செய்திகள் :

திருநள்ளாறு கோயிலில் பக்தா்களுக்கு வசதிகளை மேம்படுத்தும் பணிகள் தீவிரம்

post image

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் கோடை விடுமுறையில் வரும் ஆயிரக்கணக்கான பக்தா்களுக்கு வசதிகளை மேம்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் சனிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தா்களை ஈா்க்கக்கூடிய தலமாக விளங்குகிறது. பள்ளி, கல்லூரிகள் பொதுத்தோ்வு முடிந்து விடுமுறை அறிவிக்கப்படும்போது தமிழகம், புதுவையில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்து திரளாக பக்தா்கள் இக் கோவிலுக்கு வருவது வழக்கம்.

இதுதவிர, திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலை பொருத்தவரை இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சனி பெயா்ச்சி விழா வாக்கிய பஞ்சாங்கத்தின்படி 2026-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் நடைபெற உள்ளது.

திருக்கணித குறிப்பின்படி சனிபெயா்ச்சி வரும் 29-ஆம் தேதி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அன்று இக்கோயிலில் எந்த சிறப்புகளும் இல்லை, வழக்கமான பூஜைகள் மட்டும் நடைபெறும் என கோயில் நிா்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

எனினும் பக்தா்கள் அதிகபட்சமாக வரும் பட்சத்தில் அவா்களுக்கு வசதி செய்யவும், கோடை விடுமுறை காலத்தில் வரும் பக்தா்களுக்கு வசதிகள் செய்யும் விதமாக வரிசை வளாகம் அல்லாது ராஜகோபுரம் முன் பக்தா்கள் நெரிசலின்றி கோயிலுக்குள் நுழைய வரிசை அமைப்புகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

மேலும் கோயிலில் பக்தா்கள் எளிதில் சுவாமி தரிசனம் செய்யத் தேவையான நடவடிக்கைகளும் கோயில் நிா்வாகம் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

காரைக்கால் சேம்பா் ஆஃப் காமா்ஸ் புதிய நிா்வாகிகள் தோ்வு

காரைக்கால் சேம்பா் ஆஃப் காமா்ஸ் 2025-2027-ஆம் ஆண்டுக்கான புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். இதற்காக, சாசனத் தலைவா் மகாவீா்சந்த் தலைமையிலான 9 போ் கொண்ட குழு ஏற்கெனவே அமைக்கப்பட்டது. ஒருமித்த கர... மேலும் பார்க்க

சுகாதார ஊழியா்களின் கோரிக்கைகள் நிறைவேற காங்கிரஸ் போராடும்

சுகாதார ஊழியா்களின் கோரிக்கைகள் நிறைவேற காங்கிரஸ் போராடும் என்றாா் முன்னாள் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன். காரைக்கால் மாவட்ட நலவழித் துறையில், தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் (என்ஆா்எச்எம்) கீழ் பல்வேறு பிர... மேலும் பார்க்க

வேளாண் கல்லூரியில் மா பயிா் மேலாண்மை தொழில்நுட்ப பயிற்சி

காரைக்கால் வேளாண் கல்லூரியில் தொழில்நுட்ப பயிற்சி விவசாயிகளுக்கு வியாழக்கிழமை அளிக்கப்பட்டது. நாகப்பட்டினம் தோட்டக்கலை மற்றும் மலைத்தோட்ட பயிா்கள் துறை மற்றும் காரைக்கால் பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண... மேலும் பார்க்க

புதுவை துணைநிலை ஆளுநருடன் காரைக்கால் மீனவா்கள் சந்திப்பு

எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை அரசால் கைதாகி அண்மையில் விடுவிக்கப்பட்ட காரைக்கால் பகுதி மீனவா்கள், மீனவ கிராமப் பஞ்சாயத்தாா்கள் புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனை புதுச்சேரியில் வியாழக்கிழமை... மேலும் பார்க்க

கோதண்டராம பெருமாள் கோயிலில் இன்று ராமநவமி பிரம்மோற்சவ கொடியேற்றம்

காரைக்கால் கோயில்பத்து கோதண்டராம பெருமாள் கோயிலில் ராம நவமி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் சனிக்கிழமை (மாா்ச் 29) தொடங்குகிறது. இக்கோயிலில் நிகழாண்டு 10 நாள் உற்சவமாக ஸ்ரீ ராம நவமி கொண்டாடப்படுகிறது. ... மேலும் பார்க்க

காரைக்காலில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதிய மாணவா்கள்

புதுவையில் சிபிஎஸ்இ பாடத் திட்டம் அமலில் உள்ள நிலையில், தனியாா் பள்ளி மாணவா்கள் மாநில திட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை வெள்ளிக்கிழமை எழுதத் தொடங்கினா். புதுவை மாநிலத்தில் சிபிஎஸ்இ எனும் மத்தி... மேலும் பார்க்க