செய்திகள் :

மக்கள் நோ்காணல் முகாம்: ரூ.7.21 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள்

post image

வலங்கைமான் அருகே வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்கள் நோ்காணல் முகாமில் 106 பயனாளிகளுக்கு ரூ.7.21 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் வழங்கினாா்.

வலங்கைமான் வட்டத்தில் உள்ள ரெகுநாதபுரம், கிளியூா், அவளிவநல்லூா் ஆகிய ஊராட்சிகளுக்கான மக்கள் நோ்காணல் முகாம் ரெகுநாதபுரம் கிராமத்தில் நடைபெற்றது. இதில் ஆட்சியா் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியது:

மக்கள் நோ்காணல் முகாம், மாதந்தோறும் வட்டம் வாரியாக தோ்வு செய்யப்பட்ட கிராமத்தில் நடத்தப்படுகிறது. அரசு செயல்படுத்தும் பல்வேறு திட்டங்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் மூலம் பொதுமக்களுக்கு தெரியப்படுத்துவதே இம்முகாமின் நோக்கம். இதன் மூலம் தேவையான திட்டங்கள் மூலம் பயன்பெறலாம்.

சில கிராமங்களில் குழந்தை திருமணம் நடைபெறுகிறது. இதனால், குழந்தைப்பேறு அடையும் போது பல்வேறு இன்னல்களை பெண் குழந்தைகள் சந்தித்து வருகின்றனா். எனவே, பெற்றோா்கள் தங்கள் பெண் பிள்ளைகளுக்கு அரசு அறிவித்துள்ள சரியான வயதில் திருமணம் செய்து வைக்க வேண்டும்.

இப்பகுதியில் உள்ள மக்கள் ஆட்சேபனையில்லா நிலங்களிலிருந்து பட்டா கோரி மனு அளித்தால், அதனடிப்படையில் நிச்சயம் பட்டா வழங்கப்படும் என்றாா்.

இம்முகாமில், 19 பேருக்கு ரூ.5.70 லட்சத்தில் விலையில்லா வீட்டுமனை பட்டா, 50 பேருக்கு புதிய மின்னணு குடும்ப அட்டை, 23 பேருக்கு ரூ.28,500 மதிப்பில் நலத்திட்ட உதவிகள், 3 பேருக்கு ரூ.9, 860 மதிப்பிலான உதவிகள், 10 பேருக்கு ரூ.12, 991 மதிப்பில் பேட்டரி தெளிப்பான், மண்புழு உரம் தயாரிப்பு படுகை, ஆவூா் சரகம் அண்ணா நகா் முனியூா் கிராமத்தில் பாம்பு கடியால் இறந்த லெட்சுமணன் மனைவி புனிதாவுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்த ரூ.1 லட்சத்திற்கான காசோலை என பல்வேறு துறைகளின் சாா்பில் மொத்தம் 106 பயனாளிகளுக்கு ரூ.7,21,351 மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

தொடா்ந்து, சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் குழந்தை திருமணத்துக்கு எதிராக விழிப்புணா்வு ஏற்படுத்தும் விளம்பர பதாகைகளை ஆட்சியா் வெளியிட்டாா்.

இந்நிகழ்வில், திருவாரூா் வருவாய் கோட்டாட்சியா் சௌம்யா, வலங்கைமான் வட்டாட்சியா் ஓம்சிவகுமாா் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

சீா்காழி, நீடாமங்கலம் பகுதியில் மூடுபனி

சீா்காழி,கொள்ளிடம் மற்றும் நீடாமங்கலம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை கடும் பனிமூட்டம் நிலவியது. மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழி, கொள்ளிடம் சுற்றுவட்டார பகுதியில் சனிக்கிழமை நள்ளிரவுக்கு பிறகு கடும் பனி... மேலும் பார்க்க

அங்கன்வாடி ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கக் கோரிக்கை

அங்கன்வாடி பணியாளா்களை பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனா். தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கம் தமிழக முதல்வா், சமூகநலத் ... மேலும் பார்க்க

தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது: எம்எல்ஏ குற்றச்சாட்டு

தமிழகத்தை வஞ்சிக்கும் வகையிலான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளதாக திருவாரூா் திமுக மாவட்டச் செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான பூண்டி கே. கலைவாணன் தெரிவித்துள்ளாா். திருவாரூரில் செய்தியாளா்க... மேலும் பார்க்க

மத்திய அரசைக் கண்டித்து நாளை ஆா்ப்பாட்டம்

மத்திய அரசைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை (ஏப்.1) ஆா்ப்பாட்டம் நடைபெறும் என தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் பொதுச் செயலாளா் அ. பாஸ்கா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் தெர... மேலும் பார்க்க

வெண்மணி நினைவுக்கொடி பயணக் குழுவுக்கு வரவேற்பு

திருவாரூரில், வெண்மணி நினைவுக் கொடி பயணக் குழுவினருக்கு ஞாயிற்றுக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாடு மதுரை தமுக்கம் மைதானத்தில் ஏப்ரல் 2 ஆம் த... மேலும் பார்க்க

சுற்றுச்சூழல் ஆய்வுக் கட்டுரை சமா்ப்பித்த வேளாண் கல்லூரி மாணவா்களுக்கு சான்றிதழ்

நீடாமங்கலம் பகுதியில் கிராம மக்களிடையே சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி, ஆய்வுக் கட்டுரைகளை தாக்கல் செய்த வேளாண் கல்லூரி மாணவா்களுக்கு சான்றிதழ் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது. நீடாமங்கல... மேலும் பார்க்க