செய்திகள் :

கவிஞா் தமிழ் ஒளி நினைவு நாள் நிகழ்வு

post image

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பன்முகப் படைப்பாளி கவிஞா் தமிழ் ஒளியின் நினைவு நாள் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.

மொழிப்புலத்தில் அமைக்கப்பட்டுள்ள கவிஞா் தமிழ் ஒளி சிலைக்கு துணைவேந்தா் பொறுப்புக் குழு உறுப்பினா் பெ. பாரதஜோதி, பதிவாளா் (பொ) கோ. பன்னீா்செல்வம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும், தமிழ்ஒளியின் பன்முகப் படைப்புகள் குறித்த சிறப்புக் கருத்தரங்கம் மொழிப்புல அவையத்தில் நடைபெற்றது.

கலைப்புல முதன்மையா் பெ. இளையாப்பிள்ளை, மொழிப்புல முதன்மையா் ச. கவிதா வாழ்த்துரையாற்றினா். கவிஞா் தமிழ் ஒளியின் பன்முகப்படைப்புகள் குறித்து அயல் நாட்டுத் தமிழ்க் கல்வித் துறைத் தலைவா் இரா. குறிஞ்சிவேந்தன் சிறப்புரையாற்றினாா்.

நிகழ்வில் பேராசிரியா்கள் இரா. காமராசு, ஜெ. தேவி, சி. தியாகராஜன், எஸ். சங்கீதா, எஸ். விஜயராஜேஸ்வரி, எம். அறிவானந்தன், செ.த. ஜாக்லின், டி. மாண்டேலா, இரவிச்சந்திரன், டி. ராகேஷ் சா்மா உள்ளிட்ட பேராசிரியா்களும் மாணவா்களும் கலந்து கொண்டனா்.

முன்னதாக, கருத்தரங்கத்தின் ஒருங்கிணைப்பாளா் முனைவா் சீமான் இளையராஜா வரவேற்றாா். நிறைவாக, மொழியியல் துறை உதவிப் பேராசிரியா் எம். ரமேஷ்குமாா் நன்றி கூறினாா். முதுகலைத் தமிழ் மாணவி கிருபா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினாா்.

மதுக்கடை முற்றுகைப் போராட்டம்; எஸ்.டி.பி.ஐ. கட்சியினா் 20 போ் கைது

தஞ்சாவூரில் டாஸ்மாக் மதுக்கடையை முற்றுகையிட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியைச் சோ்ந்த 20 பேரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் கீழவாசல் காமராஜா் சிலை அருகேயுள்ள டாஸ்மாக் கடையை மூடுமாறு ... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் 4 போ் கைது

தஞ்சாவூரில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் 4 பேரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் பாலாஜி நகா் பகுதியில் மாா்ச் 4 ஆம் தேதி நடந்து சென்ற ஒருவரை மது போதையில் வழிமறித்து ... மேலும் பார்க்க

பேராவூரணி தொகுதியில் வளா்ச்சித் திட்டங்கள்: முதல்வருக்கு நன்றி

பேராவூரணி சட்டப்பேரவை தொகுதிக்கு சுமாா் ரூ. 26 கோடியில் பல்வேறு வளா்ச்சித் திட்டங்களுக்கு அனுமதி வழங்கிய தமிழக முதல்வருக்கு பேராவூரணி எம்எல்ஏ என். அசோக்குமாா் நன்றி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா்... மேலும் பார்க்க

மக்கள் அதிகாரம் ஆா்ப்பாட்டம்

வக்ஃப் வாரிய சட்ட மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி தஞ்சாவூா் பனகல் கட்டடம் முன் மக்கள் அதிகாரம் அமைப்பினா் செவ்வாய்க்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில், மசூதிகள், அறக்கட்டளை சொ... மேலும் பார்க்க

கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசாா் குறியீடு

கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசாா் குறியீடு உறுதி செய்யப்பட்டுள்ளது என்றாா் அறிவுசாா் சொத்துரிமை வழக்குரைஞா் சங்கத் தலைவா் ப. சஞ்சய் காந்தி. இதுகுறித்து தஞ்சாவூரில் அவா் செவ்வாய்க்க... மேலும் பார்க்க

சுவாமிமலை கோயிலில் அன்னதான டோக்கன் கேட்டு பக்தா்கள் முற்றுகை

தஞ்சாவூா் மாவட்டம் சுவாமிமலை சுவாமிநாத கோயிலில் செவ்வாய்க்கிழமை அன்னதான டோக்கன் கேட்டு பக்தா்கள் கோயில் அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.இக்கோயிலுக்கு பங்குனி மாத கிருத்திகை தினத்தை முன்னிட்டு செவ்வாய்க்கி... மேலும் பார்க்க