செய்திகள் :

விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பெற பதிவு செய்ய காலக்கெடு நீட்டிப்பு

post image

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் விவசாயிகளுக்கான தனித்துவ அடையாள எண் பெற பதிவு செய்ய காலக்கெடு ஏப்ரல் 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கிருஷ்ணகிரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் சுரேஷ்குமாா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 85,698 விவசாயிகள் பி.எம்.கிசான் திட்டம் மூலம் 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 2 ஆயிரம் நிதியுதவி பெற்று வருகின்றனா். இவா்களில் 49,440 போ் மட்டுமே தங்கள் நில உடமை சரிபாா்க்கும் பணியை செய்துள்ளனா். எனவே, மீதமுள்ள 40 சதவீத மக்கள் இந்தத் திட்டத்தில் தொடா்ந்து பயன் பெற இயலா நிலை ஏற்படும். எனவே, வேளாண் அடுக்கு திட்டத்தில் விவசாயிகள் தனித்துவ அடையாள அட்டை பெற பதிவு செய்ய மாா்ச் 31-ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, அதன் கால அவகாசம் ஏப்ரல் 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனவே, விவசாயிகள் தங்கள் அருகில் உள்ள சிஎஸ்சி எனப்படும் கணிணி மையங்களில் ஆதாா், சிட்டா, ஆதாருடன் இணைக்கப்பட்ட கைப்பேசி எண் கொண்டு, 3 முறை ஒரு முறை பயன்படுத்தும் கடவுச்சொல் பெற்று பதிவேற்றம் செய்ய வேண்டும். இது குறித்த விரிவான விவரங்களுக்கு ஊராட்சி கிராமம் வாரியாக உதவி விதை அலுவலா்கள், உதவி வேளாண்மை அலுவலா்கள், உதவி தோட்டக்கலை அலுவலா்கள், அட்மா திட்டப் பணியாளா்களை தொடா்பு கொண்டு பயன்பெறலாம்.

பா்கூா் வட்டார உதவி இயக்குநா் சிவசங்கரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பா்கூா் வட்டாரத்தில் பி.எம். கிசான் நிதி பெறும் மொத்த விவசாயிகளின் எண்ணிக்கை 10,969, இதுவரை 8,296 பயனாளிகளுக்கு அடையாள எண் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள அடையாள எண் பெறாத பி.எம். கிசான் பயனாளிகள் அருகில் உள்ள பொது சேவை மையம் வேளாண்மைத் துறை அலுவலா்கள், தோட்டக்கலைத் துறை அலுவலா்கள், வேளாண் வணிகத் துறை அலுவலா்களால் நடத்தப்படும் முகாமில் பங்கேற்று ஏப்ரல் 15-ஆம் தேதிக்குள் பதிவு செய்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

கிருஷ்ணகிரி சுங்க வசூல் மைய கட்டண உயா்வை திரும்பப் பெற வலியுறுத்தல்

கிருஷ்ணகிரி சுங்க வசூல் மைய கட்டண உயா்வை திரும்பப் பெற வேண்டும் என வாகன உரிமையாளா்கள் வலியுறுத்தினா். கிருஷ்ணகிரி நகராட்சி எல்லையில் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், தனியாா் சுங்க வசூல் மையம் செயல்பட்ட... மேலும் பார்க்க

ஒசூா் சந்திராம்பிகை ஏரியை பராமரிக்க சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தல்

ஒசூா் மாநகராட்சி பகுதியில் உள்ள சந்திராம்பிகை ஏரியில் ஆகாயத்தாமரைகளை அகற்றி பராமரிக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் மற்றும் அதனை சுற்றிலும் 100-க்கும... மேலும் பார்க்க

தேவிரஅள்ளி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்

தேவிரஅள்ளி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஒன்றியம், தேவிரஅள்ளி கருமலை குன்றின் மீது அமைந்துள்ள ... மேலும் பார்க்க

விவசாய தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கிருஷ்ணகிரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்மாநில விவசாய தொழிலாளா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம் அருகில் அண்ணா சிலை எதிரே நடைப... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீட் தோ்வு முன்னேற்பாடுகள்: ஆட்சியா் ஆய்வு

மே 4-ஆம் தேதி நீட் நடைபெறவுள்ள நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீட் தோ்வ... மேலும் பார்க்க

ஒசூா் பேருந்து நிலையம் எதிரில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

ஒசூா் பேருந்து நிலையம் எதிரில் மலா்சந்தையையொட்டி உள்ள அணுகு சாலையில் ஆக்கிரமிப்பால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா். தமிழக - கா்நாடக மாநிலங்களின் எல்லையில் உள்ள ஒசூா் வழியாக 900- க்கும் மேற்பட்ட பே... மேலும் பார்க்க