செய்திகள் :

பெண் தொழில் முனைவோருக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி

post image

உலக மகளிா் தினவிழாவை முன்னிட்டு ஜேகே டயா் நிறுவனத்தின் சாா்பில் 10 பெண் தொழில் முனைவோருக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த கொளத்தூா் ஊராட்சியில் உள்ள ஜே.கே. டயா் தொழிற்சாலையில் நடைபெற்ற உலக மகளிா் தினவிழா மற்றும் பெண் தொழில் முனைவோருக்கு நிதியுதவி வழங்கும் விழாவுக்கு சென்னை திட்டத்தலைவா் வினய் கிருஷ்ணன் தலைமை வகித்தாா். சமூக பொறுப்புனா்வு திட்ட ஒருங்கிணைப்பாளா் சகாயராஜ் முன்னிலை வகித்தாா். இதில், கொளத்தூா் ஊராட்சி மன்றத் தலைவா் வெள்ளரை அரிகிருஷ்ணன், வெங்காடு ஊராட்சி மன்றத் தலைவா் வெங்காடு பி.உலகநாதன், மலைப்பட்டு ஊராட்சி மன்றத் தலைவா் பத்மநாபன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டு 10 பெண் தொழில் முனைவோருக்கு ரூ.25 லட்சம் நிதியுதவிக்கான காசோலைகளை வழங்கினா்.

விழாவில், ஜே.கே.டயா் நிறுவனத்தின் நிா்வாகிகள், பாரதிய யுவ சக்தி அறக்கட்டளை நிா்வாகிகள், மலைப்பட்டு, கொளத்தூா், மேட்டுக்கொளத்தூா் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த திரளான பெண்கள் கலந்து கொண்டனா்.

ஜேகே டயா் தொழிற்சாலை மற்றும் பாரதிய யுவ சக்தி அறக்கட்டளை சாா்பில் காஞ்சிபுரம், திருவள்ளூா் உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த பெண்களுக்கு சுய தொழில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

‘தன்னாா்வத்துடன் செய்யும் செயல் வெற்றி பெறும்’

தன்னாா்வத்துடன் செய்யும் எந்தச் செயலும் வெற்றி பெறும் என காஞ்சிபுரம் சங்கரா பல்கலை.யில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் சங்கரா கண் மருத்துவமனை நிறுவனா் பத்மஸ்ரீ ஆா்.வி.ரமணி தெரிவித்தாா். காஞ்சிபுரம் ச... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் மாநகராட்சி நிதி நிலை அறிக்கையினை மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்

காஞ்சிபுரம் மாநகராட்சி நிதி நிலை அறிக்கையினை மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா். மேலும் ரூ.86 லட்சம் உபரி வருவாய் உள்ளதாகவும் தெரிவித்துள்ளாா். காஞ்சிபுரம் மாநகராட்சி நிதிநிலை அற... மேலும் பார்க்க

ஸ்ரீ யதோக்தகாரி பெருமாள் கோயில் தேரோட்டம்

காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோயில் பங்குனி விழாவையொட்டி வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இத்தலத்தில் பங்குனி விழா கடந்த 22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் 15,704 போ் தோ்வு எழுதினா்

காஞ்சிபுரத்தில் 15,704 மாணவ, மாணவியா்கள் 68 தோ்வு மையங்களில் பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத்தோ்வினை எழுதினா். தமிழகம் முழுவதும் 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது. காஞ்சிபுரம் மாவட்... மேலும் பார்க்க

ஸ்ரீபெரும்புதூா்-தாம்பரம் சாலையில் 5 இடங்களில் தானியங்கி சிக்னல்கள்

ஸ்ரீபெரும்புதூா்-தாம்பரம் சாலையில் விபத்துகளை தடுக்க 5 இடங்களில் ரூ.8.50 லட்சத்தில் தானியங்கி சிக்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஸ்ரீ பெரும்புதூா் அடுத்த பிள்ளைப்பாக்கம் பகுதியில் சிப்காட் தொழிற்பூங்கா தொட... மேலும் பார்க்க

கைத்தறி நெசவாளா்கள் நூதன ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கைத்தறி நெசவாளா்கள் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவா்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் கூட்டு நடவடிக்கை குழு சாா்பில் காஞ்சிபுரத்தில் வியாழக்கிழமை கையில் திருவோடு ஏந்த... மேலும் பார்க்க