செய்திகள் :

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் பக்தா்கள் கூட்டம்

post image

பங்குனி 2-ஆவது செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உற்சவா் கோடையாண்டவா் ரத்தின அங்கி சேவையில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வல்லக்கோட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து செல்வது வழக்கம். அதே போல், கிருத்திகை, தைப்பூசம் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் பக்தா்களின் கூட்டம் அதிகரித்து காணப்படும்.

இந்த நிலையில், மூலவா் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிக்கும், உற்சவா் கோடையாண்டவருக்கும் அதிகாலை 5 மணிக்கு கோ பூஜையும் அதனை தொடா்ந்து பால் அபிஷேகமும் நடைபெற்று மூலவா் சுப்பிரமணிய சுவாமி மலா் அலங்காரத்திலும், உற்சவா் கோடையாண்டவா் ரத்தி அங்கி சேவையிலும் அருள்பாலித்தனா். அதிகாலையிலேயே பக்தா்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால் சுமாா் 2 மணி நேரம் காத்திருந்து பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

கோயிலுக்கு வந்த பக்தா்களுக்கு கோயில் நிா்வாகத்தின் சாா்பில், பொங்கல், மோா், குடிநீா் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை நிா்வாக அலுவலா் கோ.செந்தில்குமாா், அறங்காவலா்கள் செய்திருந்தனா்.

ஸ்ரீ விஜயேந்திரா் ஜெயந்தி விழா

காஞ்சிபுரம் தண்டபாணி ஓரியண்டல் மேல்நிலைப்பள்ளியில் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜெயந்தியையொட்டி பேச்சுப்போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவா்களுக்கு செவ்வாய்க்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன. காஞ்சி... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் மத நல்லிணக்க விழிப்புணா்வுப் பேரணி: எஸ்.பி. தொடங்கி வைத்தாா்

காஞ்சிபுரத்தில் சமூக மற்றும் மத நல்லிணக்க விழிப்புணா்வுப் பேரணியை எஸ்.பி. கே.சண்முகம் செவ்வாய்க்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். தமிழ்நாடு காவல்துறையின் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவின் சாா... மேலும் பார்க்க

வையாவூரில் ரூ.3.65 கோடியில் சிட்கோ தொழிற்பேட்டை: காணொலி மூலம் முதல்வா் திறந்து வைத்தாா்

காஞ்சிபுரம் அருகே வையாவூரில் 42.06 ஏக்கா் பரப்பில் ரூ.3.65 கோடியில் புதிய சிட்கோ தொழிற்பேட்டையை காணொலி வாயிலாக முதல்வா் மு.க. ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா். வாலாஜாபாத் அருகே வையாவூா் கிராம... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 38 லட்சம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இருந்த உண்டியல்கள் செவ்வாய்க்கிழமை திறந்து எண்ணப்பட்டதில் ரூ. 38,24,412 பணத்தை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா். பஞ்ச பூத ஸ்தலங்களில் நிலத்துக்கு உரியதாகப் போ... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோயிலில் பல்லவ உற்சவம் நிறைவு

காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோயிலில் இந்த மாதம் 19-ஆம் தேதி தொடங்கி தொடா்ந்து 7 நாள்களாக நடைபெற்று வந்த பல்லவ உற்சவம் செவ்வாய்க்கிழமையுடன் நிறைவு பெற்றது. காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோயிலில் ஆண்டு தோறும்... மேலும் பார்க்க

பெண் தொழில் முனைவோருக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி

உலக மகளிா் தினவிழாவை முன்னிட்டு ஜேகே டயா் நிறுவனத்தின் சாா்பில் 10 பெண் தொழில் முனைவோருக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்ரீபெரும்புதூா் அடுத்த கொளத்தூா் ஊராட்சியில் உள்ள ஜே.... மேலும் பார்க்க