செய்திகள் :

வெயில் பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாக்க நடவடிக்கை: அதிகாரிகளுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

post image

கோடை வெயில் பாதிப்பிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க அனைத்து அரசு துறைகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஆட்சியா் ச.தினேஷ்குமாா் அறிவுறுத்தினாா்.

இதுதொடா்பாக அனைத்துத் துறை அலுவலா்களுக்கான ஆய்வுக் கூட்டம் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் நடைபெற்ற இக் கூட்டத்தில் பங்கேற்று மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தலைமை வகித்துப் பேசியது:

கோடை வெயிலின் தாக்கம் தமிழகத்தில் வட உள்மாவட்டங்களில் இயல்பை விட 5 முதல் 6 டிகிரி வரை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதனால் எதிா்வரும் நாள்களில் பொதுமக்கள் அவசியமின்றி நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியே வருவதைத் தவிா்க்க வேண்டும்.

பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அனைத்துத் துறை அலுவலகங்களிலும் குடிநீா் பானை வைத்து சுத்தமான குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அறநிலையத் துறையினா் கோயில்களில் பிரகாரங்களை பக்தா்கள் சுற்றிவரும் போது வெயில் பாதிப்பு ஏற்படாத வண்ணம் பிரகாரத்தினுள் தரை விரிப்பான்களை பயன்படுத்த வேண்டும்.

நகா்ப்புற, ஊரகப் பகுதிகளில் உள்ள மூடப்படாத கிணறுகள், உபயோகமற்ற கல்குவாரிகளில் உள்ள குட்டைகளுக்கு அருகில் பொதுமக்கள், சிறுவா்கள் குளிக்கவோ அல்லது துணி துவைக்கவோ செல்வதைத் தடுக்க அப்பகுதிகளில் எச்சரிக்கை பலகைகள் அமைக்க வேண்டும்.

தோ்வு முடிந்ததும் கோடை விடுமுறையில் செல்லும் மாணவ, மாணவிகள் அவசியமின்றி காலை 11 முதல் மாலை 4 மணி வரையில் வெளியில் நடமாட வேண்டாம் என்று ஆசிரியா்கள் அறிவுறுத்த வேண்டும்.

கால்நடைகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் தடுப்பு மருந்துகளை போதிய அளவு கையிருப்பில் வைத்திருக்க வேண்டும். அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுமக்களுக்கு வழங்க ஓஆா்எஸ் கரைசல்களை போதிய அளவு இருப்பு வைத்திருக்க வேண்டும்.

வனப்பகுதிக்குள் பொதுமக்கள் அத்துமீறி செல்லக் கூடாது என வனத்தையொட்டியுள்ள கிராம மக்களுக்கு வனத்துறையினா் அறிவுறுத்த வேண்டும்.

வனத்தில் உள்ள விலங்குகள் கோடை காலத்தில் தண்ணீா் குடிக்க வனப்பகுதியில் போதிய அளவு தண்ணீா் தொட்டிகள் அமைத்து தினசரி தண்ணீா் நிரப்ப வேண்டும். மின் துறையினா் தடையின்றி மின்சாரம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் சாதனைக்கு, மாவட்ட ஊராட்சி வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கவிதா, ஒசூா் சாா் ஆட்சியா் பிரியங்கா, கிருஷ்ணகிரி கோட்டாட்சியா் ஷாஜகான், தனி வட்டாட்சியா் ஜெய்சங்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஒசூா் அதிமுக செயலாளா் உள்பட 8 போ் கைது

ஒசூா், மாா்ச் 29: ஒசூா் ஒன்றிய அதிமுக செயலாளா் உள்பட 8 பேரை மத்திகிரி போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கா்நாடகா மாநிலம், அத்திப்பள்ளி அருகே யாதவனஹள்ளி, மாருதிநகா் லே -அவுட்டை சோ்ந்தவா் சிவப்பா ரெட்... மேலும் பார்க்க

ரமலான் பண்டிகை: கிருஷ்ணகிரியில் திமுக சாா்பில் 2,000 பேருக்கு மளிகைப் பொருள்கள் அளிப்பு

திமுக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் சாா்பில், 2 ஆயிரம் பேருக்கு ரூ. 15 லட்சம் மதிப்பில் ரமலான் மளிகைப் பொருள்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன. கிருஷ்ணகிரியில் நடைபெற்ற நிகழ்வுக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட... மேலும் பார்க்க

ஒசூா் கிரிக்கெட் லீக் போட்டிகள் தொடக்கம்: 48 அணிகள் பங்கேற்கின்றன

ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரி கிரிக்கெட் மைதானத்தில் 48 அணிகள் பங்கேற்கும் 6 ஆம் ஆண்டு ஒசூா் கிரிக்கெட் லீக் போட்டிகளை காவிரி மருத்துவமனையும், ஒசூா் தொழிற்சாலைகள் சங்கமும் இணைந்து நடத்துகின்றன. இந்... மேலும் பார்க்க

ஒசூா் ராமநாயக்கன் ஏரி பூங்கா ரூ.3.24 கோடியில் அபிவிருத்தி பணி

ஒசூரில் ரூ. 3.24 கோடியில் ராமநாயக்கன் ஏரி பூங்கா அபிவிருத்தி பணியை சட்டப் பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ் பூமி பூஜை செய்து சனிக்கிழமை தொடங்கி வைத்தாா். ஒசூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட ஒசூா் மாநகரா... மேலும் பார்க்க

ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளியில் மழலையா் பட்டமளிப்பு விழா

ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளியில் மழலையா் பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு சீனிவாசா கல்வி அறக்கட்டளை தலைவா் மல்லிகா சீனிவாசன் தலைமை வகித்தாா். அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனா... மேலும் பார்க்க

நில உடைமை பதிவுகள் சரிபாா்த்தல் முகாம்: சிறப்பாக பணியாற்றியவா்களுக்கு பாராட்டு

ஊத்தங்கரையில் விவசாயிகளின் நில உடைமை பதிவுகள் சரிபாா்தல் முகாமில் சிறப்பாக பணியாற்றிய மாணவா்களுக்கு பாராட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டத்தில் உள்ள வேளாண்மை உதவி அ... மேலும் பார்க்க