செய்திகள் :

புல்லட் ரயில் கட்டுமான தளத்தில் விபத்து: 25 ரயில்கள் ரத்து!

post image

அகமதாபாத் புல்லட் ரயில் கட்டுமான தளத்தில் விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து 25 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவில் முதல்முறையாக புல்லட் ரயில் திட்டம் மும்பை - அகமதாபாத் வழியே செயல்படுத்தப்படவுள்ளது. இதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில், வத்வா மற்றும் அகமதாபாத் ரயில் நிலையங்களுக்கு இடையே நடைபெற்ற புல்லட் ரயில் கட்டுமான தளத்தில் பணியின்போது பாலத்தின் மீது அமைக்கப்பட்ட இரும்பு கட்டுமானம் நேற்று இரவு 11 மணியளவில் விழுந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளது.

இதையும் படிக்க | அமலாக்கத் துறை விசாரணை வளையத்தில் சிக்கிய நீதிபதிகள்!

ரயில் தண்டவாளத்தில் இந்த விபத்து ஏற்பட்ட நிலையில் விபத்தில் யாருக்கு காயம் ஏற்படவில்லை என்றும் புல்லட் ரயிலுக்காக கட்டப்பட்ட பாலம் சேதமடையவில்லை என்றும் என தேசிய அதிவேக ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனால், ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு 25 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும், 15 ரயில்கள் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டு, 5 ரயில்கள் நேரம் மாற்றியமைக்கப்பட்டன. 6 ரயில்கள் வேறு பாதைகளுக்கு மாற்றப்பட்டன.

ராட்சத கிரேன்கள் கொண்டு ரயில் தண்டவாளத்தை சீர்செய்யும் பணியில் ரயில்வே துறை ஈடுபட்டு வருகின்றது.

சோனியா, ராகுல் எம்.பி. பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும்: பாஜக வலியுறுத்தல்

போஃபர்ஸ் ஊழல் தொடர்பாக பத்திரிகையாளர் சித்ரா சுப்ரமணியம் எழுதியுள்ள புத்தகத்தை சுட்டிக் காட்டியுள்ள பாஜக, இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்களான சோனியா காந்தியும், ராகுல் காந்தியும்... மேலும் பார்க்க

ஏழைகளுக்கு சிகிச்சை மறுத்தால் தில்லி அப்போலோ மருத்துவமனையைக் கைப்பற்ற உத்தரவிட நேரிடும்: உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்காவிட்டால், தில்லியில் உள்ள இந்திரபிரஸ்தா அப்போலா மருத்துவமனையைக் கைப்பற்றுமாறு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு உத்தரவிட நேரிடும் என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை எச்சரித்தது... மேலும் பார்க்க

கச்சத்தீவு வழக்கு: உச்சநீதிமன்றத்தில் செப்.15-இல் இறுதி விசாரணை

நமது நிருபர்கச்சத்தீவு தொடர்பாக இந்தியா- இலங்கை இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் இறுதி விசாரணைக்காக வரும் செப்.15-ஆம் தேதிக்கு வழக்கை பட்டியலிட உச்சநீதிமன்றம் செவ்வாய்க... மேலும் பார்க்க

2 ஆண்டுகளில் 12,957 கூட்டுறவு சங்கங்கள் பதிவு: அமித் ஷா

கடந்த 2 ஆண்டுகளில் வேளாண்மை, பால்வளம் மற்றும் மீன்வளம் என 12,957 புதிய கூட்டுறவு சங்கங்கள் நிறுவப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சா் அமித் ஷா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். இத... மேலும் பார்க்க

ஷிண்டே குறித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்: குணால் காம்ரா

மகாராஷ்டிர துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே குறித்த கருத்துக்காக மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று நகைச்சவை பேச்சாளா் குணால் காம்ரா தெரிவித்துள்ளாா். கடந்த ஞாயிற்றுக்கிழமை மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள ... மேலும் பார்க்க

கொதிகலன் சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த சட்டத்துக்கு மாற்றாக கொண்டு வரப்பட்ட புதிய கொதிகலன் சட்ட மசோதா-2024 மக்களவையில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பரில், நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடரின... மேலும் பார்க்க