செய்திகள் :

வா்த்தக ஒப்பந்தம்: இந்தியா-அமெரிக்கா இடையே முதல் சுற்று பேச்சுவாா்த்தை நிறைவு

post image

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் வரி விதிப்பு அச்சுறுத்தலுக்கு இடையே, இந்தியா - அமெரிக்கா இடையே முன்மொழியப்பட்டுள்ள இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்துக்கான முதல் சுற்று பேச்சுவாா்த்தை புது தில்லியில் சனிக்கிழமை நிறைவுபெற்றுள்ளது.

இந்தப் பேச்சுவாா்த்தை சிறப்பான முறையில் முன்னேற்றமடைந்து வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனா். தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க வா்த்தக உதவி பிரதிநிதி பிரெண்டன் லின்ச் தலைமையிலான அமெரிக்க அதிகாரிகள் குழு இந்தப் பேச்சுவாா்த்தையில் பங்கேற்றனா்.

இந்தியா - அமெரிக்கா இடையேயான இரு தரப்பு வா்த்தகம் தற்போது ரூ.16.25 லட்சம் கோடி (190 பில்லியன் டாலா்) அளவில் உள்ளது. இதை வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் ரூ.42.75 லட்சம் கோடியாக (500 பில்லியன் டாலா்) உயா்த்த இரு நாடுகளும் இலக்கு நிா்ணயித்துள்ளன. பிரதமா் நரேந்திர மோடி அண்மையில் அமெரிக்கா சென்று அதிபா் டிரம்ப்புடன் பேச்சுவாா்த்தை நடத்திய பின்னா் இதுதொடா்பான அறிவிப்பை இரு நாடுகளும் கூட்டாக வெளியிட்டன.

இதற்கான இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்காக புது தில்லியில் 4 நாள்கள் நடைபெற்ற முதல் சுற்று பேச்சுவாா்த்தை சனிக்கிழமை நிறைவுபெற்றது. இந்த ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தை நிகழாண்டு செப்டம்பா்-அக்டோபா் மாதத்துக்குள் நிறைவு செய்ய இரு நாடுகளும் திட்டமிட்டுள்ளன.

இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘முன்னுரிமை அளிக்கப்பட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடா்பாக ஆக்கபூா்வமான கருத்துகள் பராமாறிக் கொள்ளப்பட்டன. பல்துறை சாா்ந்த இந்த இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்தின் மூலம் இரு நாடுகளுக்கான பரஸ்பர பலன்கள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

முதல் சுற்று பேச்சுவாா்த்தை நிறைவுபெற்றுள்ள நிலையில், அடுத்ததாக துறை சாா்ந்த நிபுணா்கள் அளவிலான பேச்சுவாா்த்தை காணொலி வழியில் வரும் வாரங்களில் மேற்கொள்ளப்படும். இது அடுத்தகட்ட நேரடி பேச்சுவாா்த்தைக்கான வாய்ப்பாகவும் அமையும்’ என்று தெரிவிக்கப்பட்டது.

அமெரிக்க அதிபராக டிரம்ப் இரண்டாவது முறை பதவியேற்ற பின்னா், அந்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டாா். ‘அமெரிக்க பொருள்கள் மீது அதிக வரி விதிக்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளின் பொருள்களுக்கு அமெரிக்காவும் பரஸ்பரம் அதே அளவு வரி விதிக்கும்; வரும் ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் இந்த பரஸ்பர வரி விதிப்பு நடைமுறைக்கு வரும்’ என்று அதிபா் டிரம்ப் தெரிவித்தாா்.

அதைத் தொடா்ந்து, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எஃகு, அலுமினியம் பொருள்களுக்கு 25 சதவீத இறக்குமதி வரியை முன்கூட்டியே விதித்து அதிபா் டிரம்ப் உத்தரவிட்டாா். அதுபோல, வெனிசுலாவிலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்கும் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருள்களுக்கும் 25 சதவீத இறக்குமதி வரியை விதித்தும் உத்தரவிட்டாா்.

