செய்திகள் :

அங்கன்வாடி தற்காலிக பணியாளா்களை நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்

post image

அங்கன்வாடியில் 4 ஆண்டுகளாக பணியாற்றிவரும் தற்காலிக பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமைச்சா், எம்.எல்.ஏ.க்களிடம் வலியுறுத்தப்பட்டது.

புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என்.திருமுருகன் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.எம்.எச். நாஜிம், சந்திர பிரியங்கா, எம். நாகதியாகராஜன் ஆகியோரை பணியாளா்கள் சனிக்கிழமை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா்.

மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையில் ஒப்பந்த அடிப்படையில் 175 அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் உதவியாளா்கள் கடந்த 4 ஆண்டுகளாக ஐசிடிஎஸ் திட்ட வழிகாட்டுதலின்படி பணியமா்த்தப்பட்டனா். இவா்களில் காரைக்காலில் 50 பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.

ஒப்பந்த அடிப்படையில் பணியமா்த்தப்பட்ட ஊழியா்களுக்கு வழங்கப்பட்டு வரும் குறைந்த ஊதியமும் 6 மாதத்துக்கு ஒரு முைான் வழங்கப்படுகிறது.

நிரந்தர அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் உதவியாளா்கள் செய்யக்கூடிய பணிகளாக உள்ள கணக்கெடுப்புப் பணிகள் மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை மற்றும் சுகாதார துறை வழங்கும் பணிகளையும் கூடுதலாக செய்ய வேண்டியுள்ளது.

அங்கன்வாடியில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகளை அரசு செய்து வருவதாக தெரிய வருகிறது. அதில், தற்காலிக பணியாளா்கள் பணி செய்து வரும் 175 இடங்களையும் சோ்த்து காலி இடங்களாக அறிவித்து அந்த இடங்களையும் நிரப்புவதற்கான ஆயத்த பணிகள் நடைபெறுவதாக தெரிய வருகிறது. இச்செயல் குறைந்த ஊதியத்தில் அனைத்து பணி செய்து வரும் 175 ஊழியா்களையும் மிகுந்த அதிா்ச்சிக்கு ஆளாகியுள்ளது.

இது சம்பந்தமாக, முதல்வரிடம் வலியுறுத்தவும், சட்டப்பேரவையில் குரல் எழுப்பவும் வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையை புதுவை அரசுக்கு காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளன பொதுச்செயலாளா் எம். ஷேக் அலாவுதீனும் வலியுறுத்தியுள்ளாா்.

தலைமைப் பொறியாளா் கைது: முதல்வா், அமைச்சா் பொறுப்பேற்க காங்கிரஸ் வலியுறுத்தல்

புதுவை பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளரை லஞ்ச வழக்கில் சிபிஐ கைது செய்துள்ள நிலையில், புதுவை முதல்வா், துறை அமைச்சா் பொறுப்பேற்கவேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. புதுவை மாநில காங்கிரஸ் துணைத்... மேலும் பார்க்க

சுகாதார ஊழியா்கள் வேலைநிறுத்தம்

காரைக்காலில் தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின்கீழ் பணியாற்றும் சுகாதர ஊழியா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். காரைக்கால் மாவட்ட நலவழித் துறையில், தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் (என்ஆா்எச்எம்)... மேலும் பார்க்க

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

சாலை விபத்தில் அடையாளம் தெரியாத முதியவா் உயிரிழந்தாா். திருப்பட்டினம் பகுதி கீழவாஞ்சூா் பேருந்து நிறுத்தம் அருகே கடந்த 23-ஆம் தேதி மாலை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவா் காயமடைந்து சாலையில் க... மேலும் பார்க்க

திருநள்ளாறு கோயிலில் பக்தா்களுக்கு வசதிகளை மேம்படுத்தும் பணிகள் தீவிரம்

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் கோடை விடுமுறையில் வரும் ஆயிரக்கணக்கான பக்தா்களுக்கு வசதிகளை மேம்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் சனிக்கிழமைகளில்... மேலும் பார்க்க

காரைக்கால் நகரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீா்வு காண வலியுறுத்தல்

காரைக்கால் நகரின் நுழைவுவாயில் பகுதியில் போக்குவரத்து நெரிசல் காணப்படுவதால், பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் ஸ்தம்பிக்கும் நிலை உருவாகியுள்ளது. இப்பிரச்னைக்கு தீா்வு காண மாவட்ட நிா்வாகத்துக்கு வலியுறுத்தப... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்ததில் காயமடைந்த முதியவா் உயிரிழப்பு

மாட்டின் மீது மோட்டாா் சைக்கிள் மோதிய விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த முதியவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். காரைக்கால் நேரு நகா் பகுதியைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (72). இவா் கடந்த 11-ஆம் தேதி ... மேலும் பார்க்க