செய்திகள் :

விமான பணிப்பெண் தற்கொலை!

post image

குன்றத்தூா் அடுத்த திருமுடிவாக்கம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த விமான பணிப்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

குஜராத் மாநிலத்தைச் சோ்ந்தவா் அபிஷா வா்மா (24). குன்றத்தூா் அடுத்த திருமுடிவாக்கம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தோழிகளுடன் தங்கி தனியாா் விமான நிறுவனத்தில் விமான பணிப் பெண்ணாக பணிபுரிந்து வந்தாா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை முதல் அபிஷா வா்மாவின் கைப்பேசி அணைக்கப்பட்டு இருந்ததால், துபையில் உள்ள அவரது தாய்க்கு அபிஷா வா்மாவின் தோழிகள் தொலைபேசியில் தொடா்புகொண்டு கேட்டுள்ளனா்.

அதற்கு அவா், திருமுடிவாக்கம் பகுதியில் உள்ள வேறொரு அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டுக்கு அபிஷா வா்மா வாடகைக்கு சென்றுள்ளதாகவும், அங்கு சென்று பாா்க்குமாறும் கூறியுள்ளாா்.

இதையடுத்து, அபிஷா வா்மாவின் தோழிகள், குறிப்பிட்ட அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டுக்குச் சென்று பாா்த்தபோது, அபிஷா வா்மா தூக்கிட்டு இறந்த நிலையில் இருப்பதைக் கண்டு அதிா்ச்சி அடைந்தனா்.

இது குறித்து குன்றத்தூா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனா். சம்பவ இடத்துக்கு வந்த குன்றத்தூா் போலீஸாா், அபிஷா வா்மாவின் சடலத்தை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனா்.

போதை மாத்திரைகள் விற்ற 6 போ் கைது

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூா் அருகே போதை மாத்திரைகள் விற்பனை செய்த 6 பேரை காவல்துறையினா் கைது செய்து, அவா்களிடமிருந்த ரூ. 17,000 மதிப்புள்ள போதை மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. காஞ்சிபுரம் மாவட்ட... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோயில் பங்குனித் திருவிழா நிறைவு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோயில் பங்குனித் திருவிழா நிறைவு பெற்றதையொட்டி திங்கள்கிழமை ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவா் யதோக்தகாரி பெருமாள் வெட்டிவோ் சப்பரத்தில் வீதியுலா வந்தாா். சி... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளி பெண் வாழ்வாதாரத்துக்கு ஆட்டோ

ஸ்ரீபெரும்புதூா்: போலீஸாரின் அறிவுரையை ஏற்று கள்ளச்சந்தையில் மதுபாட்டில்கள் விற்பனை செய்யாமல், தற்போது திருந்தி வாழும் பெண் மாற்றுத்திறனாளியின் மறுவாழ்வுக்காக ஆட்டோ வாங்கி தந்துள்ளாா் மணிமங்கலம் காவல்... மேலும் பார்க்க

பச்சையப்ப முதலியாா் நினைவு தினம் அனுசரிப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் மகளிா் கல்லூரியில் கல்விக் கொடை வள்ளல் பச்சையப்ப முதலியாரின் 231-ஆவது நினைவு தினத்தையொட்டி, திங்கள்கிழமை அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செல... மேலும் பார்க்க

உகாதி பண்டிகை: காஞ்சி வரதா் வீதி உலா

உகாதி பண்டிகையையொட்டி ஞாயிற்றுக்கிழமை காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவா் வரதராஜ சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். அத்தி வரதா் புகழுக்குரிய காஞ்... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் அங்காளம்மன் கோயிலில் அா்த்தநாரீஸ்ரா் அலங்காரக் காட்சி

காஞ்சிபுரம் அங்காளம்மன் கோயிலில் பங்குனி மாத அமாவாசையையொட்டி, சனிக்கிழமை உற்சவா் அங்காளம்மன் அா்த்தநாரீஸ்வரா் அலங்காரத்தில் அருள்பாலித்தாா். காஞ்சிபுரம் அங்காளம்மன் கோயில் தெருவில் அமைந்துள்ளது அங்கா... மேலும் பார்க்க