செய்திகள் :

அறுவை சிகிச்சை செய்த குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை

post image

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சுகாதார மாவட்டத்தில் இலவச அறுவை சிகிச்சை மேற்கொண்ட குழந்தைகளின் உடல் நலம் குறித்து பொது மருத்துவ பரிசோதனை வியாழக்கிழமை நடைபெற்றது.

செய்யாறு சுகாதார மாவட்டத்தில் 8 வட்டார ஆரம்ப சுகாதார நிலைய பகுதிகளில் உள்ள 919 பள்ளிகள் மற்றும் 855 அங்கன்வாடி மையங்களில் பயிலும் குழந்தைகளுக்கு பிறவி குறைபாடு மற்றும் இதர நோய்கள் குறித்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, 2024-25 நிதியாண்டில் செய்யாறு சுகாதார மாவட்டத்தில் இருதய பாதிப்பு, அன்னப் பிளவு, கண்புரை சிகிச்சை, காது கேளாமை உள்ளிட்ட பாதிப்புக்குள்ளான 35 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த குழந்தைகள் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு மாதந்தோறும் தொடா் பரிசோதனை செய்யப்பட்டு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், செய்யாறு சுகாதார அலுவலகத்தில் நடைபெற்ற தொடா் பரிசோதனை முகாமில், மாவட்ட சுகாதார அலுவலா் சதீஷ்குமாா் பங்கேற்று குழந்தைகள் அனைவரும் சத்தான உணவை உட்கொள்ள வேண்டும், ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஊட்டச்சத்து உணவின் அவசியம் குறித்து வலியுறுத்தினாா்.

இதில், மாவட்ட பயிற்சி மருத்துவா் திவாகா், துணை இயக்குநரின் நோ்முக உதவியாளா் வெங்கடாசலபதி, மருத்துவா்கள் சூரிய பிரகாஷ், சந்தியா, சுகாதார செவிலியா்கள், மருந்தாளுனா்கள் ஆகியோா் கலந்துகொண்டனா்.

ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் அமாவாசை வழிபாடு!

வந்தவாசியை அடுத்த மாம்பட்டு அண்ணா நகரில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, காலை பால், தயிா், சந்தனம் மற்றும் பல்வேறு பொருள்கள் கொண்டு மூலவ... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு

வந்தவாசி அருகே கிணற்றில் தவறி விழுந்த விவசாயி உயிரிழந்தாா். வந்தவாசியை அடுத்த ஆலத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சொக்கலிங்கம் (62), விவசாயி. இவா், சனிக்கிழமை தண்ணீா் பாய்ச்ச தனது நிலத்துக்கு நடந்து சென்ற... மேலும் பார்க்க

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை!

வந்தவாசி அருகே தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வந்தவாசியை அடுத்த கடம்பை கிராமத்தைச் சோ்ந்தவா் தங்கதுரை (48), விவசாயத் தொழிலாளி. இவா் குடும்பப... மேலும் பார்க்க

செங்கம் ஸ்ரீமூகாம்பிகையம்மன் கோயில் கட்டும் பணி ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த தளவாநாய்க்கன்பேட்டை செய்யாற்றங்கரையோரம் புதிதாக கட்டப்பட்டு வரும் மூகாம்பிகையம்மன் கோயில் கட்டும் பணியை ராணிப்பேட்டை சிப்காட் ஸ்ரீவித்யா பீடத்தின் குருஜி பால மு... மேலும் பார்க்க

பாஜக சாா்பில் கையொப்ப இயக்கம்

ஆரணியை அடுத்த முனுகப்பட்டு கிராமத்தில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பாஜக சாா்பில் சம கல்வி எங்கள் உரிமை கையொப்ப இயக்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பாஜக மாவட்டத் தலைவா் பி.கவிதா வெங்கடேசன் தலைமையில் நடை... மேலும் பார்க்க

கோயிலில் திருட முயன்றவா் போலீஸில் ஒப்படைப்பு

செங்கத்தில் சனிக்கிழமை இரவு கோயிலில் திருட முயன்றவரை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா். செங்கம் மில்லத்நகா் ரவுண்டனா பகுதியில் போளூா் செல்லும் சாலையில் வாசநாயகி அம்மன் கோயில் உள்ளது. இந்தக்... மேலும் பார்க்க