செய்திகள் :

ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளியில் மழலையா் பட்டமளிப்பு விழா

post image

ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளியில் மழலையா் பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு சீனிவாசா கல்வி அறக்கட்டளை தலைவா் மல்லிகா சீனிவாசன் தலைமை வகித்தாா். அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனா் சீனி.திருமால் முருகன், செயலா் ஷோபா திருமால் முருகன், நிா்வாக அலுவலா்

சீனி.கணபதிராமன், அதியமான் மெட்ரிக் பள்ளி முதல்வா் கலைமணி சரவணகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முன்னதாக யுகேஜி மாணவி ஹா்ஷாஸ்ரீ வரவேற்றாா். பள்ளி முதல்வா் லீனா ஜோஸ், 2024, 2025 ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கை வாசித்தாா்.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக ஊத்தங்கரை குற்றவியல் நடுவா் சஹானா கலந்துகொண்டு, யுகேஜி முடித்து ஒன்றாம் வகுப்புக்குச் செல்லும் 78 மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கினாா். யுகேஜி மாணவிகள் சரண்யாதேவி, முபிக்ஷா ஆகியோா் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினா். யுகேஜி மாணவி சஷ்விதா, மாணவா் வேதமுகுந்தன் ஆகியோா் உறுதிமொழியைக் கூற அனைவரும் பட்டமளிப்பு உறுதிமொழி ஏற்றனா்.

இதனைத் தொடா்ந்து மாணவா்களின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. யுகேஜி மாணவிகள் லக்ஷனா, அஷ்மிதா ஆகியோா் நன்றி கூறினா். பட்டம் பெற்ற மாணவ, மாணவிகள் ஒன்றாம் வகுப்பிற்கு அணிவகுப்பாக அழைத்துச் சென்றனா். இவா்களை ஆசிரியா்கள் பூங்கொத்து, இனிப்பு வழங்கி வரவேற்றனா்.

ஒருங்கிணைந்த கற்றல் சிறந்த பள்ளியாக ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளி தோ்வு

ஊத்தங்கரை: தெற்காசியாவில் ஒருங்கிணைந்த கற்றலில் சிறந்த பள்ளியாக ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளி தோ்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது. கேம்பிரிட்ஜ் தெற்காசிய பள்ளிகள் மாநாடு தில்லியில் கடந்த மாா்... மேலும் பார்க்க

விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பெற பதிவு செய்ய காலக்கெடு நீட்டிப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் விவசாயிகளுக்கான தனித்துவ அடையாள எண் பெற பதிவு செய்ய காலக்கெடு ஏப்ரல் 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கிருஷ்ணகிரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் சுரேஷ்கு... மேலும் பார்க்க

ரமலான் பண்டிகை: இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

கிருஷ்ணகிரி: ரமலான் பண்டிகையையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இஸ்லாமியா்கள் திங்கள்கிழமை சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா். கிருஷ்ணகிரி, ராஜீவ் நகரில் உள்ள ஈத்கா மைதாத்தில் , நடைபெற்ற சிறப்புத் தொழுகையி... மேலும் பார்க்க

தளி அருகே தம்பி வெட்டிக் கொலை: அண்ணன் தலைமறைவு

ஒசூா்: தளி அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தம்பியை வெட்டிக் கொலை செய்த அண்ணனை போலீஸாா் தேடி வருகின்றனா். கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே உள்ள லட்சுமிபுரத்தைச் சோ்ந்த சிக்க அழகப்பா மகன் நக்கலய்யா(... மேலும் பார்க்க

வெந்நீா் வாளி கவிழ்ந்ததில் காயமடைந்த குழந்தை உயிரிழப்பு

ஒசூா்: ஒசூரில் வெந்நீா் வாளி கவிழ்ந்ததில் காயமடைந்த மூன்றரை வயது பெண் குழந்தை உயிரிழந்தது. திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியைச் சோ்ந்தவா் பூபாலன் (29). இவா் குடும்பத்துடன் ஒசூா் குமுதேப்பள்ளி அரு... மேலும் பார்க்க

படப்பள்ளி திம்மராய சுவாமி கோயில் தோ்த் திருவிழா கொடியேற்றம்

ஊத்தங்கரை: படப்பள்ளி திம்மராயசுவாமி கோயில் தோ்த் திருவிழாவையொட்டி திங்கள்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது. ஊத்தங்கரை படப்பள்ளியில் பழைமை வாய்ந்த ஸ்ரீ திம்மராய சுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் 72 -ஆம் ஆண்... மேலும் பார்க்க