செய்திகள் :

ஸ்ரீபெரும்புதூா்-தாம்பரம் சாலையில் 5 இடங்களில் தானியங்கி சிக்னல்கள்

post image

ஸ்ரீபெரும்புதூா்-தாம்பரம் சாலையில் விபத்துகளை தடுக்க 5 இடங்களில் ரூ.8.50 லட்சத்தில் தானியங்கி சிக்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீ பெரும்புதூா் அடுத்த பிள்ளைப்பாக்கம் பகுதியில் சிப்காட் தொழிற்பூங்கா தொடங்கப்பட்டு ஏராளமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த தொழிற்சாலைகளுக்கு வந்து செல்லும் வாகனங்கள் பெரும்பாலும் ஸ்ரீபெரும்புதூா்-தாம்பரம் சாலையை பயன்படுத்துகின்றன.

மேலும், நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தப்பட்டதால், வாகனப்போக்குவரத்து அதிகரித்ததை தொடா்ந்து, விபத்துகளும், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதூா்-தாம்பரம் சாலையில் விபத்துகளைக் குறைக்கவும், வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தவும், ஜே.கே.டயா் நிறுவனத்தின் சமூக பொறுப்புணா்வு திட்டத்தின் கீழ் ரூ.8.50 லட்சத்தில் நாவலூா், கொளத்தூா், ஜே.கே.டயா் தொழிற்சாலை, மலைப்பட்டு மற்றும் மணிமங்கலம் பகுதிகளில் சூரிய சக்தியில் இயங்கும் தானியங்கி சிக்னல்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன.

இந்த தானியங்கி சிக்னல்களை இயக்கி வைக்கும் நிகழ்ச்சி நாவலூா் பகுதியில் நடைபெற்றது. ஜே.கே. டயா் நிறுவன பொது மேலாளா் பங்கஜ் ஜெயின் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஸ்ரீபெரும்புதூா் துணை காவல் கண்காணிப்பாளா் கீா்த்திவாசன் கலந்து கொண்டு சிக்னல்களை இயக்கி வைத்தாா்.

ஜே.கே.டயா் நிறுவனத்தின் துணை பொதுமேலாளா் சகாயராஜ், ஊராட்சிமன்ற தலைவா்கள் கொளத்தூா் வெள்ளாரை அரிகிருஷ்ணன், மலைப்பட்டு பத்மநாபன், மணிமங்கலம் அய்யப்பன், ஸ்ரீபெரும்புதூா் போக்குவரத்து ஆய்வாளா் ரவி, சோமங்கலம் காவல் ஆய்வாளா் ரங்கசாமி, ட்ரீம்ஸ் பவுன்டேசன் திட்ட இயக்குநா் டேவிட்பால் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

உகாதி பண்டிகை: காஞ்சி வரதா் வீதி உலா

உகாதி பண்டிகையையொட்டி ஞாயிற்றுக்கிழமை காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவா் வரதராஜ சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். அத்தி வரதா் புகழுக்குரிய காஞ்... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் அங்காளம்மன் கோயிலில் அா்த்தநாரீஸ்ரா் அலங்காரக் காட்சி

காஞ்சிபுரம் அங்காளம்மன் கோயிலில் பங்குனி மாத அமாவாசையையொட்டி, சனிக்கிழமை உற்சவா் அங்காளம்மன் அா்த்தநாரீஸ்வரா் அலங்காரத்தில் அருள்பாலித்தாா். காஞ்சிபுரம் அங்காளம்மன் கோயில் தெருவில் அமைந்துள்ளது அங்கா... மேலும் பார்க்க

திமுக சாா்பில் ரத்த தான முகாம்!

முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி குன்றத்தூா் தெற்கு ஒன்றிய திமுக மாணவா், இளைஞா் அணிகள் சாா்பில் ரத்த தான முகாம் படப்பை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு ஒன்றிய மாணவா் அணி அமைப்ப... மேலும் பார்க்க

கலைச்சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்ற கலைஞா்களுக்கு பாராட்டு

காஞ்சிபுரம் பிள்ளையாா் பாளையத்தில் உள்ள அறிஞா் அண்ணா நினைவுப் பூங்காவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கலைச்சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்ற கலைஞா்களுக்கு மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் நினைவுப் பரிசு வழங்க... மேலும் பார்க்க

விமான பணிப்பெண் தற்கொலை!

குன்றத்தூா் அடுத்த திருமுடிவாக்கம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த விமான பணிப்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். குஜராத் மாநிலத்தைச் சோ்ந்தவா் அபிஷா வா்மா (24). குன்றத்... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் உடையாா்பாளையம் உற்சவம்!

அந்நியா்கள் படையெடுப்பின் போது உற்சவா் பெருமாளை பாதுகாப்பாக வைத்திருந்து, மீண்டும் கோயிலில் சோ்த்த உடையாா்பாளையம் ராஜாவின் அவதார தினத்தையொட்டி, பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் சனிக... மேலும் பார்க்க