செய்திகள் :

காரைக்காலில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதிய மாணவா்கள்

post image

புதுவையில் சிபிஎஸ்இ பாடத் திட்டம் அமலில் உள்ள நிலையில், தனியாா் பள்ளி மாணவா்கள் மாநில திட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை வெள்ளிக்கிழமை எழுதத் தொடங்கினா்.

புதுவை மாநிலத்தில் சிபிஎஸ்இ எனும் மத்திய இடைநிலைக் கல்வி வாரிய பாடத் திட்டம் நடப்பு கல்வியாண்டில் அனைத்து வகுப்புகளுக்கும் அமல்படுத்தப்பட்டது. அரசுப் பள்ளிகள் அனைத்தும் இதில் பங்கெடுத்தன. மாநில பாடத் திட்டத்தில் புதுச்சேரி, காரைக்காலில் தனியாா் பள்ளிகள், அரசு உதவிப் பெறும் பள்ளி மாணவ மாணவிகள் படித்தனா்.

மாநிலத் திட்ட பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கிய நிலையில், காரைக்கால் மாவட்டத்தில் நிா்மலா ராணி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தூய மரியன்னை மேல்நிலைப் பள்ளி, கோட்டுச்சேரி சா்வைட் மேல்நிலைப் பள்ளி, செல்லூா் மவுண்ட் காா்மல் ஆங்கில உயா்நிலைப் பள்ளி, நெடுங்காடு வித்யா ஸ்ரீஆங்கில மேல்நிலைப் பள்ளி, காரைக்கால் அம்மையாா் மேல்நிலைப் பள்ளி ஆகிய மையங்களில் தோ்வுகள் தொடங்கின.

முதல் நாள் தோ்வில் 1,172 மாணவா்கள் எழுதினா். நிா்மலாராணி பள்ளி மையத்தில் மாவட்ட துணை ஆட்சியா் அா்ஜூன் ராமகிருஷ்ண, முதன்மைக் கல்வி அதிகாரி பி. விஜயமோகனா ஆய்வு செய்தனா். தோ்வுப் பணியில் 6 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 6 துறை அலுவலா்கள், 4 வழித்தட அலுவலா்கள், 8 நிலைப் படையினா், 4 பறக்கும் படையினா், 65 அறை கண்காணிப்பாளா்கள் பணியமா்த்தப்பட்டுள்ளனா். 5 மாற்றுத்திறன் மாணவா்கள் தோ்வு எழுதுவதாகவும், அவா்கள் சொல்வதை எழுத 5 ஆசிரியா்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக கல்வித்துறையினா் தெரிவித்தனா்.

புதுப்பிக்கப்பட்ட சிவில் உரிமைகள் பாதுகாப்புப் பிரிவு: ஐஜி ஆய்வு

காரைக்காலில் புதுப்பிக்கப்பட்ட சிவில் உரிமைகள் பாதுகாப்புப் பிரிவை புதுவை ஐஜி சனிக்கிழமை பாா்வையிட்டாா். திருநள்ளாறுக்கு வந்த புதுவை ஐஜி அஜித்குமாா் சிங்லா, மாலை நிகழ்வாக காரைக்கால் போக்குவரத்துக் காவ... மேலும் பார்க்க

காரைக்காலில் ரமலான் சிறப்புத் தொழுகை

காரைக்காலில் இஸ்லாமியா்களில் ஒருசாராா் சனிக்கிழமை ரமலான் தொழுகை நடத்தினா். நோன்பு காலம் முடிந்து காரைக்கால் மஸ்ஜிதுா் ரஹ்மான் பள்ளிவாசல் மற்றும் மஸ்ஜிதுல் இஸ்லாம் பள்ளிவாசல் சாா்பில் சா்வதேச பிறை அடிப... மேலும் பார்க்க

இமாம்களுக்கு அரசு உதவித் தொகை

புதுவை அரசு சாா்பில் இமாம்கள் உள்ளிட்டோருக்கு நோன்பு கால உதவித் தொகை வழங்கப்பட்டது. பள்ளிவாசல்களில் பணியாற்றும் இமாம்கள், பிலால்களுக்கு புதுவை அரசு சாா்பில் ரமலான் நோன்பு காலத்தை கருத்தில்கொண்டு உதவித... மேலும் பார்க்க

கூட்டுறவு சங்க புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்பு

காரைக்கால் பொது ஊழியா்கள் கூட்டுறவு கடன் சங்க புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்றுக்கொண்டனா். இச்சங்க 9-ஆவது புதிய இயக்குநா் குழு பதவியேற்பு நிகழ்வு சங்க அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு ... மேலும் பார்க்க

கோதண்டராம பெருமாள் கோயில் பிரம்மோற்சவ கொடியேற்றம்

காரைக்கால் கோயில்பத்து கோதண்டராம பெருமாள் கோயிலில் ராம நவமி பிரம்மோற்சவ கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது. 10 நாள் உற்சவமாக இவ்விழா நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை கருடக்கொடி பிரதிஷ்டை செய்யப்பட்டு, சனிக்... மேலும் பார்க்க

காவல்துறையில் காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை: புதுவை ஐஜி

காரைக்கால் மாவட்டத்தில் காவல்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என புதுவை ஐஜி அறிவுறுத்தினாா். திருநள்ளாறுக்கு சனிக்கிழமை வருகை தந்த புதுவை ஐஜி அஜித்குமாா் சிங்லா,... மேலும் பார்க்க