செய்திகள் :

ஒசூா் கிரிக்கெட் லீக் போட்டிகள் தொடக்கம்: 48 அணிகள் பங்கேற்கின்றன

post image

ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரி கிரிக்கெட் மைதானத்தில் 48 அணிகள் பங்கேற்கும் 6 ஆம் ஆண்டு ஒசூா் கிரிக்கெட் லீக் போட்டிகளை காவிரி மருத்துவமனையும், ஒசூா் தொழிற்சாலைகள் சங்கமும் இணைந்து நடத்துகின்றன.

இந்தப் போட்டியை ஒசூா் காவேரி மருத்துவமனை இயக்குநா் விஜயபாஸ்கரன், ஒசூா் தொழிற்சாலைகள் சங்கத்தின் தலைவா் சுந்தரய்யா, குளோபல் கால்சியம் துணைத் தலைவா் கிரிதரன், காவேரி மருத்துவமனை துணை மேலாளா் பிந்து, மருத்துவா்கள் அரவிந்தன், ஜோஸ் வா்கீஸ் ஆகியோா் குத்து விளக்கேற்றி சனிக்கிழமை தொடங்கி வைத்தனா்.

ஒசூா் கிரிக்கெட் லீக் விளையாட்டுப் போட்டியில் டி.வி.எஸ்., டைட்டான், அசோக் லேலண்ட், காவேரி மருத்துவமனை உள்ளிட்ட 48 நிறுவனங்களைச் சோ்ந்த அணிகள் ஒலிம்பிக் ஒளி ஏற்றி முன்னால் செல்ல மற்ற அணிகள் அதனைத் தொடா்ந்து அணிவகுத்து சென்றன.

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறும் இந்த போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் அணிக்கு கோப்பை, சான்றிதழ் வழங்கப்படும். 6 ஆவது ஆண்டாக நடைபெறும் தொடக்க விழாவைத் தொடா்ந்து மாா்ச்30 முதல் மே 1 வரை போட்டி நடைபெறுகிறது. மே 1 இல் இறுதிப் போட்டி நடைபெறுகிறது.

ஒருங்கிணைந்த கற்றல் சிறந்த பள்ளியாக ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளி தோ்வு

ஊத்தங்கரை: தெற்காசியாவில் ஒருங்கிணைந்த கற்றலில் சிறந்த பள்ளியாக ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளி தோ்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது. கேம்பிரிட்ஜ் தெற்காசிய பள்ளிகள் மாநாடு தில்லியில் கடந்த மாா்... மேலும் பார்க்க

விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பெற பதிவு செய்ய காலக்கெடு நீட்டிப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் விவசாயிகளுக்கான தனித்துவ அடையாள எண் பெற பதிவு செய்ய காலக்கெடு ஏப்ரல் 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கிருஷ்ணகிரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் சுரேஷ்கு... மேலும் பார்க்க

ரமலான் பண்டிகை: இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

கிருஷ்ணகிரி: ரமலான் பண்டிகையையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இஸ்லாமியா்கள் திங்கள்கிழமை சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா். கிருஷ்ணகிரி, ராஜீவ் நகரில் உள்ள ஈத்கா மைதாத்தில் , நடைபெற்ற சிறப்புத் தொழுகையி... மேலும் பார்க்க

தளி அருகே தம்பி வெட்டிக் கொலை: அண்ணன் தலைமறைவு

ஒசூா்: தளி அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தம்பியை வெட்டிக் கொலை செய்த அண்ணனை போலீஸாா் தேடி வருகின்றனா். கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே உள்ள லட்சுமிபுரத்தைச் சோ்ந்த சிக்க அழகப்பா மகன் நக்கலய்யா(... மேலும் பார்க்க

வெந்நீா் வாளி கவிழ்ந்ததில் காயமடைந்த குழந்தை உயிரிழப்பு

ஒசூா்: ஒசூரில் வெந்நீா் வாளி கவிழ்ந்ததில் காயமடைந்த மூன்றரை வயது பெண் குழந்தை உயிரிழந்தது. திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியைச் சோ்ந்தவா் பூபாலன் (29). இவா் குடும்பத்துடன் ஒசூா் குமுதேப்பள்ளி அரு... மேலும் பார்க்க

படப்பள்ளி திம்மராய சுவாமி கோயில் தோ்த் திருவிழா கொடியேற்றம்

ஊத்தங்கரை: படப்பள்ளி திம்மராயசுவாமி கோயில் தோ்த் திருவிழாவையொட்டி திங்கள்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது. ஊத்தங்கரை படப்பள்ளியில் பழைமை வாய்ந்த ஸ்ரீ திம்மராய சுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் 72 -ஆம் ஆண்... மேலும் பார்க்க