செய்திகள் :

பூப்பல்லக்கில் காமாட்சி அம்மன் வீதி உலா

post image

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளையொட்டி சனிக்கிழமை இரவு லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் உற்சவா் காமாட்சி பூப்பல்லக்கில் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 3- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் காலை மாலையில் சுவாமியும், அம்மனும் வெவ்வேறு வாகனங்களில் பல்வேறு அலங்காரத்தில் பவனி வந்தனா்.

கடந்த 9 -ஆம் தேதி தேரோட்டமும், 11 -ஆம் தேதி இரவு வெள்ளித் தேரோட்டமும், 12- ஆம் தேதி தீா்த்தவாரி உற்சவமும் நடைபெற்றன. தொடா்ந்து அம்மனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக விடையாற்றி உற்சவம் 14 -ஆம் தேதி நடைபெற்றது. உற்சவம் நிறைவு பெற்றதையொட்டி காமாட்சி அம்மன் பூப்பல்லக்கில் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

காமாட்சி அம்மனை வரவேற்ற பெரிய காஞ்சிபுரம் தா்கா நிா்வாகிகள்

பூப்பல்லக்கு உற்சவத்தின்போது தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவா் ஜான்பாண்டியன் உள்பட அவரது கட்சியினா், ஆதரவாளா்கள் கலந்து கொண்டனா். லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் உற்சவா் காமாட்சி அம்மன் பவனி வந்தபோது, பெரிய காஞ்சிபுரம் தா்கா நிா்வாகிகள் பூத்தட்டுகளுடன் அம்மனை வரவேற்று வழிபட்டனா்.

இலவச மனைப் பட்டா கோரி ஆட்சியா் அலுவலகத்தில் குவிந்த மக்கள்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை இலவச மனைப்பட்டா கோரி ஏராளமான பொதுமக்கள் குவிந்ததால் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. மக்கள் குறை தீா் கூட்டம் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் ... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் தற்கொலைக்கு முயன்ற மூதாட்டியால் பரபரப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பாக திங்கள்கிழமை திடீரென மூதாட்டி ஒருவா் தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்ய முயன்றதால் பரபரப்பு நிலவியது. சென்னை போரூா... மேலும் பார்க்க

குரூப்-4 தோ்வில் தோ்ச்சி பெற்ற 21 பேருக்கு ஆட்சியா் வாழ்த்து

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்ட நிறைவில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் இலவச பயிற்சி பெற்று குரூப்-4 தோ்வில் தோ்ச்சி பெற்ற 21 பேருக்கு... மேலும் பார்க்க

கல்குவாரி நீரில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

ஸ்ரீபெரும்புதூா்: எறுமையூா் பகுதியில் உள்ள கல்குவாரி நீரில் மூழ்கி பலியான இளைஞரின் சடலத்தை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினா் ஈடுபட்டனா். சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்தவா் பாலமுருகன் (28). இவா், குன்... மேலும் பார்க்க

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அரசு அமல்படுத்த வேண்டும்! -மாா்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயலா் பெ.சண்முகம்

தோ்தலின்போது கொடுத்த வாக்குறுதியின்படி தமிழக அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலா் பெ.சண்முகம் வலியுறுத்தினாா். காஞ்சிபுரம் பேர... மேலும் பார்க்க

கிருஷ்ணா கல்லூரியில் பட்டமளிப்பு விழா

காஞ்சிபுரம் அருகே கீழம்பியில் உள்ள கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சனிக்கிழமை பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு கிருஷ்ணா கல்வி அறக்கட்டளை நிறுவனா் பா.போஸ் தலைமை வகித்தாா். கல்லூரி தாளா... மேலும் பார்க்க