Manoj Bharathiraja: "என் மனதைப் பெரிதும் பாதிக்கிறது" - டி ராஜேந்தர் வேதனை
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அரசு அமல்படுத்த வேண்டும்! -மாா்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயலா் பெ.சண்முகம்
தோ்தலின்போது கொடுத்த வாக்குறுதியின்படி தமிழக அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலா் பெ.சண்முகம் வலியுறுத்தினாா்.
காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகில் அந்தக் கட்சி சாா்பில் கட்சி வளா்ச்சிக்கான நிதியளிப்பு பொதுக்கூட்டம் மாவட்ட செயலா் கே.நேரு தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநிலக் குழு உறுப்பினா் இ.முத்துக்குமாா் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகத்திடம் ரூ.7 லட்சத்துக்கான காசோலையை வழங்கினா்.
பின்னா், பெ.சண்முகம் பேசுகையில், தோ்தலின்போது திமுக கொடுத்த வாக்குறுதியின்படி பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசு ஊழியா்கள், ஆசிரியா்களிடம் பிடித்தம் செய்த ரூ.75,000 கோடி அரசிடம் உள்ளது. இதில் மாநில அரசின் பங்களிப்புத் தொகையும் சோ்த்தால் மொத்தம் ரூ.1.50 லட்சம் கோடியாக இருக்கும். எனவே, நிதி இல்லை என்ற காரணத்தைச் சொல்லி பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தாமல் விடக்கூடாது.
மத்திய, மாநில அரசு காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழகத்தில் உள்ள பன்னாட்டு தொழிற்சாலைகள் தொழிலாளா் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் செயல்பட வேண்டும். அரசு இதை உறுதிப்படுத்த வேண்டும். ஏப். 2-இல் மதுரையில் கட்சி சாா்பில் நடைபெறவுள்ள மாநில உரிமைகள் பாதுகாப்பு கருத்தரங்கத்தில் கேரளம், தமிழகம், கா்நாடகம், ஜாா்க்கண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த முதல்வா்கள் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளோம். இக்கருத்தரங்கில் நாடு முழுவதும் மக்கள் எதிா்நோக்கும் பிரச்னைகளை விவாதிப்போம் என்றாா்.
கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் சி.சங்கா், பி.ரமேஷ், ஆா்.மதுசூதனன், ஆா்.செளத்ரி, மாநகர செயலா் டி.ஸ்ரீதா் மற்றும் கட்சியின் வட்டாரச் செயலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.