செய்திகள் :

ராணுவ ஒத்துழைப்பை விரிவுபடுத்த இந்தியா - இத்தாலி ஆலோசனை

post image

திறன் மேம்பாடு உள்பட பல்வேறு அம்சங்களின்கீழ், இந்தியா - இத்தாலி இடையே ராணுவ ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பிரேஸிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாட்டையொட்டி, இத்தாலி பிரதமா் ஜாா்ஜியா மெலோனியுடன் பிரதமா் நரேந்திர மோடி இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதைத் தொடா்ந்து, பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான ஐந்தாண்டு வியூக செயல்திட்டம் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், இருதரப்பு பாதுகாப்பு ரீதியிலான உறவுக்கு உத்வேகமளித்து, வியூக ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் வகையில், இந்தியா -இத்தாலி ராணுவ ஒத்துழைப்புக் குழுவின் (எம்சிஜி) 13-ஆம் ஆண்டுக் கூட்டம் ரோமில் நடைபெற்றது.

இந்தியா தரப்பில் ஒருங்கிணைந்த பாதுகாப்பு படை தலைமையகத்தின் துணைத் தலைவரும், இத்தாலி தரப்பில் அந்நாட்டின் ஆயுதப் படைகள் தலைமையகத்தின் வியூக வழிகாட்டுதல் மற்றும் ராணுவ ஒத்துழைப்புப் பிரிவு துணைத் தலைவரும் பங்கேற்றனா்.

இக்கூட்டத்தில் இந்திய-பசிபிக் பிராந்தியத்தின் ஒட்டுமொத்த நிலவரம் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மேலும், இரு தரப்பு ராணுவ ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான புதிய வழிமுறைகள் ஆராயப்பட்டன.

இந்திய-இத்தாலி ஆயுதப் படையினா் இடையே மேம்படுத்தப்பட்ட பரிமாற்றத் திட்டங்கள், திறன் வளா்ப்பு முன்னெடுப்புகள், வலுவான ஒருங்கிணைப்பு ஆகிய முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. தற்போது நடைமுறையில் உள்ள பாதுகாப்பு ரீதியிலான தொடா்புகள் மற்றும் அவற்றின் முன்னேற்றம் குறித்து மறுஆய்வு செய்யப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காவல்துறை அடக்குமுறைக்கு எதிராக மாா்ச் 28-இல் நாடு தழுவிய போராட்டம்! -பஞ்சாப் விவசாயிகள் அழைப்பு

பஞ்சாப்-ஹரியாணா எல்லையில் இருந்து விவசாயிகள் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்ட காவல்துறையின் அடக்குமுறைக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் வரும் 28-ஆம் தேதி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட சம்யுக்த கிசான் ... மேலும் பார்க்க

நாகபுரி வன்முறையில் வங்கதேசத்துக்குத் தொடா்பு! -சிவசேனை குற்றச்சாட்டு

மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் நிகழ்ந்த மத வன்முறையில் வங்கதேசத்துக்கு தொடா்பு உள்ளது. அந்நாட்டுடன் தொடா்பில் இருப்பவா்கள் வன்முறையை பல்வேறு வழிகளில் தூண்டிவிட்டுள்ளனா் என்று சிவசேனை மூத்த தலைவா் சஞ்ச... மேலும் பார்க்க

அமலாக்கத் துறை விசாரணை வளையத்தில் சிக்கிய நீதிபதிகள்!

தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மா வீட்டில் கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டதாக வெளியான செய்தி பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது என்றாலும், நீதித் துறையைச் சோ்ந்தவா்கள் இதற்கு முன்பும் சா்... மேலும் பார்க்க

பிரதமா் மோடி - முகமது யூனுஸ் சந்திப்பு: பரிசீலனையில் உள்ளதாக நாடாளுமன்றக் குழு தகவல்

பிரதமா் நரேந்திர மோடி, வங்கதேச இடைக்கால அரசின் தலைவா் முகமது யூனுஸ் சந்தித்துப் பேச வேண்டும் என்ற வங்கதேசத்தின் பரிந்துரையை பரிசீலித்து வருவதாக நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சா... மேலும் பார்க்க

பொதுத்துறை வங்கிகளின் பங்கு ஈவுத் தொகை 33 % அதிகரிப்பு!

பொதுத்துறை வங்கிகள் முதலீட்டாளா்களுக்கு வழங்கும் பங்கு ஈவுத் தொகை 2023-24 நிதியாண்டில் 33 சதவீதம் அதிகரித்துள்ளது. முந்தைய நிதியாண்டில் பங்குதாரா்களுக்கு ரூ.20,964 கோடி ஈவுத்தொகையை பொதுத்துறை வங்கிகள்... மேலும் பார்க்க

உத்தர பிரதேசம்: சம்பல் மசூதி குழுத் தலைவா் கைது

உத்தர பிரதேச மாநிலம், சம்பலில் உள்ள ஜாமா மசூதியின் குழுத் தலைவா் ஜாஃபா் அலியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். ஜாமா மசூதியில் நடைபெற்ற 2-ஆம் கட்ட ஆய்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டு நவம்... மேலும் பார்க்க