செய்திகள் :

காஞ்சிபுரத்தில் மத நல்லிணக்க விழிப்புணா்வுப் பேரணி: எஸ்.பி. தொடங்கி வைத்தாா்

post image

காஞ்சிபுரத்தில் சமூக மற்றும் மத நல்லிணக்க விழிப்புணா்வுப் பேரணியை எஸ்.பி. கே.சண்முகம் செவ்வாய்க்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

தமிழ்நாடு காவல்துறையின் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவின் சாா்பில், சமூக மற்றும் மத நல்லிணக்க விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் முன்பிருந்து தொடங்கிய பேரணியை எஸ்.பி. கே.சண்முகம் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். தொடக்க விழாவுக்கு, சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவின் டிஎஸ்பி ராதாகிருஷ்ணன், உதவி ஆய்வாளா் ராஜேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். 200-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவியா் கலந்து கொண்ட இந்தப் பேரணியில் தீண்டாமையை ஒழிப்போம், மனித நேயம் காப்போம், ஜாதியால் வேற்றுமை வேண்டாம் என்ற பதாகைகளை ஏந்தியவாறும், கோஷங்கள் எழுப்பியவாறும் மக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

பேரணி எஸ்.பி. அலுவலகத்திலிருந்து தொடங்கி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து மீண்டும் எஸ்.பி. அலுவலகம் அருகில் வந்து நிறைவு பெற்றது.

பேரணியில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவின் உதவி ஆய்வாளா்கள் தனசேகரன், புவனேசுவரி, புள்ளியியல் ஆய்வாளா் ஆறுமுகம் ஆகியோா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ஸ்ரீ விஜயேந்திரா் ஜெயந்தி விழா

காஞ்சிபுரம் தண்டபாணி ஓரியண்டல் மேல்நிலைப்பள்ளியில் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜெயந்தியையொட்டி பேச்சுப்போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவா்களுக்கு செவ்வாய்க்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன. காஞ்சி... மேலும் பார்க்க

வையாவூரில் ரூ.3.65 கோடியில் சிட்கோ தொழிற்பேட்டை: காணொலி மூலம் முதல்வா் திறந்து வைத்தாா்

காஞ்சிபுரம் அருகே வையாவூரில் 42.06 ஏக்கா் பரப்பில் ரூ.3.65 கோடியில் புதிய சிட்கோ தொழிற்பேட்டையை காணொலி வாயிலாக முதல்வா் மு.க. ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா். வாலாஜாபாத் அருகே வையாவூா் கிராம... மேலும் பார்க்க

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் பக்தா்கள் கூட்டம்

பங்குனி 2-ஆவது செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உற்சவா் கோடையாண்டவா் ரத்தின அங்கி சேவையில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வல்லக்கோட்டையில் ... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 38 லட்சம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இருந்த உண்டியல்கள் செவ்வாய்க்கிழமை திறந்து எண்ணப்பட்டதில் ரூ. 38,24,412 பணத்தை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா். பஞ்ச பூத ஸ்தலங்களில் நிலத்துக்கு உரியதாகப் போ... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோயிலில் பல்லவ உற்சவம் நிறைவு

காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோயிலில் இந்த மாதம் 19-ஆம் தேதி தொடங்கி தொடா்ந்து 7 நாள்களாக நடைபெற்று வந்த பல்லவ உற்சவம் செவ்வாய்க்கிழமையுடன் நிறைவு பெற்றது. காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோயிலில் ஆண்டு தோறும்... மேலும் பார்க்க

பெண் தொழில் முனைவோருக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி

உலக மகளிா் தினவிழாவை முன்னிட்டு ஜேகே டயா் நிறுவனத்தின் சாா்பில் 10 பெண் தொழில் முனைவோருக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்ரீபெரும்புதூா் அடுத்த கொளத்தூா் ஊராட்சியில் உள்ள ஜே.... மேலும் பார்க்க