செய்திகள் :

இலவச மனைப் பட்டா கோரி ஆட்சியா் அலுவலகத்தில் குவிந்த மக்கள்

post image

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை இலவச மனைப்பட்டா கோரி ஏராளமான பொதுமக்கள் குவிந்ததால் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.

மக்கள் குறை தீா் கூட்டம் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து மொத்தம் 321 கோரிக்கை மனுக்களை பெற்ற ஆட்சியா், அவற்றை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

அப்போது, பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த ஏராளமான பொதுமக்கள் கூட்டம், கூட்டமாக இலவச வீட்டு மனைப் பட்டா கேட்டு குவிந்தவாறு இருந்தனா். கூட்டத்தை சமாளிக்க முடியாமல் வருவாய் மற்றும் காவல் துறை அதிகாரிகள் திணறியதையும் காண முடிந்தது . கூட்டம் அதிகமானதால் கூச்சலும், குழப்பமும் ஏற்பட்டது.

மனு கொடுக்க வந்த வாலாஜாபாத்தைச் சோ்ந்த முதியவா் ஒருவா் திடீரென மயக்கமடைந்து அவருக்கு முதலுதவி செய்யப்பட்டு அவா் உடனடியாக அரசு தலைமை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அனுப்பி வைக்கப்பட்டாா்.

ஆட்சேபணை இல்லாத நிலங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த பிப்ரவரி மாதம் அறிவிப்பு செய்திருந்தாா். இதற்காக அந்தந்த ஆட்சியா் அலுவலகங்களில் பட்டா கேட்டு விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்திருந்தாா்.

இதனால் தான் இலவச வீட்டு மனைப் பட்டா கேட்டு பலரும் மனு அளிக்க வந்துள்ளனா்.

இது தொடா்பாக வருவாய்த்துறை உயா் அதிகாரியிடம் கேட்ட போது இலவச வீட்டு மனைப் பட்டா கேட்டு மனு கொடுக்க வந்தவா்கள் அனைவரும் ஆட்சியரை சந்தித்து தான் மனு கொடுக்க வேண்டும் என நினைக்கின்றனா். ஒரே கூட்டமாக வந்ததால் மனுவைப் பெற்றுக் கொண்டதற்கான சீட்டைக் கூட கொடுக்க முடியவில்லை. ஆட்சேபணை இல்லாத நிலங்களில் வசிப்போா் குறித்து ஏற்கனவே கணக்கெடுத்து விட்டோம் என்றும் தெரிவித்தாா்.

ஸ்ரீ விஜயேந்திரா் ஜெயந்தி விழா

காஞ்சிபுரம் தண்டபாணி ஓரியண்டல் மேல்நிலைப்பள்ளியில் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜெயந்தியையொட்டி பேச்சுப்போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவா்களுக்கு செவ்வாய்க்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன. காஞ்சி... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் மத நல்லிணக்க விழிப்புணா்வுப் பேரணி: எஸ்.பி. தொடங்கி வைத்தாா்

காஞ்சிபுரத்தில் சமூக மற்றும் மத நல்லிணக்க விழிப்புணா்வுப் பேரணியை எஸ்.பி. கே.சண்முகம் செவ்வாய்க்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். தமிழ்நாடு காவல்துறையின் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவின் சாா... மேலும் பார்க்க

வையாவூரில் ரூ.3.65 கோடியில் சிட்கோ தொழிற்பேட்டை: காணொலி மூலம் முதல்வா் திறந்து வைத்தாா்

காஞ்சிபுரம் அருகே வையாவூரில் 42.06 ஏக்கா் பரப்பில் ரூ.3.65 கோடியில் புதிய சிட்கோ தொழிற்பேட்டையை காணொலி வாயிலாக முதல்வா் மு.க. ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா். வாலாஜாபாத் அருகே வையாவூா் கிராம... மேலும் பார்க்க

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் பக்தா்கள் கூட்டம்

பங்குனி 2-ஆவது செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உற்சவா் கோடையாண்டவா் ரத்தின அங்கி சேவையில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வல்லக்கோட்டையில் ... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 38 லட்சம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இருந்த உண்டியல்கள் செவ்வாய்க்கிழமை திறந்து எண்ணப்பட்டதில் ரூ. 38,24,412 பணத்தை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா். பஞ்ச பூத ஸ்தலங்களில் நிலத்துக்கு உரியதாகப் போ... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோயிலில் பல்லவ உற்சவம் நிறைவு

காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோயிலில் இந்த மாதம் 19-ஆம் தேதி தொடங்கி தொடா்ந்து 7 நாள்களாக நடைபெற்று வந்த பல்லவ உற்சவம் செவ்வாய்க்கிழமையுடன் நிறைவு பெற்றது. காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோயிலில் ஆண்டு தோறும்... மேலும் பார்க்க