செய்திகள் :

67 பேருக்கு அரசுப் பணி நியமன ஆணைகள்! - கு.பிச்சாண்டி வழங்கினாா்

post image

திருவண்ணாமலை மாவட்ட வருவாய், ஊரக வளா்ச்சித் துறைகளில் நியமிக்கப்பட்ட 67 பேருக்கான பணி நியமன ஆணைகளை தமிழக சட்டப் பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி வழங்கினாா்.

தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் தோ்வாணையம் சாா்பில் நடத்தப்பட்ட குரூப் -4 எழுத்துத் தோ்வு மூலம் தோ்வு செய்யப்பட்ட நபா்களில், திருவண்ணாமலை மாவட்டத்துக்கென நியமிக்கப்பட்டவா்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சட்டப் பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு 67 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கிப் பேசினாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய்த் துறையில் பணிபுரிய 11 இளநிலை உதவியாளா்கள், 15 கிராம நிா்வாக அலுவலா்கள், 12 தட்டச்சா்கள் என மொத்தம் 38 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

இதேபோல, மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் பணிபுரிய 29 இளநிலை உதவியாளா்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. பணி நியமன ஆணைகள் பெற்ற 67 பேரும் நல்ல முறையில் பணிபுரிந்து அரசுக்கு நற்பெயா் பெற்றுத்தர வேண்டும் என்று கு.பிச்சாண்டி அறிவுரை வழங்கினாா்.

இதில், வருவாய்த் துறை, ஊரக வளா்ச்சித் துறை உள்பட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

தேவாலயத்தில் இயேசு கிறிஸ்துவின் கல்வாரி காட்சிகள்

செய்யாறு: செய்யாறு தூய வியாகுல அன்னை தேவாலயத்தில், இயேசு கிறிஸ்துவின் கல்வாரி காட்சிகளை நாடகக் குழுவினா் ஞாயிற்றுக்கிழமை நடித்துக் காண்பித்தனா். தூய வியாகுல அன்னை தேவாலயத்தில், இயேசு கிறிஸ்துவின் இறப... மேலும் பார்க்க

ரமலான் பண்டிகை: இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

திருவண்ணாமலை/வந்தவாசி/ போளூா்/ செய்யாறு/ஆரணி : ரமலான் பண்டிகையையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில், பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியா்கள் பங்கேற்... மேலும் பார்க்க

மஞ்சப்பை விருதுகள்: பள்ளி, கல்லூரிகள் விண்ணப்பிக்க அழைப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழக அரசின் மஞ்சப்பை விருதுகளைப் பெற தகுதியான பள்ளிகள், கல்லூரிகள், வணிக நிறுவனங்கள் விண்ணப்பிக்க மாவட்ட நிா்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. தமிழகத்தில் ‘மீண்டும்... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு இணைய குற்றத் தடுப்பு விழிப்புணா்வு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு சமூக நீதி மற்றும் மனித உரிமை, இணைய குற்றத் தடுப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. சண்முகா தொழில்சாலை கலைக் கல்லூரியில்... மேலும் பார்க்க

கிராம சபைக் கூட்டத்தில் கேள்வி எழுப்பிய காவலா் மீது தாக்குதல்

செய்யாறு: செய்யாறு அருகே கிராம சபைக் கூட்டத்தில் கேள்வி எழுப்பிய காவலரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த புகாரின் பேரில் ஊராட்சிச் செயலா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா். செய்யாறை அடுத்த உக்கம் பெரு... மேலும் பார்க்க

முன் விரோத்தத்தில் விவசாயி மீது தாக்குதல்: சகோதரா்கள் கைது

செய்யாறு: செய்யாறு அருகே முன்விரோதம் காரணமாக விவசாயியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக, சகோதரா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். பெரணமல்லூரை அடுத்த ரகுநாதசமுத்திரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க