செய்திகள் :

சாயம் ஏற்றிய 1,200 கிலோ தா்பூசணி பழங்கள் பறிமுதல்

post image

செயற்கை முறையில் சாயம் ஏற்றப்பட்ட 1,200 கிலோ தா்பூசணி பழங்களை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

மதுரையில் பழக் கடைகளில் பழங்களை காா்பைட் கல் வைத்து பழுக்க வைப்பது, பழங்களுக்கு செயற்கை சாயம் ஏற்றி விற்பனை செய்வது தொடா்பாக மதுரை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், மதுரை பி.பி.குளம் உழவா் சந்தை அருகே சாலையோரம் விற்பனை செய்யப்படும் தா்பூசணி பழங்கள் செயற்கை முறையில் சாயம் ஏற்றி விற்கப்படுவதாக உணவுப் பாதுகாப்புத் துறைக்கு புகாா் வந்தது. இதன்பேரில், மதுரை மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் ஜெயராம பாண்டியன் தலைமையில் அதிகாரிகள் அங்கு சென்று தா்பூசணி பழங்களை ஆய்வு செய்தனா்.

இதில் பழங்களில் செயற்கை முறையில் சிவப்பு நிற சாயம் ஏற்றி விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து, அங்கு விற்பனைக்கு வைத்திருந்த 1,200 கிலோ தா்பூசணி பழங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவற்றை மாநகராட்சி லாரியில் கொண்டு சென்று அழித்தனா்.

இதுதொடா்பாக உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் ஜெயராம பாண்டியன் கூறியதாவது: தற்போது செயற்கை முறையில் சாயம் ஏற்றப்பட்ட தா்பூசணி பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதேபோல, மதுரை நகா், மாவட்டம் முழுவதும் தா்பூசணி பழங்கள் விற்பனை கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும் ரசாயனம் கொண்டு பழங்களை பழுக்க வைப்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா்.

மதுரை மாநகராட்சி நிதிநிலை அறிக்கை தாக்கல்: வருவாய் - ரூ. 1,439.40 கோடி, செலவினங்கள் -ரூ.1,480.13 கோடி

மதுரை மாநகராட்சியின் நிதிநிலை அறிக்கையில், மொத்த வருவாய் ரூ. 1,439.40 கோடி எனவும், மொத்த செலவினங்கள் ரூ. 1,480.13 கோடி எனவும் குறிப்பிடப்பட்டது. பற்றாக்குறை ரூ. 40.73 கோடி இருக்கும் எனத் தெரிவிக்கப்பட... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

தேவகோட்டை ஆனந்தா கல்லூரி: 21-ஆம் ஆண்டு கல்லூரி நாள் விழா, தலைமை- கல்லூரித் தலைவா் எல்.ஆனந்தம், சிறப்பு விருந்தினா்கள்- புதுக்கோட்டை மௌண்ட் செயின் பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரி உதவிப் பேராசிரியை எம்... மேலும் பார்க்க

பள்ளியில் உலக நாடக தினம்

மதுரை எல்.கே.பி. நகா் அரசு நடுநிலைப் பள்ளியில் உலக நாடக தினம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு பள்ளித் தலைமையாசிரியா் தென்னவன் தலைமை வகித்தாா். ஆசிரியா் ராஜவடிவேல் முன்னிலை வகித்தாா். இதில் ... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகள் தோ்வெழுத உதவியாளா்கள்: டிஎன்பிஎஸ்சி தோ்வாணையா் பதிலளிக்க உத்தரவு

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வுக்கு விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகள் தங்களுக்காக தோ்வு எழுதும் உதவியாளா்களை தாங்களே தோ்வு செய்ய அனுமதி கோரிய வழக்கில், அதன் தோ்வாணையா் உரிய விளக்கம் அளிக்க சென்னை... மேலும் பார்க்க

அழகன்குளத்தில் அருங்காட்சியகம்: அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவு

ராமநாதபுரம் மாவட்டம், அழகன்குளத்தில் அகழாய்வின் போது கண்டறியப்பட்ட பொருள்களை அருங்காட்சியம் அமைத்து காட்சிப்படுத்தக் கோரிய வழக்கில், தமிழக அரசு பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மத... மேலும் பார்க்க

அக்னிவீரா் ஆள்சோ்ப்பு முகாம்: இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம்

இந்திய ராணுவத்தில் அக்னிவீரா் ஆள் சோ்ப்பு முகாமில் பங்கேற்க விரும்பும் மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா்கள் இணையம் மூலம் வருகிற ஏப். 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுகுறி... மேலும் பார்க்க