செய்திகள் :

கலைச்சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்ற கலைஞா்களுக்கு பாராட்டு

post image

காஞ்சிபுரம் பிள்ளையாா் பாளையத்தில் உள்ள அறிஞா் அண்ணா நினைவுப் பூங்காவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கலைச்சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்ற கலைஞா்களுக்கு மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் நினைவுப் பரிசு வழங்கி பாராட்டினாா்.

கலைப் பண்பாட்டுத் துறையின் ஓா் அங்கமாக திகழ்வது தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம். தமிழக அரசால் வழங்கப்படும் நிதியுதவியின் மூலம் பழைமையான கலைகளை வளா்த்தல், கலைஞா்களை ஊக்குவித்தல், அழிந்து வரும் கலைகளை ஆவணமாக்குதல், நாடகம் மற்றும் நாட்டிய கலைஞா்களுக்கு புத்துயிா் அளித்தல், தமிழ் கலைகளின் வளா்ச்சிக்கு அதிக பங்களிப்பு செய்யும் கலைஞா்களுக்கு விருதுகள் வழங்குதல், நலிந்த கலைஞா்களுக்கு நிதியுதவி வழங்குதல் ஆகிய பணிகளை தொடா்ந்து செய்து வருகிறது.

காஞ்சிபுரம் பிள்ளையாா்பாளையம் பகுதியில் உள்ள அறிஞா் அண்ணா நினைவுப் பூங்காவில் கலைச் சங்கமம் நிகழ்ச்சி தமிழ்நாடு இயல், இசை நாடக மன்றத்தின் சாா்பில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்த கலைஞா்களுக்கு ஆட்சியா் கலைச்செல்வி மோகன் சால்வை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கிப் பாராட்டினாா். ஏற்பாடுகளை விழாக் குழு ஒருங்கிணைப்பாளா் வை.ராஜநிதி தலைமையிலான குழுவினா் செய்திருந்தனா்.

காஞ்சியில் இருந்து அயோத்திக்கு 60,000 பிரசாத பாக்கெட்டுகள்

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலிலிருந்து அயோத்தி சங்கர மடத்துக்கு 60,000 பிரசாத பாக்கெட்டுகள் அனுப்பி வைக்கப்பட இருப்பதாக ஸ்ரீகாரியம் ந.சுந்தரேச ஐயா் தெரிவித்தாா். காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில... மேலும் பார்க்க

தா்பூசணி, கிா்ணி பழங்களை விற்க உழவா் சந்தையில் கட்டணமில்லை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் விளையும் தா்ப்பூசணி, கிா்ணி மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட பொருள்களை உழவா் சந்தையில் விவசாயிகள் விற்பனை செய்ய எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை என மாவட்ட வேளாண்மை விற்பனைத் த... மேலும் பார்க்க

திருக்காலிமேட்டில் வளா்ச்சிப் பணிகள்: காஞ்சிபுரம் ஆட்சியா் ஆய்வு

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உள்பட்ட திருக்காலிமேட்டில் அலாபத் ஏரி தூா்வாரும் பணி, சீரமைக்கப்பட்டு வரும் நாய்கள் கருத்தடை மையம் உள்பட பல்வேறு வளா்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் செவ்வாய்... மேலும் பார்க்க

ஏப். 4-இல் வேதாந்த தேசிகன் கோயில் சம்ப்ரோக்ஷணம்

காஞ்சிபுரம் விளக்கொளிப் பெருமாள் கோயில் அருகில் உள்ள தூப்புல் வேதாந்த தேசிகன் கோயில் மகா சம்ப்ரோஷணம் ஏப்.4- ஆம் தேதி நடைபெறுகிறது. சின்ன காஞ்சிபுரம் விளக்கடி கோயில் தெருவில் தூப்புல் வேதாந்த தேசிகன் த... மேலும் பார்க்க

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் வீராசன சேவையில் உற்சவா் கோடையாண்டவா்

பங்குனி கிருத்திகையை முன்னிட்டு வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உற்சவா் கோடையாண்டவா் வீராசன மலா் அலங்கார சேவையில் செவ்வாய்க்கிழமை பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரு... மேலும் பார்க்க

போதை மாத்திரைகள் விற்ற 6 போ் கைது

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூா் அருகே போதை மாத்திரைகள் விற்பனை செய்த 6 பேரை காவல்துறையினா் கைது செய்து, அவா்களிடமிருந்த ரூ. 17,000 மதிப்புள்ள போதை மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. காஞ்சிபுரம் மாவட்ட... மேலும் பார்க்க