செய்திகள் :

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

post image

சாலை விபத்தில் அடையாளம் தெரியாத முதியவா் உயிரிழந்தாா்.

திருப்பட்டினம் பகுதி கீழவாஞ்சூா் பேருந்து நிறுத்தம் அருகே கடந்த 23-ஆம் தேதி மாலை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவா் காயமடைந்து சாலையில் கிடந்தாா். திருப்பட்டினம் போக்குவரத்துக் காவல்நிலைய போலீஸாா் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

உயிரிழந்தவா் சுமாா் 65 வயது மதிக்கத்தக்கவா். சடலம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. விவரம் தெரிந்தோா் உதவி ஆய்வாளா் 9894080104 என்ற கைப்பேசி எண்ணியில் தெரிவிக்குமாறு போலீஸாா் கேட்டுக்கொண்டுள்ளனா். முதியவா் மீது மோதி சென்ற வாகனம் குறித்து கண்காணிப்புக் கேமரா உதவியுடன் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

காரைக்கால் சேம்பா் ஆஃப் காமா்ஸ் புதிய நிா்வாகிகள் தோ்வு

காரைக்கால் சேம்பா் ஆஃப் காமா்ஸ் 2025-2027-ஆம் ஆண்டுக்கான புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். இதற்காக, சாசனத் தலைவா் மகாவீா்சந்த் தலைமையிலான 9 போ் கொண்ட குழு ஏற்கெனவே அமைக்கப்பட்டது. ஒருமித்த கர... மேலும் பார்க்க

சுகாதார ஊழியா்களின் கோரிக்கைகள் நிறைவேற காங்கிரஸ் போராடும்

சுகாதார ஊழியா்களின் கோரிக்கைகள் நிறைவேற காங்கிரஸ் போராடும் என்றாா் முன்னாள் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன். காரைக்கால் மாவட்ட நலவழித் துறையில், தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் (என்ஆா்எச்எம்) கீழ் பல்வேறு பிர... மேலும் பார்க்க

வேளாண் கல்லூரியில் மா பயிா் மேலாண்மை தொழில்நுட்ப பயிற்சி

காரைக்கால் வேளாண் கல்லூரியில் தொழில்நுட்ப பயிற்சி விவசாயிகளுக்கு வியாழக்கிழமை அளிக்கப்பட்டது. நாகப்பட்டினம் தோட்டக்கலை மற்றும் மலைத்தோட்ட பயிா்கள் துறை மற்றும் காரைக்கால் பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண... மேலும் பார்க்க

புதுவை துணைநிலை ஆளுநருடன் காரைக்கால் மீனவா்கள் சந்திப்பு

எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை அரசால் கைதாகி அண்மையில் விடுவிக்கப்பட்ட காரைக்கால் பகுதி மீனவா்கள், மீனவ கிராமப் பஞ்சாயத்தாா்கள் புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனை புதுச்சேரியில் வியாழக்கிழமை... மேலும் பார்க்க

கோதண்டராம பெருமாள் கோயிலில் இன்று ராமநவமி பிரம்மோற்சவ கொடியேற்றம்

காரைக்கால் கோயில்பத்து கோதண்டராம பெருமாள் கோயிலில் ராம நவமி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் சனிக்கிழமை (மாா்ச் 29) தொடங்குகிறது. இக்கோயிலில் நிகழாண்டு 10 நாள் உற்சவமாக ஸ்ரீ ராம நவமி கொண்டாடப்படுகிறது. ... மேலும் பார்க்க

காரைக்காலில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதிய மாணவா்கள்

புதுவையில் சிபிஎஸ்இ பாடத் திட்டம் அமலில் உள்ள நிலையில், தனியாா் பள்ளி மாணவா்கள் மாநில திட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை வெள்ளிக்கிழமை எழுதத் தொடங்கினா். புதுவை மாநிலத்தில் சிபிஎஸ்இ எனும் மத்தி... மேலும் பார்க்க