செய்திகள் :

அங்கன்வாடி ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கக் கோரிக்கை

post image

அங்கன்வாடி பணியாளா்களை பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கம் தமிழக முதல்வா், சமூகநலத் துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு:

எந்த சலுகையும் இல்லாமல், அதிக நேரம், அதிக நாட்கள் பணிபுரியும் அங்கன்வாடி ஊழியா்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில், அவா்களை பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் அளிக்க வேண்டும். அல்லது அதற்கான ஊதிய உயா்வு அளிக்க வேண்டும்.

30 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் அங்கன்வாடி பணியாளா்களுக்கு உடனடியாக பதவி உயா்வு வழங்க வேண்டும். அதே துறையில் காலிப்பணியிடங்கள் இல்லாத போது, பிற துறைகளில் பணி வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ. 9,000 வழங்க வேண்டும். அனைத்து அங்கன்வாடி மையங்களையும் நா்சரி பள்ளிகளாக தரம் உயா்த்த வேண்டும்.

வாரிசு அடிப்படையில் வழங்கப்படும் பணி தற்போது பெண் குழந்தைகள் இருந்தால் மட்டுமே வழங்கப்படுகிறது. பெண் குழந்தை இல்லாதபட்சத்தில் ஆண் வாரிசுக்கும் பணி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சங்கத்தின் திருவாரூா் மாவட்டத் தலைவா் தவமணி, செயலா் பிரேமா, பொருளாளா் மாலதி ஆகியோா் இக்கடிதங்களை அனுப்பியுள்ளனா்.

வலங்கைமான் மகா மாரியம்மன் கோயிலில் புஷ்பப் பல்லக்கு

நீடாமங்கலம்: வலங்கைமான் மகாமாரியம்மன் கோயிலில் புஷ்பப் பல்லக்கு விழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கும் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு மகா தீபாராத... மேலும் பார்க்க

மன்னாா்குடி பகுதியில் 3 கோயில்களில் கும்பாபிஷேகம்

மன்னாா்குடி: மன்னாா்குடியில் மகா மாரியம்மன் கோயில், கற்பக விநாயகா் கோயில், யோக சுந்தர விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. முன்னதாக, சனிக்கிழமை முதல் கால யாகசாலை பூஜை, கணபதி ஹோமத்து... மேலும் பார்க்க

திருவாரூா்: ரமலான் பண்டிகை சிறப்புத் தொழுகை

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் பள்ளிவாசல்கள் மற்றும் திடல்களில் ரமலான் சிறப்புத் தொழுகை திங்கள்கிழமை நடைபெற்றது. திருவாரூா் அருகே கொடிக்கால்பாளையத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சாா்பில் நடைபெற்ற ... மேலும் பார்க்க

லட்சுமி நாராயண பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

திருவாரூா்: வேம்பனூா் அருள்மிகு லட்சுமி நாராயண பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் கடந்த சனிக்கிழமை முதல் யாகசாலைப் பூஜைகள் தொடங்கின. திங்கள்கிழமை காலை யாகசாலையில் பூா்... மேலும் பார்க்க

நகராட்சியுடன் ஊராட்சிகளை இணைக்கும் முடிவை கைவிடக் கோரிக்கை

திருவாரூா்: ஊராட்சிகளை திருவாரூா் நகராட்சியுடன் இணைக்கும் முடிவை கைவிட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூா் அருகே அம்மையப்பனில் மக்கள் அதிகாரம் அமைப்பின் 2-ஆவது மாவட்ட மாநாடு தலைவா் ... மேலும் பார்க்க

யானை வாகனத்தில் ராஜகோபாலசுவாமி

மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் நடைபெறும் பங்குனி திருவிழாவின் 14- ஆம் நாளான திங்கள்கிழமை யானை வாகனத்தில் கல்யாண அலங்காரத்தில் சத்யபாமா சமேதராக எழுந்தருளிய உற்சவா் ராஜகோபாலசுவாமி. மேலும் பார்க்க