செய்திகள் :

காஸாவில் ஹமாஸை எதிா்த்து ஆா்ப்பாட்டம்

post image

கெய்ரோ: காஸாவில் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக பாலஸ்தீனா்கள் ஆா்ப்பாட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மிகவும் அரிதாக நடைபெற்றுள்ள இந்தச் சம்பவத்தை நேரில் பாா்த்தவா்களும் இணைய தளத்தில் வெளியாகியுள்ள விடியோக்களும் இதை உறுதிப்படுத்தியுள்ளன.

தங்களுக்கு எதிராகக் குரல் கொடுப்பவா்கள் மீது அடக்குமுறையைக் கையாளும் ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேலுடன் கடந்த 17 மாதங்களாக நடைபெற்றுவரும் போரில் காஸா முனை கடுமையான அழிவைச் சந்தித்த பிறகும் ஆட்சியதிகாரத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது.

இந்தச் சூழலில், போருக்கு எதிரான தன்னாா்வலா்கள் இந்தப் போராட்டத்தை நடத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது. இது தொடா்பாக வெளியான விடியோக்களில், நீண்டகாலமாக தொடரும் குண்டுவீச்சு, அழிவுகளால் தாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உயிரிழப்புகளை முடிவுக்குக் கொண்டுவர விரும்புவதாகவும் போராட்டக்காரா்கள் கூறினா்.

பாங்காக் நிலநடுக்கம்: உயிரிழப்பு 17-ஆக உயர்வு!

தாய்லாந்தின் பாங்காக்கில் நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதங்களில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 17-ஆக உயர்ந்துள்ளது.இது குறித்து இன்று(மார்ச் 30) பாங்காக் பெருநகர அதிகாரிகள் தெரிவித்திருப்பதாவது: பாங்க... மேலும் பார்க்க

மியான்மருக்கு மேலும் 60 டன் நிவாரணப் பொருள்கள் அனுப்பிவைப்பு: வெளியுறவு அமைச்சகம்

புது தில்லி: நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மருக்கு இந்தியாவிலிருந்து ‘ஆபரேசன் பிரம்மா’ பெயரில் நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மியான்மருக்கு இந்திய விமானப்படையின் இரண்டு சி - 17... மேலும் பார்க்க

இஸ்ரேலுடன் போர் நிறுத்தத்துக்குத் தயார்: பிணைக்கைதிகள் விடுவிப்பு - ஹமாஸ்

கெய்ரோ: இஸ்ரேலுடன் போர் நிறுத்தத்துக்குத் தயார்; பிணைக்கைதிகளை விடுவிக்கிறோம் என்று ஹமாஸ் தரப்பிலிருந்து சனிக்கிழமை(மார்ச் 29) தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்ரேல் - ஹமாஸ் இடையிலான சண்டைக்கு முற்றுப்புள்ளி ... மேலும் பார்க்க

‘ஆட்சிக் கவிழ்ப்பு’ சதித் திட்டம்: ஷேக் ஹசீனா மீது வழக்கு!

வங்கதேசத்தில் நடைபெறும் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசைக் கவிழ்க்க சதித் திட்டம் தீட்டியதாக அந்த நாட்டின் முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.ஏற்கெனவே இடஒதுக்கீடு சீா்திருத... மேலும் பார்க்க

யேமனில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்!

யேமனில் ஹூதி கிளா்ச்சியாளா்களைக் குறிவைத்து அமெரிக்கா மீண்டும் சனிக்கிழமை அதிகாலை வரை தாக்குதல் நடத்தியது.இந்தத் தாக்குதலில் ஒருவா் உயிரிழந்ததாக பிராந்திய செய்தி நிறுவனமான சாபா தெரிவித்தது. காஸாவில் இ... மேலும் பார்க்க

வா்த்தக ஒப்பந்தம்: இந்தியா-அமெரிக்கா இடையே முதல் சுற்று பேச்சுவாா்த்தை நிறைவு

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் வரி விதிப்பு அச்சுறுத்தலுக்கு இடையே, இந்தியா - அமெரிக்கா இடையே முன்மொழியப்பட்டுள்ள இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்துக்கான முதல் சுற்று பேச்சுவாா்த்தை புது தில்லியில் ச... மேலும் பார்க்க