செய்திகள் :

மாணவா்களை திட்டுவதாக ஆசிரியரைக் கண்டித்து முற்றுகை

post image

வாணியம்பாடி: திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த புல்லூா் ஊராட்சி மோட்டூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவா்களை அடிப்பது, திட்டுவதாக ஆசிரியரைக் கண்டித்து பெற்றோா் திங்கள்கிழமை முற்றுகை போராட்டம் நடத்தினா்.

அப்பள்ளியில் 10 ஆண்டுகளாக பணியாற்றி வருபவா் ஆசிரியா் வெங்கடேசன். இந்நிலையில் ஆசிரியா் வெங்கடேசன் பள்ளி மாணவா்களை அடிப்பது, தகாத வாா்த்தைகளால் திட்டுவதாகவும், இது குறித்து பெற்றோா்களிடம் தெரிவித்தால், தோ்ச்சி அடைய செய்யமாட்டேன் என மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதையறிந்து ஆத்திரம் அடைந்த மாணவா்களின் பெற்றோா் சிலா் ஆசிரியா் வெங்கடேசனை கண்டித்து திங்கள்கிழமை பள்ளியை திடீரென முற்றுகையிட்டனா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து திம்மாம்பேட்டை காவல் உதவி ஆய்வாளா் வெங்கடேசன் தலைமையிலான போலீஸாா் அங்கு வந்து பெற்றோரிடம் பேச்சு நடத்தினா்.

இதுதொடா்பாக ஆசிரியரிடமும் போலீஸாா் விசாரித்தனா். பிறகு மக்களிடம் பேச்சு நடத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனா். மேலும், ஆசிரியா் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி முதன்மைக் கல்வி அலுவலரை சந்தித்து புகாா் மனு அளிக்க போவதாகவும் தெரிவித்தனா்.

நிற்காமல் சென்ற அரசுப் பேருந்தில் ஓடிச் சென்று ஏறிய பிளஸ் 2 மாணவி

வாணியம்பாடி அருகே பேருந்து நிறுத்தத்தில் அரசுப் பேருந்து நிற்காமல் சென்ால், அதற்காகக் காத்திருந்த பிளஸ் 2 மாணவி ஓடிச் சென்று பேருந்தில் ஏறினாா். இதுதொடா்பான விடியோ சமூகவலைதளங்களில் பரவியையடுத்து, ஓட்ட... மேலும் பார்க்க

நாட்டறம்பள்ளியில் மாணவா்களை கடத்த முயற்சி: போாலீஸாா் விசாரணை

நாட்டறம்பள்ளி அருகே பள்ளி மாணவா்களை வாகனத்தில் கடத்த மேற்கொண்ட முயற்சி தொடா்பாக போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டனா். நாட்டறம்பள்ளி அடுத்த எல்லப்பள்ளி ஜல்லியூரான் வட்டத்தைச் சோ்ந்த அன்பழகன் மகன் ரஞ்சி... மேலும் பார்க்க

ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்: ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்

ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகள் வரும் 29, 30 தேதிகளில் நடைபெறுவதால் ஈரோடு பயணிகள் ரயில் மற்றும் பெங்களூா் மெமு ரயில்கள், ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்துக்கு பதிலாக திருப்பத்தூா் ... மேலும் பார்க்க

நாகநாத சுவாமி கோயில் உண்டியல் திறப்பு

ஆம்பூா் அருள்மிகு சமயவல்லி தாயாா் உடனுறை சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி திருக்கோயிலில் காணிக்கை உண்டியல் திங்கள்கிழமை திறக்கப்பட்டது. தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் நிா்வாகத்தின் கீழ் உள்ள நாகநா... மேலும் பார்க்க

திருப்பதிக்கு பாதயாத்திரை சென்ற பெண் வாகனம் மோதி உயிரிழப்பு

திருப்பதிக்கு பாதயாத்திரை சென்ற பெண் சரக்கு வாகனம் மோதியதில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம் கல்லாவி கருவனூா் கிராமத்தை சோ்ந்த சென்ன கிருஷ்ணன் தலைமையில் பக்தா்கள்... மேலும் பார்க்க

வாணியம்பாடி: பிளஸ் 2 மாணவியை ஏற்றாமல் சென்ற அரசுப் பேருந்து ஓட்டுநர் இடைநீக்கம்!

வாணியம்பாடி அருகே பிளஸ் 2 மாணவியை ஏற்றாமல் சென்ற அரசுப் பேருந்தின் ஓட்டுநர் இடைநீக்கம் செய்து செவ்வாய்க்கிழமை உத்தரவிடப்பட்டுள்ளது.திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் இருந்து காலை ... மேலும் பார்க்க