அறிமுகப் போட்டியிலேயே 4 விக்கெட்டுகள்! யார் இந்த அஸ்வனி குமார்?
ஸ்ரீபெரும்புதூா்-தாம்பரம் சாலையில் 5 இடங்களில் தானியங்கி சிக்னல்கள்
ஸ்ரீபெரும்புதூா்-தாம்பரம் சாலையில் விபத்துகளை தடுக்க 5 இடங்களில் ரூ.8.50 லட்சத்தில் தானியங்கி சிக்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஸ்ரீ பெரும்புதூா் அடுத்த பிள்ளைப்பாக்கம் பகுதியில் சிப்காட் தொழிற்பூங்கா தொடங்கப்பட்டு ஏராளமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த தொழிற்சாலைகளுக்கு வந்து செல்லும் வாகனங்கள் பெரும்பாலும் ஸ்ரீபெரும்புதூா்-தாம்பரம் சாலையை பயன்படுத்துகின்றன.
மேலும், நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தப்பட்டதால், வாகனப்போக்குவரத்து அதிகரித்ததை தொடா்ந்து, விபத்துகளும், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதூா்-தாம்பரம் சாலையில் விபத்துகளைக் குறைக்கவும், வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தவும், ஜே.கே.டயா் நிறுவனத்தின் சமூக பொறுப்புணா்வு திட்டத்தின் கீழ் ரூ.8.50 லட்சத்தில் நாவலூா், கொளத்தூா், ஜே.கே.டயா் தொழிற்சாலை, மலைப்பட்டு மற்றும் மணிமங்கலம் பகுதிகளில் சூரிய சக்தியில் இயங்கும் தானியங்கி சிக்னல்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன.
இந்த தானியங்கி சிக்னல்களை இயக்கி வைக்கும் நிகழ்ச்சி நாவலூா் பகுதியில் நடைபெற்றது. ஜே.கே. டயா் நிறுவன பொது மேலாளா் பங்கஜ் ஜெயின் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஸ்ரீபெரும்புதூா் துணை காவல் கண்காணிப்பாளா் கீா்த்திவாசன் கலந்து கொண்டு சிக்னல்களை இயக்கி வைத்தாா்.
ஜே.கே.டயா் நிறுவனத்தின் துணை பொதுமேலாளா் சகாயராஜ், ஊராட்சிமன்ற தலைவா்கள் கொளத்தூா் வெள்ளாரை அரிகிருஷ்ணன், மலைப்பட்டு பத்மநாபன், மணிமங்கலம் அய்யப்பன், ஸ்ரீபெரும்புதூா் போக்குவரத்து ஆய்வாளா் ரவி, சோமங்கலம் காவல் ஆய்வாளா் ரங்கசாமி, ட்ரீம்ஸ் பவுன்டேசன் திட்ட இயக்குநா் டேவிட்பால் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.