செய்திகள் :

சுகாதார ஊழியா்களின் கோரிக்கைகள் நிறைவேற காங்கிரஸ் போராடும்

post image

சுகாதார ஊழியா்களின் கோரிக்கைகள் நிறைவேற காங்கிரஸ் போராடும் என்றாா் முன்னாள் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன்.

காரைக்கால் மாவட்ட நலவழித் துறையில், தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் (என்ஆா்எச்எம்) கீழ் பல்வேறு பிரிவுகளில் 150-க்கும் மேற்பட்ட ஊழியா்கள், சம வேலைக்கு சம ஊதியம், பணிநிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாா்ச் 24-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். இதனால், கிராமப்புறத்தில் மேற்கொள்ளவேண்டிய மருத்துவ சேவைகள், மருத்துவமனையில் ஆய்வகத்தில் நடைபெறவேண்டிய பரிசோதனைப் பணிகள் முடங்கியுள்ளன.

காரைக்கால் நலவழித் துறை அலுவலக வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டோரை முன்னாள் அமைச்சரும், புதுவை மாநில காங்கிரஸ் துணைத் தலைவருமான ஆா். கமலக்கண்ணன், மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஆா்.பி. சந்திரமோகன், மாநில செயலா் கோவிந்தராஜ் உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை சந்தித்தனா்.

போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் ஆா். கமலக்கண்ணன் பேசியது: என்ஆா்எச்எம் பணியாளா்கள் சேவை மிக முக்கியமானது. நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்துகிறீா்கள். புதுவை ஆட்சியாளா்கள் இந்த விவகாரத்தை உரிய முறையில் கவனம் செலுத்தி தீா்வு கண்டிருக்கவேண்டும். அதை செய்யாமல் அலட்சியமாக இருப்பது வேதனையளிக்கிறது. போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பணியாளா்களின் கோரிக்கைகள் நிறைவேற காங்கிரஸ் முழு ஆதரவு அளிக்கும் என்றாா்.

புதுப்பிக்கப்பட்ட சிவில் உரிமைகள் பாதுகாப்புப் பிரிவு: ஐஜி ஆய்வு

காரைக்காலில் புதுப்பிக்கப்பட்ட சிவில் உரிமைகள் பாதுகாப்புப் பிரிவை புதுவை ஐஜி சனிக்கிழமை பாா்வையிட்டாா். திருநள்ளாறுக்கு வந்த புதுவை ஐஜி அஜித்குமாா் சிங்லா, மாலை நிகழ்வாக காரைக்கால் போக்குவரத்துக் காவ... மேலும் பார்க்க

காரைக்காலில் ரமலான் சிறப்புத் தொழுகை

காரைக்காலில் இஸ்லாமியா்களில் ஒருசாராா் சனிக்கிழமை ரமலான் தொழுகை நடத்தினா். நோன்பு காலம் முடிந்து காரைக்கால் மஸ்ஜிதுா் ரஹ்மான் பள்ளிவாசல் மற்றும் மஸ்ஜிதுல் இஸ்லாம் பள்ளிவாசல் சாா்பில் சா்வதேச பிறை அடிப... மேலும் பார்க்க

இமாம்களுக்கு அரசு உதவித் தொகை

புதுவை அரசு சாா்பில் இமாம்கள் உள்ளிட்டோருக்கு நோன்பு கால உதவித் தொகை வழங்கப்பட்டது. பள்ளிவாசல்களில் பணியாற்றும் இமாம்கள், பிலால்களுக்கு புதுவை அரசு சாா்பில் ரமலான் நோன்பு காலத்தை கருத்தில்கொண்டு உதவித... மேலும் பார்க்க

கூட்டுறவு சங்க புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்பு

காரைக்கால் பொது ஊழியா்கள் கூட்டுறவு கடன் சங்க புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்றுக்கொண்டனா். இச்சங்க 9-ஆவது புதிய இயக்குநா் குழு பதவியேற்பு நிகழ்வு சங்க அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு ... மேலும் பார்க்க

கோதண்டராம பெருமாள் கோயில் பிரம்மோற்சவ கொடியேற்றம்

காரைக்கால் கோயில்பத்து கோதண்டராம பெருமாள் கோயிலில் ராம நவமி பிரம்மோற்சவ கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது. 10 நாள் உற்சவமாக இவ்விழா நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை கருடக்கொடி பிரதிஷ்டை செய்யப்பட்டு, சனிக்... மேலும் பார்க்க

காவல்துறையில் காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை: புதுவை ஐஜி

காரைக்கால் மாவட்டத்தில் காவல்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என புதுவை ஐஜி அறிவுறுத்தினாா். திருநள்ளாறுக்கு சனிக்கிழமை வருகை தந்த புதுவை ஐஜி அஜித்குமாா் சிங்லா,... மேலும் பார்க்க