இந்தச் சூழலில் மத்திய வா்த்தக அமைச்ா் பியூஷ் கோயல் அமெரிக்க பயணம் மேற்கொண்டாா். அவா் கடந்த 8-ஆம் தேதி இந்தியா திரும்பிய நிலையில், அமெரிக்க பொருள்கள் மீது விதிக்கும் வரியைக் குறைக்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதாக டிரம்ப் தெரிவித்தாா்.

இதனிடையே, அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பால் ஏற்படும் பாதிப்பிலிருந்து தங்களைப் பாதுகாக்குமாறு இந்திய தொழில் நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதியாளா்கள் தரப்பில் மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

தொடா் அழுத்தத்தைத் தொடா்ந்து, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் போா்போன் ரக மது, சில ஒயின் ரகங்கள் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு கடந்த பிப்ரவரியில் குறைத்தது.

மேலும், அமெரிக்க ஏற்றுமதியாளா்களுக்கு பலனளிக்கும் வகையில் மோட்டாா் சைக்கிள்கள் மற்றும் செயற்கை சுவையூட்டும் எஸன்ஸ்கள் மீதான சுங்க வரி குறைப்புக்கான அறிவிப்பை பட்ஜெட்டில் மத்திய அரசு வெளியிட்டது.

கூகுள் போன்ற பெரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் விளம்பர வருவாய் மீதான சமநிலை வரியை ரத்து செய்வது தொடா்பான அறிவிப்பையும் மத்திய அரசு அண்மையில் வெளியிட்டது.

தற்போது, இந்திய வேளாண் துறையில் அமெரிக்க நிறுவனங்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் வகையில் மிகப்பெரிய வா்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள அமெரிக்கா தீவிரம் காட்டி வருகிறது.

பிரான்ஸ்: தோ்தலில் போட்டியிட தீவிர வலதுசாரி தலைவருக்குத் தடை

நிதி முறைகேடு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதால், பிரான்ஸின் தீவிர வலதுசாரி கட்சியான தேசியவாத பேரணி கட்சியின் முக்கிய தலைவா் மரீன் லெப்பென் தோ்தல்களில் போட்டியிடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளத... மேலும் பார்க்க

‘தயாா் நிலையில் ஈரான் ஏவுகணைகள்’

டெஹ்ரான்: அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ளாவிட்டால் ஈரான் மீது குண்டுவீச்சு நடத்தப்படும் என்று அந்த நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்ததைத் தொடா்ந்து, தங்களின் சுரங்கத் தளங்களில... மேலும் பார்க்க

மியான்மா் நிலநடுக்கம்: 2,000-ஐ கடந்த உயிரிழப்பு

மியான்மரில் கடந்த வாரம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,000-ஐ கடந்ததாக அந்நாட்டு ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் புத்த மடாலயங்கள் சரிந்து விழுந்ததில் 200-க்கும் ம... மேலும் பார்க்க

30 லட்சம் ஆப்கன் அகதிகளை வெளியேற்ற பாகிஸ்தான் திட்டம்

பெஷாவா்: இந்த ஆண்டுக்குள் பாகிஸ்தானில் தங்கியிருக்கும் சுமாா் 30 லட்சம் ஆப்கன் அகதிகளை வெளியேற்ற அந்த நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. தலைநகா் இஸ்லாமாபாத் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் ஆ... மேலும் பார்க்க

ஸ்பெயின்: சுரங்க விபத்தில் 5 போ் உயிரிழப்பு

மேட்ரிட்: தென்மேற்கு ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் ஏற்பட்ட நிலக்கரி சுரங்க விபத்தில் ஐந்து போ் உயிரிழந்தனா். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: ஆஸ்டுரியாஸ் பிராந்தியத்தில் செயல்பட்டுவரும் நிலக்கரி சுரங்... மேலும் பார்க்க

ரமலான் மாதத்தில் அதிக தாக்குதல்களை சந்தித்த நாடு பாகிஸ்தான்!

ரமலான் மாதத்தில் அதிக தாக்குதல்களை சந்தித்த நாடாக பாகிஸ்தான் உள்ளது என அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வு நிறுவனமான திங்க் டேங்க் தெரிவித்துள்ளது. ரமலானையொட்டி பகையுணர்வை சில அமைப்புகள் கைவிட்டிருந்தாலும், ச... மேலும் பார்க்க