷிய அதிபா் புதினை கொல்ல சதியா? காா் வெடித்து தீப்பற்றியதால் பரபரப்பு!

ரஷிய அதிபா் புதின் பயன்படுத்தும் காா் திடீரென வெடித்து தீப்பற்றியது. இது அதிபா் விளாதிமீா் புதினை கொல்வதற்கான சதியா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. காா் தீப்பற்றியபோது அதில் யாரும் இல்லாததால் உயிரிழப்பு... மேலும் பார்க்க

பாகிஸ்தான் ராணுவம் ட்ரோன் தாக்குதல்: 12 பயங்கரவாதிகள், 9 பொதுமக்கள் உயிரிழப்பு!

பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவா மாகாணத்தில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய ட்ரோன் (ஆளில்லாத சிறிய ரக விமானம்) தாக்குதலில் 12 பயங்கரவாதிகளும், 9 பொதுமக்களும் உயிரிழந்தனா். பாகிஸ்தானின் பலூசிஸ்தான், கைபா் பக்... மேலும் பார்க்க

டெஸ்லா விற்பனையகங்களுக்கு எதிரே அமெரிக்காவில் மீண்டும் போராட்டம்!

அமெரிக்காவில் எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவன காா் விற்பனையகங்களுக்கு எதிரே பொதுமக்கள் மீண்டும் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அமெரிக்க அதிபா் டிரம்ப்புக்கு நெருக்கமானவராக விளங்கும் எலான் மஸ்க் தலைம... மேலும் பார்க்க

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்: அதிகரிக்கும் உயிரிழப்பு!

சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மரின் மண்டலாய் நகரை மையமாகக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்கட்டமைப்பு சேதம், உள்நாட்டுப் போா் ஆகிய காரணிகளால் ஏற... மேலும் பார்க்க