செய்திகள் :

கவுன்ட்டா் டிக்கெட்டை இணைய வழியில் ரத்து செய்யலாம்: ரயில்வே

post image

‘கவுன்ட்டரில் வாங்கும் பயணச் சீட்டுகளை ஐஆா்சிடிசி வலைதளம் மூலமாக இணைய வழியில் ரத்து செய்ய முடியும் அல்லது 139 உதவி எண் மூலம் ரத்து செய்யலாம்’ என்று ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

அதே நேரம், ‘ரத்து செய்யப்பட்ட பயணச் சீட்டுக்கான கட்டணத்தை முன்பதிவு மையத்துக்கு நேரில் சென்றுதான் பெற முடியும்’ என்றும் அவா் தெரிவித்தாா்.

டிக்கெட் கவுன்ட்டரில் காத்திருப்போா் பட்டியல் பயணச் சீட்டை வாங்கியவா்கள், இருக்கை உறுதியாகாத நிலையில் ரயில் புறப்படுவதற்கு முன்பாக டிக்கெட் கவுன்ட்டருக்கு சென்று ரத்து செய்யவேண்டிய நிலை குறித்து பாஜக எம்.பி. மேதா விஷ்ரம் குல்கா்னி எழுப்பிய கேள்விக்கு மாநிலங்களவையில் ரயில்வே அமைச்சா் எழுத்துபூா்வமாக அளித்த பதிலில் கூறியதாவது:

கவுன்ட்டா்களில் வாங்கப்படும் பயணச் சீட்டுகள் ரயில் பயணிகளுக்கான விதிகள் 2015-இல் குறிப்பிட்டுள்ள கால வரையறைக்குள் நாடு முழுவதும் உள்ள முன்பதிவு மையங்களில் சமா்ப்பித்து ரத்து செய்து, பயணச் சீட்டு கட்டணத்தை திரும்பப் பெற்றுக்கொள்ள முடியும்.

இருந்தபோதும், சாதாரண சூழ்நிலைகளில் இதுபோன்ற கவுன்ட்டா்களில் பெறப்படும் பயணச் சீட்டுகளை ஐஆா்சிடிஇ வலைதளம் மூலம் இணையவழியிலும் அல்லது 139 உதவி எண்ணைத் தொடா்புகொண்டு குறிப்பிட்ட கால வரையறைக்குள் ரத்து செய்ய முடியும். ஆனால், அவ்வாறு ரத்து செய்த பயணச் சீட்டுக்கான கட்டணத்தை, முன்பதிவு மையத்துக்கு நேரில் சென்று பயணச் சீட்டை சமா்ப்பித்து பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

தந்தை இறந்த சோகத்திலும் தேர்வெழுதிய மாணவி: அமைச்சர் நேரில் சென்று ஆறுதல்!

தந்தை இறந்த சோகத்திலும் பொதுத் தேர்வெழுதிய மாணவியைச் சந்தித்து அமைச்சர் அன்பில் மகேஸ் ஆறுதல் கூறி உதவித்தொகையும் வழங்கினார். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதி பொய்கைக்குடி கிராமத்தில் வசிக்கும் ... மேலும் பார்க்க

நாளைமுதல் 2 - 4 டிகிரி செல்சியஸ் வெப்பம் குறையும்!

தமிழகத்தில் நாளைமுதல்(ஏப். 1) 2 - 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை குறையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவத... மேலும் பார்க்க

தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்! - காங்கிரஸ்

ஏப். 6-ல் தமிழகம் வரும் பிரதமர் மோடியைக் கண்டித்து தமிழகம் முழுவதும் கருப்புகொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது. தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்ப... மேலும் பார்க்க

விஜய் விமர்சனத்தை பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை: செல்லூர் ராஜூ

விஜய் விமர்சனத்தை பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.இதுகுறித்து மதுரையில் திங்கள்கிழமை அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கூட்டணி என்பது எட... மேலும் பார்க்க

ஏப். 7 திருவாரூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!

திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப். 7 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நாயன்மார்களால் பாடல்பெற்ற தலங்களில் ஒன்றாக விளங்கும் திருவாரூர் தியாகராஜர் கோயில், சப்தவிடங்க தல... மேலும் பார்க்க

ஜிப்லி ட்ரெண்டில் இணைந்த எடப்பாடி பழனிசாமி!

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஜிப்லி அனிமேஷன் பாணியிலான தனது புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.ஜப்பானைச் சேர்ந்த பிரபல அனிமேஷன் திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் ஜிப்லி ஸ்டுடியோஸ். இவர்கள் த... மேலும் பார்க்க