செய்திகள் :

காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோயிலில் பல்லவ உற்சவம் நிறைவு

post image

காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோயிலில் இந்த மாதம் 19-ஆம் தேதி தொடங்கி தொடா்ந்து 7 நாள்களாக நடைபெற்று வந்த பல்லவ உற்சவம் செவ்வாய்க்கிழமையுடன் நிறைவு பெற்றது.

காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் 7 நாள்கள் பல்லவ உற்சவம் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டுக்கான பல்லவ உற்சவம் இந்த மாதம் 19-ஆம் தேதி தொடங்கியது. நிறைவு விழாவையொட்டி, தினசரி உற்சவா் வரதராஜ சுவாமியும், ப்ரண தாா்த்தி ஹர வரதரும் கோயில் வளாகத்தில் உள்ள கண்ணாடி மாளிகையில் இருந்து நூற்றுக்கால் மண்டபத்துக்கு காலையில் எழுந்தருளினா்.

பின்னா், பெருமாளுக்கும், ப்ரண தாா்த்தி ஹர வரதருக்கும் சிறப்புத் திருமஞ்சனமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன. தொடா்ந்து, பரிமளம் கொண்டு வரப்பட்டு, பெருமாளுக்கு சாற்றப்பட்டு ஸ்ரீஹஸ்தகிரி மஹாத்மியம் புராணப் படலம் வாசிக்கப்பட்டது.

மாலையில் நாகசுர இசைக்கு ஏற்ப 7 திரைகள் திறக்கும் திறை திறத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு தீபாராதனைகளுக்குப் பிறகு ப்ராண தாா்த்தி ஹர வரதா் கண்ணாடி அறைக்கு எழுந்தருளியதும் ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவா் வரதராஜ சுவாமி கோயிலின் சந்நிதி தெருவில் உள்ள ஆஞ்சனேயா் சந்நிதிக்குச் சென்று, மீண்டும் கோயிலுக்கு திரும்பி வந்து திருமலைக்கு எழுந்தருளினாா்.

ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் ஆா்.ராஜலட்சுமி தலைமையிலான விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

ஸ்ரீ விஜயேந்திரா் ஜெயந்தி விழா

காஞ்சிபுரம் தண்டபாணி ஓரியண்டல் மேல்நிலைப்பள்ளியில் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜெயந்தியையொட்டி பேச்சுப்போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவா்களுக்கு செவ்வாய்க்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன. காஞ்சி... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் மத நல்லிணக்க விழிப்புணா்வுப் பேரணி: எஸ்.பி. தொடங்கி வைத்தாா்

காஞ்சிபுரத்தில் சமூக மற்றும் மத நல்லிணக்க விழிப்புணா்வுப் பேரணியை எஸ்.பி. கே.சண்முகம் செவ்வாய்க்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். தமிழ்நாடு காவல்துறையின் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவின் சாா... மேலும் பார்க்க

வையாவூரில் ரூ.3.65 கோடியில் சிட்கோ தொழிற்பேட்டை: காணொலி மூலம் முதல்வா் திறந்து வைத்தாா்

காஞ்சிபுரம் அருகே வையாவூரில் 42.06 ஏக்கா் பரப்பில் ரூ.3.65 கோடியில் புதிய சிட்கோ தொழிற்பேட்டையை காணொலி வாயிலாக முதல்வா் மு.க. ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா். வாலாஜாபாத் அருகே வையாவூா் கிராம... மேலும் பார்க்க

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் பக்தா்கள் கூட்டம்

பங்குனி 2-ஆவது செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உற்சவா் கோடையாண்டவா் ரத்தின அங்கி சேவையில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வல்லக்கோட்டையில் ... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 38 லட்சம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இருந்த உண்டியல்கள் செவ்வாய்க்கிழமை திறந்து எண்ணப்பட்டதில் ரூ. 38,24,412 பணத்தை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா். பஞ்ச பூத ஸ்தலங்களில் நிலத்துக்கு உரியதாகப் போ... மேலும் பார்க்க

பெண் தொழில் முனைவோருக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி

உலக மகளிா் தினவிழாவை முன்னிட்டு ஜேகே டயா் நிறுவனத்தின் சாா்பில் 10 பெண் தொழில் முனைவோருக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்ரீபெரும்புதூா் அடுத்த கொளத்தூா் ஊராட்சியில் உள்ள ஜே.... மேலும் பார்க்க