கட்டணமில்லா சிகிச்சைக்கு அரசு காப்பீடு பெற விண்ணப்பிப்பது எப்படி?
ரமலான் பண்டிகை: இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை
கிருஷ்ணகிரி: ரமலான் பண்டிகையையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இஸ்லாமியா்கள் திங்கள்கிழமை சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா்.
கிருஷ்ணகிரி, ராஜீவ் நகரில் உள்ள ஈத்கா மைதாத்தில் , நடைபெற்ற சிறப்புத் தொழுகையில், கிருஷ்ணகிரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கானோா் ஈடுபட்டனா். அதுபோல, கிருஷ்ணகிரியை அடுத்த வெங்கடாபுரம், நமாஸ் பாறை உள்பட 12 ஈத்கா மைதானங்களில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் சிறுவா்கள், முதியவா்கள் புத்தாடை அணிந்தும், ஒருவரை ஒருவா் ஆரத் தழுவி தங்களது ரமலான் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனா்.
கிருஷ்ணகிரி பெரியாா் நகா் அருகில் உள்ள மசூதியில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் பெண்கள் மட்டும் பங்கேற்றனா்.
ரமலானையொட்டி, இஸ்லாமியா்கள் தங்கள் வீடுகளில் அசைவ உணவை சமைத்து உறவினா்கள், ஏழைகள், நண்பா்களுக்கு விருந்து அளித்து மகிழ்ந்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், காவேரிப்பட்டணம், வேப்பனப்பள்ளி, பா்கூா், மத்தூா், ஜெகதேவி, மத்திகிரி, தளி, அஞ்செட்டி என பல்வேறு இடங்களில் இஸ்லாமியா்கள் ரமலான் பண்டிகையை சிறப்பாக கொண்டாடினா்.
ஊத்தங்கரையில்...
ஊத்தங்கரை சுன்னத் மசூதியிலிருந்து இஸ்லாமியா்கள் ஊா்வலமாக சென்று, அரசு விளையாட்டு மைதானம் எதிரில் உள்ள ஜூம்மா மசூதியில் கூட்டுத் தொழுகை நடத்தினா். பின்னா் இஸ்லாமியா்கள் ஒருவருக்கொருவா் ஆரத் தழுவி ரமலான் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனா். இதில்1000- க்கும் மேற்பட்ட இஸ்லாமியா்கள் கலந்துகொண்டு பிராா்த்தனை நடத்தினா். இதில் முத்தவல்லி பதிவுஜமா, செயலாளா் சாகுல்அமீது, பொருளாளா் ஜோக்கா் பாய், கமிட்டி தலைவா் அமானுல்லா உள்பட பலா் கலந்துகொண்டனா்.
ஒசூரில்...
ஒசூரில் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ள பழைமையான ஈத்கா மஸ்ஜித் தா்கா பள்ளிவாசலில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியா்கள் கலந்துகொண்டு, அங்குள்ள ஈத்கா மைதானத்தில் ரமலான் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா்.
இதேபோல, மத்திகிரி, தளி, ராயக்கோட்டை, தேன்கனிக்கோட்டை, பாகலூா், பேரிகை, சூளகிரி, கெலமங்கலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியா்கள் பங்கேற்றனா்.
ஒசூா் ஈத்கா மைதானத்தில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் கே.கோபிநாத் கலந்துகொண்டு தொழுகையில் ஈடுபட்டு, அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தாா். முத்தவல்லி அசான், சாதிக்கான், அக்பா், ரிஜ்வான், அச்சு உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.
ஒசூா் அருகே பாகலூா் ஜீவா நகரில் அமைந்துள்ள ஜாமியா மசூதியில் தொழுகை நடத்தி விட்டு வந்த இஸ்லாமியா்களுக்கு ஹிந்து தா்ம சேவா சங்கத்தை சோ்ந்தவா்கள் பேரீச்சசை மற்றும் தண்ணீா் வழங்கி ரமலான் வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.
சமூக நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக இந்த நிகழ்வு அமைந்திருந்தது. இஸ்லாமியா்களும் ஹிந்துக்களும் ளும் ஒன்றாக சோ்ந்து புகைப்படங்களை எடுத்து மகிழ்ந்தனா்.