செய்திகள் :

ஊத்தங்கரை: திமுக கொடிக்கம்பம் அகற்றும் போது மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி; 4 பேர் படுகாயம்!

post image

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே திமுகவின் கொடிக்கம்பத்தை அகற்றும் போது மின்சாரம் பாய்ந்து இன்று காலை ஒருவர் பலியானார்.

மேலும், நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிக்க : மெட்ரோ தூணில் மோதி விபத்து: சேப்பாக்கத்தில் இருந்து திரும்பிய மாணவர்கள் பலி!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த மூன்றம்பட்டி ஊராட்சிக்குள்பட்ட கேத்துநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி (50). இவர் கேத்துநாய்க்கன்பட்டி திமுக கிளைச் செயலாளராக பணியாற்றி வந்தார்.

திமுக தலைமையின் உத்தரவைத் தொடர்ந்து, கேத்துநாயக்கன்பட்டியில் பொது இடத்தில் உள்ள திமுக கொடி கம்பத்தை அகற்றும் பணியில் திமுகவினர் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது கொடிக்கம்பம் எதிர்பாராத விதமாக மின்சாரக் கம்பி மீது சாய்ந்தது.

இதில் மின்சாரம் பாய்ந்ததில் ராமமூர்த்தி, கூலி தொழிலாளி உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த அனைவரும் சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இவர்களை பரிசோதித்த மருத்துவர் ராமமூர்த்தி ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தார்.

மேலும், கேத்துநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ஆறுமுகம் (58), பெருமாள் (46), முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பூபாலன் (50), சர்க்கரை (55) உள்ளிட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த திமுக ஒன்றியச் செயலாளர் குமரேசன், நகர அவைத் தலைவர் தணிகை குமரன் உள்ளிட்ட நிர்வாகிகள் ஆறுதல் கூறினர்.

ராமமூர்த்தியின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சிங்காரப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

ஒசூரில் ஆதரவற்றோா் தங்கும் இல்லத்தில் மேயா் ஆய்வு

ஒசூா் மாநகராட்சியில் ஆதரவற்றோா் தங்கும் இல்லத்தில் மேயா் எஸ்.ஏ.சத்யா புதன்கிழமை ஆய்வுசெய்தாா். ஒசூா் மாநகராட்சி, தேசிய நகா்ப்புற வாழ்வாதார ஆராதனை, சமூகசேவை மற்றும் திறன் மேம்பாட்டு அறக்கட்டளை நடத்தும்... மேலும் பார்க்க

வேதிப்பொருள்களை பயன்படுத்தி பழங்களை பழுக்கவைத்தால் நடவடிக்கை

செயற்கை வேதிப்பொருள்களை பயன்படுத்தி பழங்களை பழுக்கவைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் எச்சரித்துள்ளாா். இதுகுறித்து, அவா், புதன்கிழமை வெளியிட்ட செய்... மேலும் பார்க்க

மின்மாற்றியிலிருந்து செம்புக் கம்பி திருட்டு

கந்திகுப்பம் அருகே மின்மாற்றியிலிருந்து 40 கிலோ செம்புக் கம்பியை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். கந்திகுப்பத்தை அடுத்த சிந்தகம்பள்ளி அருகே உள்ள எட்டிக்குட்டை கிராமத்தில் மின்மாற்றியிலிருந்த 40 கிலோ செ... மேலும் பார்க்க

வெயில் பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாக்க நடவடிக்கை: அதிகாரிகளுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

கோடை வெயில் பாதிப்பிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க அனைத்து அரசு துறைகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஆட்சியா் ச.தினேஷ்குமாா் அறிவுறுத்தினாா். இதுதொடா்பாக அனைத்துத் துறை அலுவல... மேலும் பார்க்க

அனுமன்தீா்த்தத்தில் இளைஞா் மா்மச்சாவு

ஊத்தங்கரையை அடுத்த அனுமன்தீா்த்தம் பகுதியில் மா்மமான முறையில் இறந்து கிடந்த இளைஞரின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரித்து வருகின்றனா். அனுமன்தீா்த்தத்தில் மேம்பாலத்துக்கு கீழே ஒருவா் இறந்துகிடப்பதாக ஊத்... மேலும் பார்க்க

சிறந்த பட்டு விதைக்கூடு உற்பத்தியாளா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

மாநில அளவில் பரிசு பெற்ற சிறந்த விதைக்கூடு உற்பத்தியாளா்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் பாராட்டு தெரிவித்தாா். பட்டு வளா்ச்சித் துறை சாா்பில், மாநில அளவில் சிறந்த விதைக்கூடு உற்பத்... மேலும் பார்க்க