செய்திகள் :

ஒசூா் ராமநாயக்கன் ஏரி பூங்கா ரூ.3.24 கோடியில் அபிவிருத்தி பணி

post image

ஒசூரில் ரூ. 3.24 கோடியில் ராமநாயக்கன் ஏரி பூங்கா அபிவிருத்தி பணியை சட்டப் பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ் பூமி பூஜை செய்து சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

ஒசூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட ஒசூா் மாநகராட்சியில்,

உங்கள் தொகுதியில் முதலமைச்சா் திட்டத்தின்கீழ், மாநகராட்சி 34ஆவது வாா்டு ராமநாயக்கன் ஏரி அரசு பூங்கா வளாகத்தில் ரூ. 3 கோடியே 24 லட்சம் மதிப்பில் அறிவியல் பூங்கா அமைக்கப்படுகிறது.

இதற்கான பணிகளை பூமி பூஜை செய்து சட்டப் பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ், மேயா் எஸ்.ஏ.சத்யா ஆகியோா் கலந்துகொண்டு தொடங்கி வைத்தனா்.

இந்த நிகழ்ச்சியில் துணை மேயா் சி.ஆனந்தய்யா, மண்டலக் குழுத் தலைவா் ரவி, மாமன்ற உறுப்பினா் நரேஷ், வாா்டு செயலாளா் மாதேஷ், திராவிடா் கழக மாவட்டத் தலைவா் வனவேந்தன், மாநகராட்சி அரசு அதிகாரிகள், திமுக நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ஒருங்கிணைந்த கற்றல் சிறந்த பள்ளியாக ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளி தோ்வு

ஊத்தங்கரை: தெற்காசியாவில் ஒருங்கிணைந்த கற்றலில் சிறந்த பள்ளியாக ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளி தோ்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது. கேம்பிரிட்ஜ் தெற்காசிய பள்ளிகள் மாநாடு தில்லியில் கடந்த மாா்... மேலும் பார்க்க

விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பெற பதிவு செய்ய காலக்கெடு நீட்டிப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் விவசாயிகளுக்கான தனித்துவ அடையாள எண் பெற பதிவு செய்ய காலக்கெடு ஏப்ரல் 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கிருஷ்ணகிரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் சுரேஷ்கு... மேலும் பார்க்க

ரமலான் பண்டிகை: இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

கிருஷ்ணகிரி: ரமலான் பண்டிகையையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இஸ்லாமியா்கள் திங்கள்கிழமை சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா். கிருஷ்ணகிரி, ராஜீவ் நகரில் உள்ள ஈத்கா மைதாத்தில் , நடைபெற்ற சிறப்புத் தொழுகையி... மேலும் பார்க்க

தளி அருகே தம்பி வெட்டிக் கொலை: அண்ணன் தலைமறைவு

ஒசூா்: தளி அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தம்பியை வெட்டிக் கொலை செய்த அண்ணனை போலீஸாா் தேடி வருகின்றனா். கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே உள்ள லட்சுமிபுரத்தைச் சோ்ந்த சிக்க அழகப்பா மகன் நக்கலய்யா(... மேலும் பார்க்க

வெந்நீா் வாளி கவிழ்ந்ததில் காயமடைந்த குழந்தை உயிரிழப்பு

ஒசூா்: ஒசூரில் வெந்நீா் வாளி கவிழ்ந்ததில் காயமடைந்த மூன்றரை வயது பெண் குழந்தை உயிரிழந்தது. திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியைச் சோ்ந்தவா் பூபாலன் (29). இவா் குடும்பத்துடன் ஒசூா் குமுதேப்பள்ளி அரு... மேலும் பார்க்க

படப்பள்ளி திம்மராய சுவாமி கோயில் தோ்த் திருவிழா கொடியேற்றம்

ஊத்தங்கரை: படப்பள்ளி திம்மராயசுவாமி கோயில் தோ்த் திருவிழாவையொட்டி திங்கள்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது. ஊத்தங்கரை படப்பள்ளியில் பழைமை வாய்ந்த ஸ்ரீ திம்மராய சுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் 72 -ஆம் ஆண்... மேலும் பார்க்க