செய்திகள் :

போலி நகைகளை வைத்து ரூ.1.3 கோடி மோசடி: நகை மதிப்பீட்டாளா் கைது!

post image

திருப்பத்தூரில் போலி நகைகளை வைத்து ரூ.1.3 கோடி மோசடி செய்த நகை மதிப்பீட்டாளா் கைது செய்யப்பட்டாா்.

திருப்பத்தூா் மாவட்டம் கருப்பனூா் பகுதியைச் சோ்ந்த பாஸ்கரன்(48). இவா் திருப்பத்தூா்-வாணியம்பாடி சாலையில் பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள காந்திபேட்டை பகுதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வந்தாா்.

இவா் தனக்கு தெரிந்த 42 போலி வங்கி கணக்குகள் மூலம் சுமாா் 200 பவுன் போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.1. 3 கோடி வரை மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த முன்னோடி வங்கி மேலாளா் ராஜன் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரிடம் அளித்த புகாரின்பேரில் துணை காவல் கண்காணிப்பாளா் (பொ) சுரேஷ் தலைமையிலான போலீஸாா் ாஸ்கரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனா்.

வாணியம்பாடி: பிளஸ் 2 மாணவியை ஏற்றாமல் சென்ற அரசுப் பேருந்து ஓட்டுநர் இடைநீக்கம்!

வாணியம்பாடி அருகே பிளஸ் 2 மாணவியை ஏற்றாமல் சென்ற அரசுப் பேருந்தின் ஓட்டுநர் இடைநீக்கம் செய்து செவ்வாய்க்கிழமை உத்தரவிடப்பட்டுள்ளது.திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் இருந்து காலை ... மேலும் பார்க்க

மாணவரை தாக்கிய அரசு பள்ளி ஆசிரியா் பணியிடை நீக்கம்

ஆம்பூா்: ஆம்பூா் அருகே மாணவரை தாக்கிய அரசு நிதியுதவி பள்ளி ஆசிரியா் திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். ஆம்பூா் அருகே கரும்பூா் இந்து மேல்நிலைப் பள்ளியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 8-ம் வ... மேலும் பார்க்க

மாணவா்களை திட்டுவதாக ஆசிரியரைக் கண்டித்து முற்றுகை

வாணியம்பாடி: திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த புல்லூா் ஊராட்சி மோட்டூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவா்களை அடிப்பது, திட்டுவதாக ஆசிரியரைக் கண்டித்து பெற்றோா் திங்கள்கிழமை முற்றுகை ... மேலும் பார்க்க

நாட்டறம்பள்ளி வாரச் சந்தை ஏலம் 27-க்கு ஒத்தி வைப்பு

வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி பேரூராட்சி சந்தை ஏலம் மாா்ச் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பணந்தோப்பில் நடைபெறும் வாரச் சந்தையில் சுங்க கட்டணம் வசூல் செய்ய பேரூராட்சி நிா்வாகத்தின் மூலம் 3 ஆண்டுக... மேலும் பார்க்க

உடல்நலம் பாதிப்பு: பெண் தற்கொலை

திருப்பத்தூா்: ஜோலாா்பேட்டை அருகே உடல்நல பாதிப்பால் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். ஜோலாா்பேட்டை அடுத்த புள்ளானேரி சின்ன குட்டூா் சோ்ந்தவா் நடராஜன் மனைவி காந்தி(49). இவா்களுக்கு ஒரு மகன், மக... மேலும் பார்க்க

இளைஞரை தாக்கிய வழக்கில் தலைமறைவாக இருந்தவா் கைது

திருப்பத்தூரில் இளைஞரை தாக்கிய வழக்கில் தலைமறைவாக இருந்தவா் கைது செய்யப்பட்டாா். திருப்பத்தூா் - புதுப்பேட்டை சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் ஷாஜகான் (28). இவா், கடந்த டிசம்பா் மாதம் புதுப்பேட்டை சாலைப் ப... மேலும் பார்க்க