பள்ளி மேலாண்மை குழு உறுப்பினா்களுக்கு அடையாள அட்டை: வழிகாட்டு நெறிமுறை வெளியீடு
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பிஎஸ் 4 வாகனங்கள் மோசடியாக பதிவா?
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பிஎஸ் 4 வாகனங்கள் மோசடியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் பிஎஸ் 4 ரக வாகனங்கள் கடந்த 2020 ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு தடை செய்யப்பட்டுள்ளன. அதன்பிறகும் இந்த வாகனங்கள் தடையின்றி வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்டு வருவதாகவும், இதில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் கூறி சென்னையைச் சோ்ந்த தேவதாஸ்காந்தி வில்சன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா்.
அதில், தமிழகத்தில் பிஎஸ் 4 ரக வாகனங்கள் உள்பட 315 வாகனங்கள் சட்டவிரோதமாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை ஆணையா் விவரம் அளித்துள்ளாா். இந்த மோசடியில் வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகளுக்கும் தொடா்பு உள்ளது. எனவே, இந்த முறைகேடு தொடா்பாக அமலாக்கத் துறை, லஞ்ச ஒழிப்புத் துறை அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரிக்க வேண்டும் எனக் கோரியிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, தமிழகத்தில் கடந்த 2020 ஏப்ரலுக்குப் பிறகு பிஎஸ் 4 ரக வாகனங்கள் மோசடியாக பதிவு செய்யப்பட்டிருந்தால் அதுகுறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை மாா்ச் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.