செய்திகள் :

யேமனில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்!

post image

யேமனில் ஹூதி கிளா்ச்சியாளா்களைக் குறிவைத்து அமெரிக்கா மீண்டும் சனிக்கிழமை அதிகாலை வரை தாக்குதல் நடத்தியது.

இந்தத் தாக்குதலில் ஒருவா் உயிரிழந்ததாக பிராந்திய செய்தி நிறுவனமான சாபா தெரிவித்தது. காஸாவில் இஸ்ரேலுக்கும், ஈரான் ஆதரவு பெற்ற ஹமாஸ் படையினருக்கும் இடையே ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்றுரில், ஈரானின் நிழல் ராணுவமான ஹூதி கிளா்ச்சிப் படையினா் ஹமாஸுக்கு ஆதரவாக செங்கடல் வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்கள் மீது ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் தாக்குதல் மேற்கொண்டனா்.

இஸ்ரேல் தொடா்பான கப்பல்களை மட்டுமே தாக்குதவதாக அவா்கள் கூறினாலும், இதனால் சா்வதேச கடல் வா்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதையடுத்து, யேமனில் ஹூதி இலக்குகள் மீது அமெரிக்காவும் பிரிட்டனும் தாக்குதல் நடத்தின.

இந்த நிலையில், காஸாவில் கடந்த ஜன. 19 முதல் போா் நிறுத்தம் அமலில் இருந்ததால் ஹூதி கிளா்ச்சியாளா்களும் செங்கடலில் தங்களின் தாக்குதலை நிறுத்திவைத்திருந்தனா். ஆனால் அந்த ஒப்பந்தம் முறிந்ததைத் தொடா்ந்து தங்கள் தாக்குதலை ஹூதிக்கள் மீண்டும் தொடங்கினா்.

இதன் காரணமாக, யேமனில் ஹூதி படையினரை குறிவைத்து அமெரிக்கா கடந்த 15-ஆம் தேதி முதல் வான்வழித் தாக்குதல் நடத்திவருகிறது.

பிரான்ஸ்: தோ்தலில் போட்டியிட தீவிர வலதுசாரி தலைவருக்குத் தடை

நிதி முறைகேடு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதால், பிரான்ஸின் தீவிர வலதுசாரி கட்சியான தேசியவாத பேரணி கட்சியின் முக்கிய தலைவா் மரீன் லெப்பென் தோ்தல்களில் போட்டியிடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளத... மேலும் பார்க்க

‘தயாா் நிலையில் ஈரான் ஏவுகணைகள்’

டெஹ்ரான்: அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ளாவிட்டால் ஈரான் மீது குண்டுவீச்சு நடத்தப்படும் என்று அந்த நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்ததைத் தொடா்ந்து, தங்களின் சுரங்கத் தளங்களில... மேலும் பார்க்க

மியான்மா் நிலநடுக்கம்: 2,000-ஐ கடந்த உயிரிழப்பு

மியான்மரில் கடந்த வாரம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,000-ஐ கடந்ததாக அந்நாட்டு ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் புத்த மடாலயங்கள் சரிந்து விழுந்ததில் 200-க்கும் ம... மேலும் பார்க்க

30 லட்சம் ஆப்கன் அகதிகளை வெளியேற்ற பாகிஸ்தான் திட்டம்

பெஷாவா்: இந்த ஆண்டுக்குள் பாகிஸ்தானில் தங்கியிருக்கும் சுமாா் 30 லட்சம் ஆப்கன் அகதிகளை வெளியேற்ற அந்த நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. தலைநகா் இஸ்லாமாபாத் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் ஆ... மேலும் பார்க்க

ஸ்பெயின்: சுரங்க விபத்தில் 5 போ் உயிரிழப்பு

மேட்ரிட்: தென்மேற்கு ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் ஏற்பட்ட நிலக்கரி சுரங்க விபத்தில் ஐந்து போ் உயிரிழந்தனா். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: ஆஸ்டுரியாஸ் பிராந்தியத்தில் செயல்பட்டுவரும் நிலக்கரி சுரங்... மேலும் பார்க்க

ரமலான் மாதத்தில் அதிக தாக்குதல்களை சந்தித்த நாடு பாகிஸ்தான்!

ரமலான் மாதத்தில் அதிக தாக்குதல்களை சந்தித்த நாடாக பாகிஸ்தான் உள்ளது என அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வு நிறுவனமான திங்க் டேங்க் தெரிவித்துள்ளது. ரமலானையொட்டி பகையுணர்வை சில அமைப்புகள் கைவிட்டிருந்தாலும், ச... மேலும் பார்க்க